உண்மையை தெரிந்துக் கொண்ட வெற்றியை சூழ்ச்சியினால் ஏமாற்றிய கண்மணி.! சுடர் பாப்பாவின் நிலைமை என்ன.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் வெற்றி கோவிலில் பிரச்சனை செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அபி அதனை தட்டி கேட்பதற்காக செல்கிறார் உடனே கோபத்தில் வெற்றி அபியின் கழுத்தில் தாலியை கட்டிவிட பிடிவாதமாக வீட்டில் வந்து தங்கி இருக்கிறார்.

சில காலங்கள் கழித்து வெற்றி அபியை ஏற்றுக்கொண்ட நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் வெற்றியும் தன்னுடைய ரவுடித்தனத்தை விட்டு விட்டு அபிக்காக முழுவதுமாக மாறுகிறார் இந்த நேரத்தில் சில பிரச்சனைகளால் அபி தன் கருவை கலைத்து விட்டதாக கூற கோபத்தில் வெற்றி அபியை விட்டு பிரிந்து விடுகிறார்.

மேலும் அபி கலெக்டர் ஆனது போலவும் வெற்றிக்கு தெரியாமல் வெற்றிக்கும் தனக்கும் பிறந்த மகளை அபி வளர்த்து வருவது போலவும் கதை முற்றிலும் மாறுபட்டு ஒளிபரப்பானது. பிறகு ஒரு விபத்தின் பொழுது வெற்றி சுடர் இருவரும் பழகி வரும் நிலையில் சுடர்தான் தன்னுடைய மகள் என வெற்றிக்கும், வெற்றிதான் தன்னுடைய அப்பா என சுடர்க்கும் தெரியாது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சுடர் மருத்துவமனையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையில் இவரைப் பார்ப்பதற்காக வெற்றி வருகிறார் பிறகு மருத்துவர் சுடர்தான் கலட்டரின் மகள் எனக் கூற உடனே சுடர்தான் தனது மகள் என்பதை தெரிந்துக் கொண்ட வெற்றி கதறி என்னுடைய குழந்தை உயிருடன் தான் இருக்கிறதா என அழுகிறார்.

பிறகு சுடர் அபிக்கு பிறந்த குழந்தைதான் ஆனால் உனக்கு பிறந்த குழந்தை இல்லை என அவருடைய நண்பர் கூற பிறகு தருண் அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார் உடனே அவரை கட்டிப்பிடித்து அபி அழ பிறகு இதனை பார்த்துவிட்டு வெற்றி அங்கிருந்து செல்கிறார். மேலும் வெற்றிக்கு சுடர்தான் தன்னுடைய மகள் என தெரியக்கூடாது என்பதற்காக  கண்மணி கேரக்டரில் நடித்து வரும் ஜூலி தருண் அபிக்கு திருமணம் ஆனது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து காண்பிக்க பிறகு வெற்றியும் இதனை நம்பி விடுகிறார்.

Leave a Comment