balaji-murugados

எனது பெற்றோர் குடிக்கு அடிமை என வேதனைப்பட்ட பிக் பாஸ் பாலாஜி பீர் ஊற்றி குளிக்கும் சர்ச்சை வீடியோ.!! சிக்கிட்டியே கைப்புள்ள என கலாய்க்கும் ரசிகர்கள்.

balaji murugadass controversy bathing video viral:விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நான்காவது சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சென்டிமென்ட் சண்டை என கலை கட்டுகிறது, இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் வருவதற்கு என்ன காரணம் ஒரு ஆழமான காரணத்தை கூறுங்கள் என உத்தரவிட்டார்.

அதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்துகண்டார்கள். அப்பொழுது பாலாஜி முருகதாஸ் தனக்கு ஏற்பட்ட துயரத்தை வெளிப்படையாக கண்ணீருடன் கூறினார், அப்பொழுது பாலாஜி முருகதாஸ் கூறுகையில் தன்னுடைய தந்தை, தாய் மதுவிற்கு அடிமையாகி விட்டார்கள் என்னை கவனித்து கொள்ளவே மாட்டார்கள் என கூறினார்.

மேலும் ஒரு குழந்தையை பெற்று முறையாக வளர்க்க முடியவில்லை என்றால் எதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென கேள்வியையும் எழுப்பினார். இவரின் சோகக் கதையைக் கேட்டு சக போட்டியாளர்கள் கண்ணீருடன் ஆறுதல் கூறினார்கள், இப்படி பாலாஜி முருகதாஸ் தமிழில் சோக கதையை கூறியதை கேட்டு ரசிகர்களும் அப்படியா என ஆர்மி தொடங்க ஆரம்பித்தார்கள்.

அதனைதொடர்ந்து பாலாஜி முருகதாஸ் சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலாஜி முருகதாஸ் கூறிய கருத்திற்கு நேரெதிராக அவர் மதுவில் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

balaji-murugadoss-1
balaji-murugadoss-1

அதுமட்டுமில்லாமல் பாலாஜி முருகதாஸின் அட்மின் ஒரு சில சர்ச்சை வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவரது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். வீடியோவை பார்த்து யோக்கியன் பாலாஜி முருகதாஸ் ஏழைத்தாயின் மகன் குடிகார பெற்றோரின் மகன் பாவம்ல. ஒரு மனுஷன் குளிக்கக்கூட பாத்ரூம் இல்லாமல் ஷாம்பு வாங்க காசு கூட இல்லாம பீர் ஊற்றி குளிக்கிறார் பாவம் என கலாய்த்து வருகிறார்கள்.

https://twitter.com/Positivevibessa/status/1315136665652928512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315136665652928512%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Ftelevision-bigg-boss-tamil-4-balaji-murugadoss-controversy-video-and-photos-msb-356415.html

rioraybiggboss

வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோ!! ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ்.!! இதோ வீடியோ..

today biggboss season 4 1 st promo rioraj fun with actress rekha video: பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று கமலஹாசன் வந்து அனைவரையும் கேள்விமேல் கேள்வி கேட்டார். என்றாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக இல்லை எனவே பேசப்படுகிறது.

அதனை தொடர்ந்து திரும்பவும் அவர்களுக்கு ஹார்ட்  ஹார்ட் பிரேக்கிங கேமை திரும்பவும் திரும்பி விளையாடம்படி சொல்லியுள்ளார். மேலும் இந்த கேமை திரும்பி விளையாடுவதால் ஒரே மாதிரியே போவதுபோல் கடுப்பாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து முன்பு பிடித்தவர்கள் இப்போது பிடிக்காதவர்களாகவும் முன்பு பிடிக்காதவர்கள் தற்போது படித்தவர்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் கமலஹாசன் முன்பு  ரியோ ராஜ் நடிகை ரேகாவை பயங்கரமாக கலாய்க்கிறார், இதோ அந்த ப்ரமோ வீடியோ.

balaji

3வது ப்ரமோ இதோ!! பாலாஜி முருகதாஸின் கதையை கேட்டு அவரை கட்டிப்பிடித்து கதறி அழும் ஹவுஸ் மெட்கள்!! இதோ வீடியோ.

3rd promo video balaji murugadass speaks about his parents:பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் மட்டுமே மிக கலகலப்பாக போட்டியாளர்கள் டிக் டிக் யாரது என்ற கேமை விளையாடி சந்தோஷமாக இருந்தனர் அதுமட்டுமல்லாமல் அறந்தாங்கி நிஷாவின் காமெடி என கலகலப்பாக இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் சண்டை, சோகம் என மாறி மாறி இருந்தது. தங்களின் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை சொல்லி வரும் நேரத்தில் இன்றைய  மூன்றாவது புறம் ோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தன் வாழ்வில் தான் கடந்து வந்த சோக கதையை கூறுகிறார்.

அவர் கூறியதாவது எனது தாய் மற்றும் தந்தை இருவரும் என்னை பெற்றதோடு சரி அதன்பின் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டு என்னை சரியாக கவனிக்கவில்லை. அவர் பேசியது குழந்தைகளை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தையை பெற்று கொள்கிறீர்கள் என தவறான பெற்றோர்களுக்கு செருப்படி கொடுப்பதுபோல பேசியிருந்தார்.

அவர் பேசியதைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்து அழுதனர் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைந்தது.

biggboss4-9

2 promo!! எலிமினேஷனில் சிக்கிய ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன்!! இதோ வீடியோ.

today biggboss 4, 2 promo elimination list video viral:பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரமோவில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தங்க தகுதி இல்லாத அடுத்த நாலு பேர் யார் என பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அனைவரும் கலந்து ஆலோசித்து பின்னர் சம்யுக்தா வந்து அஜித், சிவானி நாராயணன்,  ரம்யா பாண்டியன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரின் வாழ்க்கையில் மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் போல் இல்லை என அவர் கூறுகிறார்.

அவர் கூறியதற்கு பின் நடிகர் சுரேஷ் அவர் கூறியது ஏற்றுக்கொண்டார். மற்றவர்களின் முகம் சோர்ந்து போய் உள்ளது குறிப்பாக சிவானி நாராயணனின் முகம் மிகவும் சோகத்தில் இருந்தது.

சிவானி நாராயணனுக்கு என ரசிகர்கள் அதிகமாகவே உள்ளன. இவர் தினமும் மாலை நேரத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்துகொண்டு எந்த ஒரு பர்ஃபார்மன்சும் செய்யாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றனர்.

biggboss-4-tamil

வெளிவந்த இன்றைய 2வது ப்ரமோ!! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் போகும் பிக் பாஸ் 4!! இதோ அந்த வீடியோ.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே முதல் கட்ட ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்கள் தனக்கென ஒரு அட்ரஸ் கூட இல்லை எனவும், என் குடும்பத்திற்க்கு நான் அப்பா அம்மாவாக இருந்து என் தம்பி அம்மா அப்பாவை பார்த்து உள்ளேன் எனவும் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன் எனவும் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக பிரபலமாவதற்கு நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். தற்ப்போது நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை டிரகர் செய்து எனது பெயரை கெடுக்க பார்க்கிறார் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் தன்னைப் பற்றிக் கூறிவிட்டு பின்பு அனிதா சம்பத்தை கலாய்ப்பது போன்று பேசுகிறார்.  லவ் யூ ஆல் என சொல்லி யாரையாவது மனம் புண்படும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் கூறுகிறார்.

அதோடு நான் ஹுர்ட் கம்மியாத்தான் பண்ணி இருப்பேன் அதிகமாக  பண்னுணா தாங்க மாட்டீங்க என அவர் பேசுவது ப்ரமோவில் வெளிவந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் நான் கடைசிவரை நின்று கடும் போட்டியாளராக அனைவரிடமும் போட்டி போடுவேன். மேலும் இந்த ஷோவில் யார் வெற்றி பெற்றாலும் அது நான் பெற்ற வெற்றியாகவே எடுத்துக் கொள்வேன் எனவும் கூறுகிறார்.

 

anitha-sampath1

செய்தி வாசிப்பாளராக இல்லாமல் சீரியலில் நடித்திருக்கலாம் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

instead of newsreader anitha sampath would be serial actress video viral:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரமோ ஒரு நாளைக்கு மூன்று நான்கு என வந்த வண்ணம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாக அனிதா சம்பத்தே ப்ரமோவில் இடம் படித்து வருகிறார். தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொள்வதற்காக அவர் தானே போய் வம்பு வளர்த்துகிறாரா எனவும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் அனிதா சம்பத் இதற்கு முன் இருந்த போட்டியாளர்களை காப்பியடித்து அவர்களைப் போலவே செயல்படுகிறார் எனவும் கூறுகின்றனர். சனம் ஷெட்டி தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை இயல்பாக எடுத்துக்கண்டு எப்போதும் போல சாதாரணமாக இருக்கிறார்.

ஆனால் அனிதா சம்பத் சின்ன ஒரு விஷயத்தையும் பெரிதாக்கி வீட்டில் பிரச்சினையை தூண்டி கொண்டு வருகிறார். இவருக்கு சனம் ஷெட்டி எவ்வளவோ பரவாயில்லை என கம்பேர் பண்ணும் அளவுக்கு அனிதா சம்பத் தற்போது நடந்து கொண்டிருக்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அனிதா சம்பத்தை நீங்கள் நியூஸ் ரீடரா ஆகுறதுக்கு பதிலா சீரியலில் நடித்து இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பெரியவரான சுரேஷ் சக்ரவர்த்தியிடம் வாயை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நீ எங்கேயோ போய் இருக்குவம்மா என கூறுகின்றனர்.

மேலும் எச்சில் சண்டை, எரும மாட்டு பிரச்சினை என சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா தான் வேண்டுமென்றே வம்புக்கு போனார் எனவும் அனிதா சம்பத்தை ரசிகர்கள் தாக்குகின்றனர்.

anitha sampath

3வது ப்ரமோ வெளிவந்தது!! அனிதா சம்பத் எஸ்கேப் ஆகலாம்ன்னு பாக்குறாங்க!! இதோ வீடியோ.

today biggboss 4, 3 promo video:பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது ப்ரமோ வெளிவந்துள்ளது. இந்த ப்ரமோவில் தான் செய்த தவறை உணர்ந்த அந்த சம்பத் கேமராவின் முன்பு வந்து நின்று புலம்புகிறார். மேலும் தான் செய்த தவறால் மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என பயம் வந்தது நன்றாக தெரிகிறது.

அதனால் தன் மீது உள்ள பழியை அப்படியே சுரேஷ் சக்கரவர்த்தி மீது போட பார்ப்பது நன்றாகவே தெரிகிறது. அதோடுமட்டுமல்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் நீ, போ என மரியாதை இல்லாமல் பேசுவதும் தெரிகிறது.

நடிகர் சுரேஷ் ப்ரமோ வில் வருவதற்கு ஆசைப்படுகிறார் என அனிதா சம்பத் கூறுகிறார். அவர் கூறியதற்கு ரசிகர்கள் நீங்கள்தான் பிரேக்கிங் நியூஸ் இல் வருவதற்கு ஆசைப்படுகிறீர்கள் என கூறுகின்றனர்.

தற்போது இந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.