amalapual

கோடை மழையை முத்தமிட்டு வரவேற்கும் அமலாபால்.! வைரலாகும் வீடியோ!!

உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சில சர்ச்சையான கேரக்டரில் நடித்து தனது பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

இதனையடுத்து அவர் 2010ஆம் ஆண்டு மைனா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தனது பெயரை சரி செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து அவர் தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனை, ஆடை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

எனவும் சமீபகாலமாக செயற்கையான விஷயங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு அவரே மாட்டிக் கொண்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இத் தடை ஏப்ரல் 14 வரை வைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமலாபால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளவர்கள்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஒரு சில இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் வசித்து வரும் அமலாபால் அவரது வீட்டில் உள்ள மாமரத்தில் மாங்காய்க்கு முத்தமிடும் காட்சியும் மற்றும் பூனையை கொஞ்சும் காட்சிகள் என நம்மை மேலும் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் இந்த கிளைமேட்க்கு இது தேவையா என அறிவுரை கூறி வருகின்றனர்.

deena

நடிகர் ராமராஜனை மிஞ்சும் கைதி பட ”தீனா” இப்படி கூட பண்ணுவாரா.! வைரலாகும் வீடியோ.!

சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் தீனா. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்குகிறார் அதுமட்டுமில்லாமல் கலக்கப்போவது யாரு மற்றும் பல தொகுப்புகளில் காமெடியனாக தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி வெள்ளி திரையில் பிரபலம் அடைய தொடங்கியுள்ளார் அதுமட்டுமில்லமால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கொரோனா வைரஸ் உலகையே அச்சியுறுத்தி இந்த வைரஸ் தொற்று நோய் என்ற காரணத்தினால் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மக்களை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு வீடியோ மற்றும் பலவற்றை வெளியிட்டு  உற்சாகப்படுத்திய வருகின்றனர். ஒரு சிலர் தங்களது அன்றாட வாழ்கை முறையை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகரான தீனா அவர்கள் தனது கிராமத்து வீட்டில் இருக்கும் மாட்டின் காலை கரைப்பது போல் வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகிறார்

இதோ அந்த வீடியோ

https://twitter.com/DheenaActor/status/1246373506268323841

thala

அஜித் நடித்த மங்காத்தா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவரது சிறந்த நடிப்பு மற்றும் நிஜ வாழ்க்கையின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர். இவர் படத்தில் நடிக்க பல நடிகர் நடிகைகள்  காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில நடிகர் நடிகைகள் இவர் படத்தில் நடித்து மேலும் பிரபலம் அடைந்து உள்ளனர்.அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா இப்படத்தை வெங்கட்பிரபு அவர்கள் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜீத்துடன் சேர்ந்து பல நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர் குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுன், ஆண்ட்ரியா, வைபவ், அஞ்சலி, மகத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அஜித் அவர்கள் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் மேலும் வளர தொடங்கினார். படத்தில் நடித்த மற்ற இளம் நடிகர்கள் நடிகைகளும் தற்போது பிரபலமடைந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

தற்பொழுது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜீத் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மற்றும் ஹீரோயினாக ஹுமா குரேஷி அவர்களும் போலீசாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த மங்காத்தா போல இருக்கும் என இயக்குனர் எச் வினோத் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது இந்த சூழலில் மங்காத்தா படம் குறித்து நடிகர் ஜெய் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியது.

மங்காத்தா படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என கேட்டிருந்தேன் ஆனால் இப்படத்தில் அஜித் சார் அவர்கள் ஒப்பந்தம் ஆனார் ஆனால் அதற்கு முன்பாகவே 5 ஹீரோக்களில் ஒருவனாக இருந்தேன் நான்கு ஹீரோக்கள்  ரெடியாக இருக்கிறார்கள் என சொன்னார்கள் அப்புறம்தான் ஐந்தாவதாக அஜித் சார் இருந்தார் அவருடைய கதாபாத்திரம் தான் நான் நடிக்க இருந்தேன் என பரபரப்பு பேட்டி ஒன்றை தற்பொழுது கூறி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.