vijay

படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே விஜயின் காலில் விழுந்த இளம் நடிகை!! வைரலாகும் வீடியோ.

young actress get blessing from vijay video viral :தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது நடிப்பு திறமையினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் 2021 பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுது விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் எஸ்பிபி இறந்தபொழுது கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் செருப்பு மாட்டிக் கொண்ட பொழுது அதை எடுத்துக் கொடுத்த வீடியோ போன்ற பலவகையான விஜய் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் தற்பொழுது திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் நகைக்கடை விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா திரை படத்தில் தனுஷிற்க்கு ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் விஜய் நடித்துள்ள நகைக்கடை விளம்பரம் ஒன்றில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

spb-Gangai-Amaran (1)

Spb கடைசியா வாடா போடான்னு சந்தோஷமாக வீடியோ காலில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கங்கை அமரனுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!! இதோ அந்த வீடியோ.

legend spb and his son friendly talk on video call with kangaiamaran, premji, vengatprabhu video: எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது அனைவரும் மனதிலும் இடியாய் விழுந்தது. இது கனவாக இருக்க கூடாதா என இன்னும் ஏங்குபவர்கள் பலர். எஸ்பிபி அவர்கள் பாடல் வரிகளில் வருவது போல வெள்ளை மனம் பிள்ளை குணம் கொண்டவர்.

spb அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவர், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர் என மிகவும் உறுதியாகக் கூறலாம் அந்த அளவுக்கு மாமனிதர்.

இவரது இழப்பு உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இவரது குரல் காலம் காலமாக தொடரும் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவர் ஒரு அழியா மனிதர். இவர் என்றும் இயங்கும் ஒளியாய் இருப்பார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

spb மற்றும் அவரது மகன் சரண் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலமாக  கங்கை அமரன்,  பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர்களுடன் பேசும்போது மிகவும் இயல்பாக வாடா போடா என அவ்வளவு உரிமையுடன் நட்பாக பேசி விளையாடிய வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்து கண்கலங்காத மனிதர்களே கிடையாது. அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்கள் சிரித்து சந்தோஷமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/jv6AXIQg5og

vijay spb

எஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் !! வைரலாகும் வீடியோ.! ரசிகர்கள் நெகழ்ச்சி.

vijay at spb funeral video viral: பிரபல முன்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு குணமாகி மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று அவர் உயிர் பிரிந்தது. இது அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரையுலகம் என அனைவருக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பு என்பது அனைவரும் அறிந்ததே.

இன்னும் யாராலும் இவர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை அந்த அளவுக்கு அவரின் இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வருத்தத்திற்குரியது. இந்நிலையில் இன்று இறுதிசடங்கில் அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களும் அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அங்கு நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளு முள்ளில் அவரது ரசிகர் ஒருவர் தடுமாறிக் கீழே விழுந்தார் அவரின் காலணியை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

emy jaskson

எமி ஜாக்சன் வீட்டில் நடந்த விசேஷம்!! கவர்ச்சியான உடையில் நடிகை!! வைரலாகும் வீடியோ.

actress amy jackson family function video:தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். பின்னர் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தங்க மகன், தெறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் காதலித்து லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் கர்ப்பமாக ஆனதும் அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் செலவிடும் நேரங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் அது மட்டும் அல்லாமல் அழகின் ஹாட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

மேலும் எமி ஜாக்சன் தான் செய்யும் ஒர்க் அவுட் மற்றும் யோகா வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். மேலும் இவர் மீண்டும் தங்களுக்கு வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். மேலும் எமிஜாக்சன் தனக்கு  எண்பது வயது ஆகும் வரை திரைப்படத்தில் நடிக்க ஆசை உள்ளது எனவும் கூறியுள்ளார். தற்போது அவரது பையனுக்கு ஒரு வயது ஆனாதையொட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFerGo_J5fU/?utm_source=ig_web_copy_link

spb sir

கொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி!! அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.!! வைரலாகும் வீடியோ.

spb sir final live program video and he said about corona: சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ரசித்து விரும்பி கேட்கும் பாடல் என்றால் அது எஸ்பிபி அவர்களின் பாடல்தான். இவருக்கு அனைத்துவகை மக்களுமே ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவரின் பாடலை கேட்டால் நாம் எந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் அவரின் குரலைக் கேட்டால் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு இனிமையானவர்.

பாடகர் எஸ்பிபி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவ பலனின்றி காலமானார். இந்த செய்தி அவர்களின் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கொரோனா சமயத்தில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக கலந்து கண்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளார்.  அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம், அது நாம் செய்த பாவம் தான், நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள், ஆனால் நாம் இயற்கையை மாசுபடுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் செல்கிறோம், நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்தி விட்டோம், அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். என அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

எஸ்பிபி அவர்கள் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இது தான்.  இந்த  வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

ramyapandiyan

ரம்யாபண்டியன் பிக் பாஸ்க்கு போய்ட்டாங்க!! வெளிவந்த வீடியோ ஆதாரம்!! வைரலாகும் வீடியோ.

ramyapandiyan confirmed as a bigboss contestant video: ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை ரம்யா பாண்டியன். இவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த ஆண்தேவதை திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் சமீப காலங்களாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு காமெடி ஷோவில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சீசன் 4 நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்பொழுது ரம்யா பாண்டியன் பங்கேற்க உள்ளார் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது,

ஏனென்றால் தற்பொழுது கலக்கப்போவது யாரு ப்ரமோ வெளிவந்தது. அதில் ரம்யா பாண்டியன் இல்லை அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன். தற்போது அவரின் எந்த ஓரு புகைப்படமும் வெளிவராததால் இவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸில் ரம்யா பாண்டியன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.இவர் இருக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

 

rasshmika2

பிரபல ஹோட்டலில் திருடியதை ஒத்துகொண்ட நடிகை!! வைரலாகும் வீடியோ.

actress who stolen in famous hotel video: தனது ஃபேஸ் எக்ஸ்பிரஷன் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தென்னிந்திய படமான கீதா கோவிந்தா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த நிலையில் தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது இவர் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நான் ஃபேமஸான ஹோட்டலில் தங்கி இருந்தேன் அப்பொழுது அந்த ஹோட்டலில் இருந்த தலகாணி உறை மிகவும் அழகாக இருந்தது எனக்கும ரொம்பபிடித்தது எனவே நான் அந்த தலகாணி உறையை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு வந்துவிட்டேன் என்று கூறி இருந்தார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.