thenral-vanthu-yennai-thotum-243

முட்டாளா இருந்துகிட்டு நீ எல்லாம் ஒரு கலெக்டர்.! அபி செய்த கேவலமான செயலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெற்றி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அபி, வெற்றி இருவரும் நடுக்கடலில் போட்டியில் சிக்கிக் கொண்டுள்ளனர் எனவே இவர்களை யார் காப்பாற்றுவார்கள் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அபி மூளை இல்லாமல் செய்து வரும் செயல்களைப் பார்த்து வெற்றி கடுப்பாகி உள்ளார்.

அதாவது அபி தொடர்ந்து பல எதிரிகளுக்கு எதிராக போராடி வந்த நிலையில் இவரை பழிவாங்க வேண்டும் என பலரும் முயற்சித்து வந்தனர் எனவே அபியின் உயிருக்கு ஆபத்து இருப்பதனால் பல போலீஸ்கள் காவலுக்கு போட்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அனைத்து போலீஸ்சைம் அடித்து விட்டு ரவுடிகள் அபியை கடத்தி செல்கிறார்கள்.

நடுகடலில் போட்டியில் அழைத்துச் செல்ல இதனைத் தெரிந்து கொண்ட வெற்றி விரைந்து வந்து அபியை காப்பாற்ற முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் ரவுடிகள் அபியை தூக்கி நடு கடலில் வீசி விடுகிறார்கள். எனவே அபியை காப்பாற்றுவதற்காக வெற்றியும் கடலில் குதித்து விடுகிறார். ஒரு வழியாக அபியை காப்பாற்றிய நிலையில் இவர்கள் செல்லும் போட்டில் இருந்த டீசல் தீர்ந்து விடுகிறது.

எனவே நடு கடலில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை இருக்கிறது எனவே அதனை வைத்து ஒரு வாரத்திற்கு வைத்துக் கொண்டாலும் விரைவில் போலீஸ் அவர்களை மீட்டு விடுவார்கள் என நினைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிக்கு தெரியாமல் அபி குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை வைத்து குளித்து விடுகிறார் எப்படி இவ்வளவு பிரஷ்ஷா இருக்கா என வெற்றி கேட்க அதனால் தான் குளித்தேன் கொஞ்சம் தண்ணி இருக்குனு சொன்னில அதை வைத்து குளித்து விட்டேன் என கூறியவுடன் வெற்றிக்கு அதிர்ச்சி ஆகிறது.

உனக்கு எல்லாம் அறிவு இல்லையா நம்ப இந்த போட்ல இருக்கிற வரையும் தண்ணீர் தான் நமக்கு ரொம்பவும் முக்கியம் அதை வச்சு குளிச்சிட்டியே என கூறுகிறார். அதற்கு அபி போலீஸ் வந்து நம்மளை சீக்கிரம் மீட்டு விடும் எனக் கூற உன்னை காப்பாத்துனது நான்தான் போலீஸ்லாம் வராது என சொல்ல நீ எல்லாம் எப்படி கலெக்டர் ஆனாயோ தெரியல என கூறி திட்டிகிறார் இதோ அந்த ப்ரோமோ..

thenral-vanthu-yennai-thotum

தன்னந்தனியாக நடுகடலில் மாட்டிக் கொண்ட வெற்றி, அபி.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் அபி தொடர்ந்து பல குற்றங்களை கண்டுபிடித்து பலரையும் தண்டித்து வருகிறார் எனவே அபிக்கு ஏராளமான எதிரிகள் இருந்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போதை சாக்லேட் தயாரிக்கும் ஃபேக்ட்ரியை மூடியதோடு மட்டுமல்லாமல் அதனுடைய ஓனரையும் கண்டித்து தக்க தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். எனவே அபி எப்படியாவது பழி வாங்க வேண்டும் என நினைத்து வருகின்றனர் அப்படி தற்பொழுது வீடு புகுந்து அபியை கடத்தி இருக்கும் நிலையில் வெற்றி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதாவது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றியை தனது நண்பர்களிடம் அபி போத சாக்லேட் விஷயத்துல அவளோட துணிச்சலை பார்த்தோம்ல ஆனா இந்த விஷயத்துல அவளோட துணிச்சல் வேற அளவு சித்தப்பு ஆன் தி ஸ்பாட்ல வெள்ளராஜாவையே தூக்கிட்டானா பாரேன் என கூறி அதற்க்கு அவர் நண்பர் அபி வெலனு வந்துட்டா வெள்ளைக்காரன் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் சுடர் வெற்றிக்கு போன் செய்து அபியை தூக்கிக்கிட்டு போயிட்டாங்க மாஸ்க் போட்டுட்டு வந்து எல்லா போலீசையும் அடிச்சிட்டாங்க என கூறுகிறார் எனவே நான் உடனே வருவதாக சொல்லிவிட்டு வெற்றி கிளம்புகிறார். அபியை கடத்தி கடலிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

வெற்றியும் அபியை கண்டுபிடித்து செல்லும் நிலையில் அவர் எதிரிகளால் கடலில் காடத்தி செல்வதை தெரிந்துகொண்டு வெற்றியும் ஒரு கப்பலை எடுத்துக்கொண்டு செல்கிறார் அங்கு வெற்றி வருவதை தெரிந்து கொண்ட எதிரிகள் அபியை தூக்கி நடுக்கடலில் போட்டு விடுகின்றனர்.

வெற்றி தண்ணீரில் குதித்து அபியை காப்பாற்றி விட இருவரும் தனியாக போட்டில் இருந்து வருகிறார்கள் இந்த நேரத்தில் போட்டில் இருந்து டீசல் தீர்ந்து விடுவதால் நடுகடலில் நின்று விடுகிறது. எனவே இதற்கு மேல் இவர்கள் எப்படி இந்த கடலில் இருந்து தப்பிப்பார்கள் என்பது குறித்த எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

thenral vanthu yennai thotum

உண்மையை தெரிந்துக் கொண்ட வெற்றியை சூழ்ச்சியினால் ஏமாற்றிய கண்மணி.! சுடர் பாப்பாவின் நிலைமை என்ன.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் வெற்றி கோவிலில் பிரச்சனை செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அபி அதனை தட்டி கேட்பதற்காக செல்கிறார் உடனே கோபத்தில் வெற்றி அபியின் கழுத்தில் தாலியை கட்டிவிட பிடிவாதமாக வீட்டில் வந்து தங்கி இருக்கிறார்.

சில காலங்கள் கழித்து வெற்றி அபியை ஏற்றுக்கொண்ட நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் வெற்றியும் தன்னுடைய ரவுடித்தனத்தை விட்டு விட்டு அபிக்காக முழுவதுமாக மாறுகிறார் இந்த நேரத்தில் சில பிரச்சனைகளால் அபி தன் கருவை கலைத்து விட்டதாக கூற கோபத்தில் வெற்றி அபியை விட்டு பிரிந்து விடுகிறார்.

மேலும் அபி கலெக்டர் ஆனது போலவும் வெற்றிக்கு தெரியாமல் வெற்றிக்கும் தனக்கும் பிறந்த மகளை அபி வளர்த்து வருவது போலவும் கதை முற்றிலும் மாறுபட்டு ஒளிபரப்பானது. பிறகு ஒரு விபத்தின் பொழுது வெற்றி சுடர் இருவரும் பழகி வரும் நிலையில் சுடர்தான் தன்னுடைய மகள் என வெற்றிக்கும், வெற்றிதான் தன்னுடைய அப்பா என சுடர்க்கும் தெரியாது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சுடர் மருத்துவமனையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையில் இவரைப் பார்ப்பதற்காக வெற்றி வருகிறார் பிறகு மருத்துவர் சுடர்தான் கலட்டரின் மகள் எனக் கூற உடனே சுடர்தான் தனது மகள் என்பதை தெரிந்துக் கொண்ட வெற்றி கதறி என்னுடைய குழந்தை உயிருடன் தான் இருக்கிறதா என அழுகிறார்.

பிறகு சுடர் அபிக்கு பிறந்த குழந்தைதான் ஆனால் உனக்கு பிறந்த குழந்தை இல்லை என அவருடைய நண்பர் கூற பிறகு தருண் அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார் உடனே அவரை கட்டிப்பிடித்து அபி அழ பிறகு இதனை பார்த்துவிட்டு வெற்றி அங்கிருந்து செல்கிறார். மேலும் வெற்றிக்கு சுடர்தான் தன்னுடைய மகள் என தெரியக்கூடாது என்பதற்காக  கண்மணி கேரக்டரில் நடித்து வரும் ஜூலி தருண் அபிக்கு திருமணம் ஆனது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து காண்பிக்க பிறகு வெற்றியும் இதனை நம்பி விடுகிறார்.

thental vanthu yennai thotum

சுடர் தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை தெரிந்துக் கொண்ட வெற்றி.! சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியல் நடிகர் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக நடிகை பவித்ரா அபி என்ற கதாபாத்திரத்தில் கலெக்டராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு முறை கோவிலில் சாமி கும்பிட சென்ற பொழுது அங்கு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் வெற்றியை தட்டி கேட்கிறார் அபி. அந்த நேரத்தில் வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் அதன் பிறகு வெற்றி மாறி தன்னுடைய மனைவி அபிக்காக வேலை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறார். பிறகு இவ்வாறு ஓடிக் கொண்டிருந்த சீரியலில் திடீரென திருப்பம் ஏற்பட்டது.

அந்த வகையில் அபி கலெக்டராக மாறி இருப்பதாகவும் கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சம்பவத்தின் பொழுது வெற்றியும் சுடரும் சந்தித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வர இதுதான் தன்னுடைய மகள் என தெரியாமல் வெற்றி சுடரின் மீது பாசத்தை வைத்து வருகிறார்.

அதேபோல் சுடருக்கும் வெற்றிதான் தன்னுடைய அப்பா என தெரியவில்லை அபி மாசமாக இருக்கும் பொழுது கருவை கலைத்து விட்டதாக கூறிய நிலையில் இதனால் அபியை வெறுத்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் சுடர்தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை வெற்றி தெரிந்துக் கொள்கிறார். எனவே என் பிள்ளை உயிருடன் தான் இருக்கிறதா என சொல்லி உடைந்து போய் கதறி அழுகிறார் அது குறித்த ப்ரோமோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அதாவது அபி தன்னுடைய மகள் சுடருடன் காரில் சென்று கொண்டிருக்க அங்கு வேண்டும் என்று அபியை கொலை செய்வதற்காக லாரி ஒன்று காரை மோதுகிறது. இதனால் அபிக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும் சுடரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் சுடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை தெரிந்துக் கொண்ட வெற்றி மருத்துவமனைக்கு வருகிறார். அதன் பிறகு போலீஸ் மூலம் சுடர் தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை வெற்றி தெரிந்துக் கொள்ள அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.