from-sushant-singh-rajput tamil360newz

இளம் நடிகர் சுஷாந்த்தின் மரணம் குறித்து அவரது சமையல்காரரின் பரபரப்பு தகவல்.!! வீடியோ இதோ.

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்த நடிகர் சுஷாந்த் சிங்.அவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரின் இறப்பிற்கு பாலிவுட் திரை உலகில் நிலவும் நிப்போட்டிசம் தான் காரணம் என்று பேசப்பட்டு வந்தது. மேலும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டு வந்தது.

அதுமட்டுமல்லாமல் தனது காதலியான நடிகை ரியா சக்ராபொர்த்திக்கு இவரது மரணத்தில் தொடர்பு உள்ளது எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்நிலையில் சுஷாந்த் சிங் வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு வேலை செய்த சமையல்காரர் அசோக் அளித்த பேட்டியில் நான் அவரிடம் இருந்த போது அவர் சந்தோஷமாக இருந்தார்.

அவர் எந்த மன அழுத்தத்திலும் இல்லை. எந்த மருந்துகளும் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல அப்போது அவருக்கும் ரியாவுக்கும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை, சகஜமாகவே இருந்தது என அவர் தெரிவித்தார்.

மேலும் அதனைத்தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் வீட்டில் தற்போது வேலை செய்த சமையல்காரர் நீரஜ்ஜிடம் அவர் இறந்த அன்று காலை என்ன நடந்தது என்று விசாரித்த பொழுது அவர் கூறியதாவது. இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, இரவு சாப்பிட என்ன வேண்டும் என கேட்டோம், அவர் மேங்கோ ஷேக் போதும் எனக் கூறினார்.

பிறகு காலை உணவை கேட்டபோது ஆரஞ்சு ஜூஸ், இளநீர், வாழைப்பழம் போதும் என தெரிவித்தார். அவர் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் இளநீர் மட்டுமே பருகினார். அதனை தொடர்ந்து மதிய உணவைப் பற்றி கேட்க கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை, பிறகு திறந்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்துகொண்டு மரணம் அடைந்திருந்தார் என தெரிவித்தார்.

மேலும் ரியா மற்றும் சுஷாந்த் சந்தோஷமாகவே இருந்தார்கள் என்றும் அவர்கள் இருவரும் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்று வந்தனர் அதன் பிறகுதான் சுஷாந்த் நார்மலாக இல்லை எனவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

Salman_Khan-tamil360newz

வித்தியாசமான முறையில் நிவாரண பொருட்கள் வழங்கிய சல்மான் கான் – வைரல் வீடியோ!

Actor Salman Khan who provided relief goods in a different way:சல்மான் கான் ஹிந்தி பாலிவுட் நடிகர் ஆவார். இவர் தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் 1988ஆம் ஆண்டில்  பீவி ஹோ தோ ஐசி என்ற இந்தி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இதனை தொடர்ந்து மைனே பியார் கியா, சனம் பேவஃபா, குர்பான், லவ், சாஜன், சூரியவன்ஷி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து 1098ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த குச் குச் ஹோத்தா ஹே என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

தற்போது சீனாவிலிருந்து உருவாகி உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரானா வைரஸ். இதனால் அன்றாட வேலை பார்த்து உண்ணும் தினம் கூலிகளுக்கு உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் ஏழை மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சல்மான் கான் அவர்களும் உதவி வருகின்றார். அந்த வகையில் அவர்ருடைய பக்கத்து கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று கொடுத்து உதவி வருகிறார். இவருக்கு பல வகையான சமூக ஆர்வலர்களும் உதவி புரிந்து  வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர்களான கமல் கான், ஜாக்குலின், பெர்னாண்டஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.அவ்வப்போது எடுத்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

sharukh

கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள ஷாருக்கானின் அலுவலகம்!! மனைவி வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது!!

Shahrukh Khan’s office being converted into corona ward: ஷாருக்கான் பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஆவார். இவர் கமலுடன் இணைந்து ஹேராம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை கமலஹாசன் அவர்களே தயாரித்து நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஷாருக்கான கமலஹாசனின் நண்பனாக முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் அவருக்கென சில ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

உலகமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு, இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, கோவில், மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், தொண்டுநிறுவனங்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை மத்திய மாநில அரசுக்கு நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.

மேலும் ஹோட்டல், அலுவலகம், கல்லூரி போன்றவற்றை கொரோனாவால் பாதித்தவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.
அந்தவகையில் நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருக்கும் தனது நான்கு மாடிக் கட்டிடத்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது அந்த அலுவலகத்தை எப்படி கொரோனா வார்டாக மாற்றி உள்ளார்கள் என்பதை வீடியோவாக சமூகவலைதளத்தில் ஷாருக்கான் மனைவி அவர்கள் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.