விருந்துடன் முதலிரவை கோலகாலமாக கொண்டாடும் அபி-வெற்றி.! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் இன்றைய எபிசோட்..

விஜய் டிவியில் மிகவும் வித்தியாசமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலில் மிகவும் விருப்பாக பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது தான் அபி மற்றும் வெற்றி இருவரும் இணைந்துள்ளார்கள்.

அபியின் விருப்பம் இல்லாமலேயே வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டினாலும் கூட அபி வெற்றியைக் தனது கணவனாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் வெற்றி அபி ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் விவாகரத்திற்கு பிறகு அபியை பற்றிய அன்பு வெற்றிக்கு புரிய வந்தது.

ஆனால் இவர்களின் குடும்பத்தினர் காலில் இருவருக்கும் வேறு வேறு ஒருடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள் இவர்கள் அவர்களுக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்ததால் அதனை அறிந்து கொண்ட இருவரின் குடும்பத்தினர்களும் இவர்களை நாங்கள் செத்து விடுவோம் என்று கூறி மிரட்டியதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள மிரட்டினார்கள் பிறகு இருவரும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்.

இவர்களுடைய திருமணம் ஒரே கோவிலில் நடைபெற்றதால் வெற்றியுடனே வந்து அபியிடம் உன்னை பிடித்திருப்பதாக கூற அபியும் எனக்கு வெற்றி தான் முக்கியம் என்று கூறிவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு வெற்றியின் குடும்பத்தினர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருவரும் மெக்கானிக் ஷாப்க்கு செல்கிறார்கள்.

அங்கு இருப்பதை அறிந்து கொண்ட பூங்காவனம் இருவரையும் தங்களது வீட்டிற்கு வர சொல்கிறார். அங்கு பூங்காவனத்தின் மனைவி இவர்களுக்காக பெரிய விருந்து ஒன்றையே செய்து வைத்துள்ளார். இருவரும் சாப்பிட்டுவிட்டு இதற்கு மேல் எங்களால் சாப்பிட முடியாது என்று கூறுகிறார்கள்.

பிறகு இருவரையும் முதலிரவுக்கு தயாராக வேண்டும் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் எதுக்கு என்று கேட்க பூங்காவனத்தின் மனைவி அனைத்தும் முறைப்படி செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அபியை அலங்காரம் செய்வதற்காக அழைத்து செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment