ரொமான்ஸில் விஜய் சேதுபதியின் கருப்பன் திரைப்படத்தை காப்பி அடித்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.! அபி கொஞ்சம் ஓவரா தான் பண்றீங்க..

விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலில் தற்பொழுது தனது குடும்பத்தை எதிர்த்து வெற்றி மற்றும் அபி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு தங்கையிடம் இல்லாத காரணத்தினால் இவர்களை அண்ணாச்சி அழைத்து சென்று தனது வீட்டில் வைத்திருக்கிறார். மேலும் அங்கு இவர்களுக்கு தடபுடலான விருந்து வைத்த நிலையில் முதலிரவுக்கும் தயார் செய்து இருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றி திருமணம் செய்த இந்த ராதா வெற்றியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தனக்கு தெரிந்த ஆட்டோக்காரர்களை வைத்து வெற்றியை தேடி வருகிறார். மேலும் சில ரவுடிகளும் வெற்றியைத் தேடி வருகின்றன.

எனவே வெற்றியை வேறு இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள். வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது ஆட்டோக்காரர்கள் மற்றும் அந்த ரவுடிகள் அபி மற்றும் வெற்றியை அவர்களை துரத்துகிறார்கள்.

ஆனால் வெற்றி எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த கிராமத்திற்கு சென்று விடுகிறார். அங்கு சென்றதும் அங்கு இருப்பவர்கள் வெற்றி மற்றும் அபியை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். பிறகு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு தயார் செய்கிறார்கள்.

அப்பொழுது அபி கால் வலிக்குது என்று கூற வெற்றி அபிக்கு காலை பிடித்து விடுகிறார். அதற்கு அபி புருஷங்களா இப்படி தான் வேலையாக நான் பொண்டாட்டி காலை பிடித்து விடுவார்கள். எப்படியோ உன்னை என் காலை பிடிக்க வச்சுட்டேன் பாத்தில என்று கூறுகிறார்.

அதற்கு வெற்றி ஹீரோவாகுறவன காமெடியன் ஆகிட்டு இருக்கியா இப்போ பாரு வில்லனாகுறன் கூறிவிட்டு அபியை துரத்துகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் கருப்பன் ரேஞ்சுக்கு பண்ணாதீங்க என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment