singer-spb

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

spb-Gangai-Amaran (1)

Spb கடைசியா வாடா போடான்னு சந்தோஷமாக வீடியோ காலில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கங்கை அமரனுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!! இதோ அந்த வீடியோ.

legend spb and his son friendly talk on video call with kangaiamaran, premji, vengatprabhu video: எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது அனைவரும் மனதிலும் இடியாய் விழுந்தது. இது கனவாக இருக்க கூடாதா என இன்னும் ஏங்குபவர்கள் பலர். எஸ்பிபி அவர்கள் பாடல் வரிகளில் வருவது போல வெள்ளை மனம் பிள்ளை குணம் கொண்டவர்.

spb அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவர், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர் என மிகவும் உறுதியாகக் கூறலாம் அந்த அளவுக்கு மாமனிதர்.

இவரது இழப்பு உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இவரது குரல் காலம் காலமாக தொடரும் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவர் ஒரு அழியா மனிதர். இவர் என்றும் இயங்கும் ஒளியாய் இருப்பார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

spb மற்றும் அவரது மகன் சரண் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலமாக  கங்கை அமரன்,  பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர்களுடன் பேசும்போது மிகவும் இயல்பாக வாடா போடா என அவ்வளவு உரிமையுடன் நட்பாக பேசி விளையாடிய வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்து கண்கலங்காத மனிதர்களே கிடையாது. அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்கள் சிரித்து சந்தோஷமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/jv6AXIQg5og

spb sir

கொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி!! அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.!! வைரலாகும் வீடியோ.

spb sir final live program video and he said about corona: சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ரசித்து விரும்பி கேட்கும் பாடல் என்றால் அது எஸ்பிபி அவர்களின் பாடல்தான். இவருக்கு அனைத்துவகை மக்களுமே ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவரின் பாடலை கேட்டால் நாம் எந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் அவரின் குரலைக் கேட்டால் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு இனிமையானவர்.

பாடகர் எஸ்பிபி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவ பலனின்றி காலமானார். இந்த செய்தி அவர்களின் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கொரோனா சமயத்தில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக கலந்து கண்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளார்.  அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம், அது நாம் செய்த பாவம் தான், நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள், ஆனால் நாம் இயற்கையை மாசுபடுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் செல்கிறோம், நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்தி விட்டோம், அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். என அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

எஸ்பிபி அவர்கள் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இது தான்.  இந்த  வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

spb

அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க வேண்டும் எனக் கூறிய SPB!! வைரலாகும் வீடியோ.!! வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்.

Singer spb wish about his rebirth video: 90 காலகட்டத்தில் பிரபல பாடகராக வலம் வந்தவர் பாடகர் எஸ் பி பி. இவருடைய பாடல் இன்று வரையிலும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் எஸ் பி பி யின் உயிர் பிரிந்தது இவர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனாவிடம் போராடி வெளிவந்து நல்ல நிலைமைக்கு வரும் நிலையில் இப்படி இறந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது என்று தான் கூற வேண்டும்.

சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் எஸ்பிபி பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது அந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை குஷ்பு அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

அவ்வப்போது குஷ்பூ எஸ்பிபி இடம் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் நீங்கள் பாடகராக பிறக்க ஆசைப் படுகிறீர்களா என்று கேட்டதற்கு எஸ்பிபி பெருத்த சந்தோஷத்துடன் உடனே ஆமாம் நான் பாடகராக ஆசைப்படுகிறேன் என்று சிரித்துக்கொண்டே பதில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் பாடகராக பிறக்க வேண்டும் அதற்காக நாங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள். இதோ அந்த வீடியோ.