தனக்கு ஒரு மகன் இருப்பதை மறைத்து கௌதமை திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் ரோகினி.! கண்டுபிடிப்பாரா மீனா.? முத்துவின் ரொமான்ஸ் தாங்க முடியலையே..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. கௌதம் மீனாவை திருமணம் செய்து கொள்வதாக தனது அப்பாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தனது காதலியை அழைத்துக்கொண்டு ஓடிய நிலையில் அங்கு சென்றவுடன் அவருடைய காதலி பணத்தை எடுத்துக்கொண்டு கௌதமை ஏமாற்றி விட்டு ஓடி விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தனது அண்ணன் செய்த தவறுக்காக முத்து மீனாவை திருமணம் செய்துக் கொள்கிறார் இவ்வாறு இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக முத்துவின் அப்பா தனது சொந்த ஊருக்கு முத்துவையும் மீனாவையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அங்கு பாட்டி இவர்களின் மனதை மாற்ற வேண்டும் என முயற்சி செய்கிறார். அந்த வகையில் தற்பொழுது இவர்கள் மகிழ்ச்சியாக இவர்களை அறியாமலேயே இருந்து வரும் நிலையில் மறுபுறம் முத்து இல்லாத காரணத்தினால் கௌதமின் அம்மா கௌதமுக்கு ரோகிணியை பார்த்திருக்கும் நிலையில் விரைவில் இவர்களுக்கு திருமணமாக இருக்கிறது.

மேலும் கௌதமின் அம்மா ரோகிணிக்கு பணத்தை கொடுத்து புதிதாக பியூட்டி பார்லர் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் முத்து மீனா இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அங்கே இருவரும் ஒன்றாக விளக்கேற்ற பிறகு வரும் வழியில் நாத்து நடுவதை மீனா பார்த்துவிட்டு தானும் நடுவதாக கூறுகிறார்.

எனவே மீனா அங்கு வேலை செய்பவர்களுடன் இணைந்து நாத்து நட இதனை முத்து கிண்டல் செய்கிறார் எனவே மீனா வயலில் இருக்கும் உலையை எடுத்து முத்துவின் மேல் வீசுகிறார். பிறகு முத்துவின் மேல் மீனா  உலையை வீச இருவரும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு இருவரும் சேரை கழுவி விட்டு வீட்டிற்கு செல்ல இந்த நேரத்தில் ஒரு பையன் மீனாவை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டிற்கு செல்கிறார் இந்த நேரத்தில் ரோகிணி போன் செய்கிறார் அந்தப் பையன் ரோகிணியின் குழந்தை என்பது அப்பொழுதுதான் தெரிய வருகிறது எனவே ரோகிணியை பற்றி விரைவில் மீனாவிற்கு தெரியவர இதனால் ஏராளமான பிரச்சனைகள் உருவாக உள்ளது.

Leave a Comment