sivakumar

எஸ்பிபி முதலில் பாடியது எனக்கு தான் எம்ஜிஆருக்கு அல்ல என வீடியோ வெளியிட்ட நடிகர் சிவகுமார்.!! வைரலாகும் வீடியோ.

actor sivakumar speak about spb video viral: பிரபல பாடகர் எஸ்பிபி மரணத்திற்கு தொடர்ந்து திரைஉலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். அதோடு கூடவே அவருடன் அவர்களுக்கு ஏற்பட்ட நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் எஸ்பிபி பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

எஸ்பிபி அவர்கள் முதலில் பாடியது எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் தான் என்றும் மேலும் சிலர் ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற பாடத்தில் படத்தில் இடம் பற்ற ‘இயற்கை  இளைய கன்னி’ என்ற பாடல் தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் நடிகர் சிவகுமார் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து எனது பால்குடம் படத்துக்காக எஸ்பிபி பாடிய ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் தான் அவருடைய முதல் பாடல் என சிவக்குமார் கூறியுள்ளார். அதாவது 1969 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் பால்குடம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் அடிமைப்பெண் சாந்தி நிலையங்களுக்கு பின்னர் தான் ரெக்கார்டிங் செய்யப்பட்டாலும் பால்குடம் முதலில் ரிலீஸ் ஆனதால் அவர் பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என பெருமையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எஸ்பிபி உடன் இவருக்கு நிகழ்ந்த சில நிகழ்வுகளையும் வீடியோவில் சிவக்குமார் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த வீடியோ.

singer-spb

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

SP_Charan

அஜித் தனது தந்தையின் மறைவுக்கு வராதது குறித்து பேசிய SP சரண்.!! வைரலாகும் வீடியோ.

SP charan speaks about ajith video:பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பல திரை பிரபலங்கள் பாடகர் எஸ்பிபி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரிலோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமோ தங்களது  வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியது.

ஆனால் தல அஜித் அஜித் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை, நேரிலும் வந்து பார்க்கவில்லை எனவே ரசிகர்கள் அஜித்தின் இந்த செயலைக் குறித்து விமர்சித்தனர். அஜித் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் பண்ணும்போது போட்டுக்க நல்ல சட்டை கூட இருக்காதாம். அவர் எஸ் பி பி யின் மகன் சரணின் சட்டைதான் அணிந்து கொள்வாராம்.

அஜித்தும் சரணும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம் அதோடுமட்டுமல்லாமல் அஜித்தை முதன்முதலில் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தியது எஸ்பிபி அவர்கள் தானாம். அஜித்தின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவரை நேரில் பார்க்கவில்லை என அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

சரண் பேசுகையில் அஜீத் வராதது குறித்து என்ன கூறியுள்ளார் என பாருங்கள். அதாவது அஜித் எனக்கு ஒரு சிறந்த நண்பர், அவர் வந்து அப்பாவைப் பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரனும் என்று அவசியமில்லை. இப்போது இதைப் பற்றி பேச வேண்டியதுமில்லை, என கூறி அஜித் மீது வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எஸ் பி சரண். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/tv/CFreqA2lnih/?utm_source=ig_web_copy_link

spb-Gangai-Amaran (1)

Spb கடைசியா வாடா போடான்னு சந்தோஷமாக வீடியோ காலில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கங்கை அமரனுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!! இதோ அந்த வீடியோ.

legend spb and his son friendly talk on video call with kangaiamaran, premji, vengatprabhu video: எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது அனைவரும் மனதிலும் இடியாய் விழுந்தது. இது கனவாக இருக்க கூடாதா என இன்னும் ஏங்குபவர்கள் பலர். எஸ்பிபி அவர்கள் பாடல் வரிகளில் வருவது போல வெள்ளை மனம் பிள்ளை குணம் கொண்டவர்.

spb அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவர், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர் என மிகவும் உறுதியாகக் கூறலாம் அந்த அளவுக்கு மாமனிதர்.

இவரது இழப்பு உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இவரது குரல் காலம் காலமாக தொடரும் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவர் ஒரு அழியா மனிதர். இவர் என்றும் இயங்கும் ஒளியாய் இருப்பார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

spb மற்றும் அவரது மகன் சரண் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலமாக  கங்கை அமரன்,  பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர்களுடன் பேசும்போது மிகவும் இயல்பாக வாடா போடா என அவ்வளவு உரிமையுடன் நட்பாக பேசி விளையாடிய வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்து கண்கலங்காத மனிதர்களே கிடையாது. அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்கள் சிரித்து சந்தோஷமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/jv6AXIQg5og

vijay spb

எஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் !! வைரலாகும் வீடியோ.! ரசிகர்கள் நெகழ்ச்சி.

vijay at spb funeral video viral: பிரபல முன்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு குணமாகி மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று அவர் உயிர் பிரிந்தது. இது அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரையுலகம் என அனைவருக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பு என்பது அனைவரும் அறிந்ததே.

இன்னும் யாராலும் இவர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை அந்த அளவுக்கு அவரின் இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வருத்தத்திற்குரியது. இந்நிலையில் இன்று இறுதிசடங்கில் அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களும் அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அங்கு நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளு முள்ளில் அவரது ரசிகர் ஒருவர் தடுமாறிக் கீழே விழுந்தார் அவரின் காலணியை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

spb

அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க வேண்டும் எனக் கூறிய SPB!! வைரலாகும் வீடியோ.!! வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்.

Singer spb wish about his rebirth video: 90 காலகட்டத்தில் பிரபல பாடகராக வலம் வந்தவர் பாடகர் எஸ் பி பி. இவருடைய பாடல் இன்று வரையிலும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் எஸ் பி பி யின் உயிர் பிரிந்தது இவர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனாவிடம் போராடி வெளிவந்து நல்ல நிலைமைக்கு வரும் நிலையில் இப்படி இறந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது என்று தான் கூற வேண்டும்.

சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் எஸ்பிபி பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது அந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை குஷ்பு அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

அவ்வப்போது குஷ்பூ எஸ்பிபி இடம் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் நீங்கள் பாடகராக பிறக்க ஆசைப் படுகிறீர்களா என்று கேட்டதற்கு எஸ்பிபி பெருத்த சந்தோஷத்துடன் உடனே ஆமாம் நான் பாடகராக ஆசைப்படுகிறேன் என்று சிரித்துக்கொண்டே பதில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் பாடகராக பிறக்க வேண்டும் அதற்காக நாங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள். இதோ அந்த வீடியோ.