சுடர் தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை தெரிந்துக் கொண்ட வெற்றி.! சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியல் நடிகர் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக நடிகை பவித்ரா அபி என்ற கதாபாத்திரத்தில் கலெக்டராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு முறை கோவிலில் சாமி கும்பிட சென்ற பொழுது அங்கு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் வெற்றியை தட்டி கேட்கிறார் அபி. அந்த நேரத்தில் வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் அதன் பிறகு வெற்றி மாறி தன்னுடைய மனைவி அபிக்காக வேலை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறார். பிறகு இவ்வாறு ஓடிக் கொண்டிருந்த சீரியலில் திடீரென திருப்பம் ஏற்பட்டது.

அந்த வகையில் அபி கலெக்டராக மாறி இருப்பதாகவும் கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சம்பவத்தின் பொழுது வெற்றியும் சுடரும் சந்தித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வர இதுதான் தன்னுடைய மகள் என தெரியாமல் வெற்றி சுடரின் மீது பாசத்தை வைத்து வருகிறார்.

அதேபோல் சுடருக்கும் வெற்றிதான் தன்னுடைய அப்பா என தெரியவில்லை அபி மாசமாக இருக்கும் பொழுது கருவை கலைத்து விட்டதாக கூறிய நிலையில் இதனால் அபியை வெறுத்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் சுடர்தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை வெற்றி தெரிந்துக் கொள்கிறார். எனவே என் பிள்ளை உயிருடன் தான் இருக்கிறதா என சொல்லி உடைந்து போய் கதறி அழுகிறார் அது குறித்த ப்ரோமோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அதாவது அபி தன்னுடைய மகள் சுடருடன் காரில் சென்று கொண்டிருக்க அங்கு வேண்டும் என்று அபியை கொலை செய்வதற்காக லாரி ஒன்று காரை மோதுகிறது. இதனால் அபிக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும் சுடரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் சுடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை தெரிந்துக் கொண்ட வெற்றி மருத்துவமனைக்கு வருகிறார். அதன் பிறகு போலீஸ் மூலம் சுடர் தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை வெற்றி தெரிந்துக் கொள்ள அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Leave a Comment