aishwarya rajesh

என் கூடவே இருந்துக்கிட்டு இந்த வேலையை பார்த்துட்டான்.! புலம்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உனக்கு நடிகையாக நடிப்பதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை பலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் தளராமல் தனது கடின உழைப்பினால் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவரை பொதுவாக அனைவரும் கருப்பு பேரழகி என்று கூறுவார்கள்.

இவர் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் அதிலும் முக்கியமாக காக்காமுட்டை திரை படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவைப் போல் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் எனது நான் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் இவ்வாறு மேலும் தனது சிறந்த நடிப்பை நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

இவர் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் நடனம் ஆடுவதும், தொகுப்பாளியாகவும்தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சொல்லப்போனால் இவர் நிகழ்ச்சியின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியிருந்தார் அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்த ஒருவர் ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் பற்றி பல விஷயங்களை கூறுவதும் லாக்கர் நம்பர்களை கூறுவதும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த விஷயம் ஒன்றரை வருடங்கள் கழித்துதான் ஐஸ்வர்யா ராஜேஷ் இது தெரியவந்தது பல அவர் மீது வழக்கு தொடருங்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கூறினார்களாம் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறி அவரை விட்டு விட்டாராம் இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான நடந்தது போல் வேறு யாரும் ஏமாற கூடாது என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் இதனை பார்த்த பலர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார்கள்.

Chithu-VJ

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் நடனம் மற்றும் குறும்புத்தனமாக கலாய்க்கும் வீடியோ!! வைரலாகி வருகிறது.

VJ Chitra dance and fun video: VJ சித்ரா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து. அதன்பிறகு டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டார். இவர் செல்லமாக சித்து என்று அனைவராலும் அழைக்கப்படுவார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே. பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலை இவரை பார்ப்பதற்காகவே பலர் பார்க்கின்றனர். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது ரசிகர்கள் இவருக்கு அடிக்கடி ஏதேனும் கிப்ட் அனுப்பிவைத்து இவரை சந்தோச படுத்துவார்கள் அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவிப்பார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுவாகவே சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன்மூலம் வெள்ளிதிரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சீரியல் நடிகை VJ சித்ரா அவர்கள் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவார்.

அந்த வகையில் இவர் தற்போது ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்திலிருந்து வாடா வாடா பையா என்ற பாடலுக்கு இரண்டு ஆண்களுடன் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

rajalakshmi

மார்டன் உடையில் செம்ம சூப்பராக உலாவந்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.! வைரலாகும் வீடியோ.

super singer rajalakshmi video: விஜய் டிவி தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் மூலம் பல சிங்கர்கள் அறிமுகமானார்கள்.

அந்த வகையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பிரபலமடைந்த தம்பதியர்கள் தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். தனது பாடல் திறமையினால் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஒன்றில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவர்கள் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். தற்பொழுது வரை எங்களுக்குள் சண்டை என்ற ஒன்று நடந்ததே இல்லை.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவிற்கு வளைகாப்பு நடந்தது அதற்கு கூட செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் சென்றிருந்தார்கள்.

இவ்வாறு சின்னத்திரையில் பிசியாக இருந்த வரும் இவர்கள் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் சம்பியன் ஆஃ சம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள் அதில் எப்பொழுதும் கிராமத்துப் பெண்ணைப் போல புடவையில் வரும் ராஜலட்சுமி திடீரென்று மாடன் உடையில் மேடைக்கு வந்ததை பார்த்த நடுவர்கள் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.

இந்தநிலையில் அப்போது நடுவர்களின் ரியாக்ஷனை எக்ஸ் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கள். இதோ அந்த வீடியோ.