keerthi-suresh

விஜய், அனிருத் யாரும் கிடையாது தன்னுடைய 13 வருட காதலரை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்.! வைரல் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழி திரைப்படங்கள் நடித்து தற்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்த இவர் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்ததார் சமீப காலங்களாக இவருக்கு பெரிதாக தமிழ் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக சாணிக் காகிதம் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவ்வாறு இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்து வருவதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் இசையமைப்பாளர் அனிருத் அவர்களை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் வதந்திகள் வெளிவந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது நடிகர் விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறாராம் இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, கீர்த்தி சுரேஷ் நெருங்கமான குடும்ப நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது அவர் பள்ளி பருவத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் தான் இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர் தான் கீர்த்தி சுரேஷ் காதலர் என்றும் அவரை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் அவர்கள் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் பிறகு விஜய் கீர்த்தி சுரேஷின் காதலரின் பிறந்தநாள் கூட வாழ்த்து தெரிவித்து இருந்தாராம். அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த நபர் என்னிடம் காட்டியுள்ளார் என பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இதனை அடுத்து இன்னும் நான்கு வருடங்கள் கழித்து தான் தன்னுடைய காதலரை கீர்த்தி சுரேஷ் கரம் பிடிப்பார் எனவும் பிஸ்மி கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த நாயா நான் இருக்க கூடாதா.! கீர்த்தி சுரேஷ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் மேலும் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது இவர் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது எனவே அங்கு சென்ற இவர் தன்னுடன் அழைத்து சென்ற செல்ல நாய்க்குட்டி உடன் விளையாடி மகிழும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் தற்பொழுது இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் தற்பொழுது இவர் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தான் நடிகைக்கு கீர்த்தி சுரேஷ் நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார்.

KEERTHI SURESH DOG
KEERTHI SURESH DOG

அப்பொழுது தன்னுடன் தனது செல்ல நாய்க்குட்டிகளையும் அழைத்து சென்ற நிலையில் படபிடிப்பு இல்லாத நேரத்தில் தன்னுடைய நாயுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் கேப்டனாக கூடியது கடந்த சில நாட்களாக படப்பிடிப்பிற்காக நாகர்கோவிலில் தங்கி உள்ளேன்.

KEERTHI SURESH
KEERTHI SURESH

இங்கு தங்கி இருக்கும் நாட்களில் சில நல்ல நினைவுகளை சேமித்து வைத்துக் கொண்டேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சில மணி நேரங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக் கணக்கான கமெண்ட்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

KEERTHI SURESH 21
KEERTHI SURESH 21