ரஜினிக்காக ஒரு புதிய பாடலை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் .? கூட யார் யார் பாடுனாங்க.. தெரியுமா.? முழு விவரம் இதோ.

தமிழ் சினிமாவில் திரை உலகில் இருக்கும் நாம் நடிகர் நடிகைகளை கூட மறந்து விடுவோம் ஆனால் சினிமாவில் உள்ள பாடல்களை மட்டும் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டோம் அதற்கு வாய்ப்பே இல்லை அப்படி பாடலுக்கு என்று ஏதோ ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் சினிமா உலகில் பயணிக்கின்றன.

அந்த வகையில் பல்வேறு விதமான பாடல்களை பாடிய பாடல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து வந்தவர்தான் எஸ்பி பாலசுப்ரமணியம். திரை உலகில் பல்வேறு விதமான பாடலை பாடி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் வைத்திருந்தார் எஸ்பிபி.

மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடி தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொண்டுவந்ததோடு மற்ற இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்உதாரணமாக வந்தார்.

அதையும் தாண்டி நடிகராகவும் நடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார் இப்படி சினிமாவில் தொட்ட எல்லாத்தையும் வெற்றி கண்டவர் தொற்று காரணமாக உயிரிழந்தார் இச்செய்தியை பலரையும் பெரிய அளவில் பாதித்தது இவரை மீண்டும் பார்க்க முடியாது என்பதால் பலரும் மூலம் உடைந்து போனார்கள் ஆனால் அவர்களுக்கு உறுதுணையாக எஸ்பிபி அவர்களின் பாடிய பாடல்கள் தற்பொழுது ஆறுதல் கொடுக்கின்றன.

இந்த நிலையில் அவரைப் பற்றிய செய்தி ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எஸ்பிபி பல படங்களில் இணைந்து பாடியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் கடைசியாக தர்பார் படத்தில் கூட “நான் தாண்டா இனிமேல” என்ற ஹிட் பாடலை கூட எஸ்பிபி தான் பாடியிருந்தார்.

இப்படி இருக்க ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் எஸ்பிபி ஒரு பாடலை பாடி உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. அந்த பாடலில் எஸ்பிபி உடன் இணைந்து இமான், சித் ஸ்ரீராம் ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்கு வெளியாக உள்ளதால் படத்தை தற்போது எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Leave a Comment