siragadikka aasai

சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்த பாட்டி.. பயந்து ஓடும் முத்து.. சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படியாவது முத்து மீனாவை சேர்த்து வைத்து விட வேண்டும் என பாட்டி போராடி வருகிறார். அண்ணாமலை முத்து மீனாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு வருவதனால் தனது அம்மாவின் மூலம் சேர்த்து வைத்து விடலாம் என்பதற்காக கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

பாட்டியும் இவர்களை கோவிலுக்கு அனுப்புகிறார் மேலும் பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் இருந்தாலும் பெரிதாக மாற்றமில்லை. இவ்வாறு மீனாவும் பாட்டியிடம் நான் என்னதான் செய்தாலும் அவருடைய மனம் மாறவே மாட்டேங்குது எனக் கூறி வருத்தப்பட இந்த ஊரில் இருந்து கிளம்புவதற்குள் நான் அவனை மாற்றுகிறேன் என பாட்டி சொல்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் முத்துவின் அம்மா தனது பெரிய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக நகைகள் மற்றும் பணத்தை வாங்குவதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது மாமியாரின் மனதில் இடம் பிடிப்பதற்காக தொடர்ந்து அனைவர் மேலும் பாசமாக இருப்பது போலும் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தும் வருகிறார்.

இதனை எல்லாம் பார்த்த முத்துவுக்கு அதிர்ச்சி ஆகிறது அம்மா இப்படிப்பட்ட ஆளே கிடையாது ஏன் இப்படி செய்கிறார்கள்? கண்டுபிடிக்க வேண்டும் என புலம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாட்டி கோவிலுக்கு சென்று ஜோசியர் ஒருவரிடம் அவங்களுக்குள் நடக்கிற எதுவுமே நடக்கவில்லை எனவே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என கூற அதற்கு அவரும் இன்றைய நாளை அமோகமா இருக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்தை வச்சுக்கலாம் என பாட்டி சந்தோஷப்படுகிறார்.

இதனைப் பற்றி முத்து மீனாவிடம் கூற முத்து ஆள விடுங்க என ஊருக்கு கிளம்புகிறார். அப்பொழுது பாட்டி, பாட்டி ஒருத்தி இருக்கிறதே மறந்திடு என கூறி மிரட்ட பிறகு வேறு வழி இல்லாமல் முத்து இப்ப என்னதான் செய்ய சொல்றீங்க என கேட்கிறார். அதற்கு பாட்டி இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும் இல்லைனா இந்த ஊரு பக்கமே வராத என் முகத்திலேயே முழிக்காத என கூற முத்து மீனாவை பார்த்து யோசிக்கிறார்.

பிறகு முத்து நீங்க ஒரு முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுல இருந்து மாறப்போவதில்லை உங்க இஷ்டப்படி ஏதோ பண்ணுங்க என சொல்ல அதற்கு பாட்டி இப்பதாண்டா நீ என் பேரன் என கூறுகிறார் மீனாவும் சிரிக்க இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது

siragadikka aasai

பணத்திற்காக படாத பாடுபடும் விஜயா.! ராணி போல் இருக்கும் மீனா.. ரோகினியின் பித்தலாட்ட வேலை வெளிவருமா? சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் முத்து, மீனா இருவரையும் சேர்க்க வேண்டும் என்பதற்காக முத்துவின் அப்பா தனது அம்மா இருக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். இவ்வாறு இவர்கள் இருவரையும் ஒன்றிணைத்த விட வேண்டும் என்பதற்காக முத்துவின் பாட்டி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் முத்து, மீனா இருவரும் தங்களை மறந்து ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் அதே போல் அடிக்கடி இவர்களை இடையே சண்டையும் ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ரோகினியை தனது சின்ன மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கும் நிலையில் ரோகினி தான் பெரிய கோடீஸ்வரர் வீட்டுப் பெண் எனவும் ஆனால் அவர்களுடைய உதவி இல்லாமல் தனியாக வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் பித்தலாட்ட வேலையை செய்து வருகிறார்.

ரோகினிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தனது மகன் கிட்டயும் தான் அத்தையாக கூறி பழகி வருகிறார். இவ்வாறு முத்து தங்கி இருக்கும் தனது அப்பாவின் சொந்த ஊரில்தான் ரோகிணியின் மகனும் அம்மாவும் தங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரோகினிக்கும் தனது மகனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தனது அத்தையை தேடி முத்து, மீனா தங்கி இருக்கும் ஊருக்கு தனது கணவருடன் வருகிறார்.

அப்பொழுது முத்துவின் அப்பா விஜயாவிடம் இங்கு இருக்க போற ரெண்டு நாளுல எங்க அம்மாவுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க அப்ப நான் தான் நீ கேக்குற காசு உனக்கு கிடைக்கும் என கூறுகிறார் எனவே விஜயா உன் அனைத்து வேலைகளையும் செய்து வரும் நிலையில் மீனா கூட்டிக் கொண்டிருக்கும் பொழுது என்கிட்ட கூட நான் செய்கிறேன் என விளக்கமாறு பிடித்து கூட்ட பிறகு சாணியும் கரைத்து போட சொல்கிறார்.

பிறகு தனது தோழிக்கு போன் செய்து இது எல்லாம் எனக்கு புடிக்கல பார்வதி அந்த பூ கற்றவை அவ என்னவோ எனக்கு மாமியார் மாதிரி என்ன வேலை வாங்குரா என்ன சொல்ல பிறகு விறகடுப்பில் விஜயா சமைக்க மீனா சொல்லித் தருகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு விஜயா இந்த கிராமத்திற்கு வந்திருக்கும் நிலையில் இதன் மூலம் ரோகிணியை பற்றி தெரிய அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

sirakatikka asai 4

தனக்கு ஒரு மகன் இருப்பதை மறைத்து கௌதமை திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் ரோகினி.! கண்டுபிடிப்பாரா மீனா.? முத்துவின் ரொமான்ஸ் தாங்க முடியலையே..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. கௌதம் மீனாவை திருமணம் செய்து கொள்வதாக தனது அப்பாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தனது காதலியை அழைத்துக்கொண்டு ஓடிய நிலையில் அங்கு சென்றவுடன் அவருடைய காதலி பணத்தை எடுத்துக்கொண்டு கௌதமை ஏமாற்றி விட்டு ஓடி விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தனது அண்ணன் செய்த தவறுக்காக முத்து மீனாவை திருமணம் செய்துக் கொள்கிறார் இவ்வாறு இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக முத்துவின் அப்பா தனது சொந்த ஊருக்கு முத்துவையும் மீனாவையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அங்கு பாட்டி இவர்களின் மனதை மாற்ற வேண்டும் என முயற்சி செய்கிறார். அந்த வகையில் தற்பொழுது இவர்கள் மகிழ்ச்சியாக இவர்களை அறியாமலேயே இருந்து வரும் நிலையில் மறுபுறம் முத்து இல்லாத காரணத்தினால் கௌதமின் அம்மா கௌதமுக்கு ரோகிணியை பார்த்திருக்கும் நிலையில் விரைவில் இவர்களுக்கு திருமணமாக இருக்கிறது.

மேலும் கௌதமின் அம்மா ரோகிணிக்கு பணத்தை கொடுத்து புதிதாக பியூட்டி பார்லர் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் முத்து மீனா இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அங்கே இருவரும் ஒன்றாக விளக்கேற்ற பிறகு வரும் வழியில் நாத்து நடுவதை மீனா பார்த்துவிட்டு தானும் நடுவதாக கூறுகிறார்.

எனவே மீனா அங்கு வேலை செய்பவர்களுடன் இணைந்து நாத்து நட இதனை முத்து கிண்டல் செய்கிறார் எனவே மீனா வயலில் இருக்கும் உலையை எடுத்து முத்துவின் மேல் வீசுகிறார். பிறகு முத்துவின் மேல் மீனா  உலையை வீச இருவரும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு இருவரும் சேரை கழுவி விட்டு வீட்டிற்கு செல்ல இந்த நேரத்தில் ஒரு பையன் மீனாவை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டிற்கு செல்கிறார் இந்த நேரத்தில் ரோகிணி போன் செய்கிறார் அந்தப் பையன் ரோகிணியின் குழந்தை என்பது அப்பொழுதுதான் தெரிய வருகிறது எனவே ரோகிணியை பற்றி விரைவில் மீனாவிற்கு தெரியவர இதனால் ஏராளமான பிரச்சனைகள் உருவாக உள்ளது.