‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் இருந்து விலகி விட்டாரா நடிகர் வினோத் பாபு.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலில் வெற்றி காதாபாத்திரத்தில் வினோத் பாபுவும், அபி கேரக்டரில் பவித்ரா ஜனனி நடித்து வருகிறார்கள்.

இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்பொழுது இந்த சீரியலில் அபி, வெற்றி இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அபி கலெக்டராக இருந்து வருகிறார்.

எனவே தொடர்ந்து குற்றங்களுக்கு எதிராக பல முயற்சிகளை செய்து வரும் குற்றவாளிகளை தண்டிக்கிறார் எனவே இதனால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் அபியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கடத்தி செல்கிறார்கள் கடலுக்குள் சென்று தூக்கி வீசி விட இதனை தெரிந்துக் கொண்டு பின் தொடர்ந்த வெற்றி அபியை காப்பாற்றுகிறார்.

பிறகு சில காலங்களாக கடலில் இருந்து வந்த நிலையில் தற்போது தான் இருவரும் மீண்டு வந்துள்ளனர். இவ்வாறு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இருந்து நடிகர் வினோத் பாபு விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது எனவே ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

vinoth babu 1
vinoth babu 1

இது பொய்யான தகவல் என விளக்கம் அளித்துள்ளார் வினோத் பாபு அவர் கூறியதாவது, ஒரே ஒரு ஷார்ட் பிலிம் தான் நடிக்கப் போனேன் அதற்குள் இவ்வளவா தெய்வமே.. நான் எங்கேயும் போகல.. TVET ல தான் இருக்கேன், இருப்பேன் என கூறியுள்ளார். இவ்வாறு வினோத் பாபு கூறி பிறகுதான் அவர் சீரியலில் இருந்து விலகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Leave a Comment