singer-spb

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

spb sir

கொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி!! அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.!! வைரலாகும் வீடியோ.

spb sir final live program video and he said about corona: சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ரசித்து விரும்பி கேட்கும் பாடல் என்றால் அது எஸ்பிபி அவர்களின் பாடல்தான். இவருக்கு அனைத்துவகை மக்களுமே ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவரின் பாடலை கேட்டால் நாம் எந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் அவரின் குரலைக் கேட்டால் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு இனிமையானவர்.

பாடகர் எஸ்பிபி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவ பலனின்றி காலமானார். இந்த செய்தி அவர்களின் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கொரோனா சமயத்தில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக கலந்து கண்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளார்.  அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம், அது நாம் செய்த பாவம் தான், நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள், ஆனால் நாம் இயற்கையை மாசுபடுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் செல்கிறோம், நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்தி விட்டோம், அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். என அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

எஸ்பிபி அவர்கள் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இது தான்.  இந்த  வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.