தன்னந்தனியாக நடுகடலில் மாட்டிக் கொண்ட வெற்றி, அபி.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் அபி தொடர்ந்து பல குற்றங்களை கண்டுபிடித்து பலரையும் தண்டித்து வருகிறார் எனவே அபிக்கு ஏராளமான எதிரிகள் இருந்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போதை சாக்லேட் தயாரிக்கும் ஃபேக்ட்ரியை மூடியதோடு மட்டுமல்லாமல் அதனுடைய ஓனரையும் கண்டித்து தக்க தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். எனவே அபி எப்படியாவது பழி வாங்க வேண்டும் என நினைத்து வருகின்றனர் அப்படி தற்பொழுது வீடு புகுந்து அபியை கடத்தி இருக்கும் நிலையில் வெற்றி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதாவது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றியை தனது நண்பர்களிடம் அபி போத சாக்லேட் விஷயத்துல அவளோட துணிச்சலை பார்த்தோம்ல ஆனா இந்த விஷயத்துல அவளோட துணிச்சல் வேற அளவு சித்தப்பு ஆன் தி ஸ்பாட்ல வெள்ளராஜாவையே தூக்கிட்டானா பாரேன் என கூறி அதற்க்கு அவர் நண்பர் அபி வெலனு வந்துட்டா வெள்ளைக்காரன் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் சுடர் வெற்றிக்கு போன் செய்து அபியை தூக்கிக்கிட்டு போயிட்டாங்க மாஸ்க் போட்டுட்டு வந்து எல்லா போலீசையும் அடிச்சிட்டாங்க என கூறுகிறார் எனவே நான் உடனே வருவதாக சொல்லிவிட்டு வெற்றி கிளம்புகிறார். அபியை கடத்தி கடலிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

வெற்றியும் அபியை கண்டுபிடித்து செல்லும் நிலையில் அவர் எதிரிகளால் கடலில் காடத்தி செல்வதை தெரிந்துகொண்டு வெற்றியும் ஒரு கப்பலை எடுத்துக்கொண்டு செல்கிறார் அங்கு வெற்றி வருவதை தெரிந்து கொண்ட எதிரிகள் அபியை தூக்கி நடுக்கடலில் போட்டு விடுகின்றனர்.

வெற்றி தண்ணீரில் குதித்து அபியை காப்பாற்றி விட இருவரும் தனியாக போட்டில் இருந்து வருகிறார்கள் இந்த நேரத்தில் போட்டில் இருந்து டீசல் தீர்ந்து விடுவதால் நடுகடலில் நின்று விடுகிறது. எனவே இதற்கு மேல் இவர்கள் எப்படி இந்த கடலில் இருந்து தப்பிப்பார்கள் என்பது குறித்த எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment