ஆரவ், கவினை தொடர்ந்து திருச்சியிலிருந்து பிக்பாஸில் கலந்து கொள்ளப்போகும் மற்றொரு இளம் பிரபலம். !! வைரலாகும் புகைப்படம்.

bigboss new contestant from trichy photo viral:பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 3 சீசன் களை கடந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் காதல் மன்னன் ஆரவ் மற்றும் கவின் ஊரிலிருந்து தற்போது புதிதாக ஒரு இளம் பாடகர் ஒருவர் வர இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே 6 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளார்கள். ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், அனு மோகன், சனம் ஷெட்டி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சிவானி நாராயணன் போன்றோர் உறுதி செய்யப்பட்ட பட்டியலில் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விஜய் டிவி  நட்சத்திரம் இறங்க உள்ளார். அவர் வேறு யாருமில்லை சூப்பர் சிங்கர் ஜூனியர் 3  சீசனில் டைட்டில் வின்னர் அஜித் தான். இவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களை தொடர்ந்து தற்போது சனம் ஷெட்டி அவர்களும் இந்த பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த பிக்பாஸில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த சீசனில் 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக தெரியவருகிறது. இதுவரை 8 போட்டியாளர்களின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள நபர்களின் பெயரும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sam.sanam.shetty_
sam.sanam.shetty_
aajeeth
aajeeth

Leave a Comment