முத்துவை கட்டிப்பிடித்து கண் கலங்கிய அண்ணாமலை.! உண்மையை தெரிந்துக் கொண்டதால் குற்ற உணர்ச்சியில் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் வேகவேகமாக மீனாவின் வீட்டிற்கு வரும் முத்து செயினை மீனாவின் தங்கச்சியிடம் கொடுத்துவிட்டு இந்த செயின் எனக்கு வேண்டாம் உங்க பொண்ணு என்னா பேச்சை பேசுறா தெருவுல நின்னுகிட்டு கத்தி எங்க அப்பாவை தலைகுனிய வச்சுட்டா என சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இதனை அடுத்து மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் போட்டு இப்போ உனக்கு சந்தோஷமா கொடுத்த செயினை கொண்டு வந்து கொடுத்துவிட்டு முத்து போனதை பற்றி கூறுகிறார். மீனா அதுல ஒரு தப்பு நடந்தது அவர் செயினை வச்சு குடிக்கல என பேச பிறகு மீனாவின் அம்மா மிகவும் கோபமாக திட்டி விட்டு ஃபோனை வைக்கிறார்.

மீனாவிடம் அண்ணாமலை நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்கிறார். கொஞ்ச நேரம் கழித்து முத்து வீட்டிற்கு வர மின் ஜெயின் என ஆரம்பிக்க அந்த செயினை எடுத்துட்டு போயிட்டு உங்க அம்மா கிட்ட கொடுத்துட்டேன் சந்தேகமா இருந்தா போன் போட்டு கேட்டுக்க என்று சொல்கிறார். அதற்கு மீனா சொல்லிட்டாங்க நீங்க செயினை வச்சு என்ன பண்ணுனீங்க என்று கேட்க அதைப்பற்றி உனக்கு எதுக்கு செயின் தான் உனக்கு வந்துடுச்சுல நீ வாயை திறக்க கூடாது என சொல்ல பரசு அங்கிள் நீங்க பணம் கொடுத்த விஷயத்தை சொல்லிட்டாரு என சொல்ல சத்தமா பேசாத அப்பாவுக்கு தெரிந்தா கஷ்டப்படுவாரு அவரால் பரசு மாமா  பணம் கொடுக்க முடியவில்லை என்று எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எனக்கு தெரியும் அதனால் தான் நான் பணம் கொடுத்தேன் இத நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா இவ்ளோ பெரிய சண்டை வந்திருக்காது என்று சொல்ல பிரண்ட்ஸ் செயின் வச்சு விஷயத்தை சொல்லாத என சொல்லி இருந்ததை முத்து கூறுகிறார்.

அதன் பிறகு முத்துக்கு சவாரி பற்றி ஒரு போன் கால் வர நான் உடனே கிளம்பி வரேன் அந்த பணம்தான் முக்கியம் பணம் இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்க என சொல்கிறார். மறுநாள் காலையில் முத்து சவாரி முடித்துவிட்டு காரிலேயே தூங்க அங்கு வரும் அண்ணாமலை முத்துவிடம் உனக்கு அப்பா மேல அவ்வளவு பாசமா என நடந்த விஷயங்களை கேட்டு முத்துவை கட்டிபிடித்து கண் கலங்குகிறார். பிறகு நீ நல்லவன் தான் மீனாவும் நல்லவ தான் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழனும் அதை நான் பார்த்துகிட்டே இருக்கணும் என்று அறிவுரை சொல்லி முத்துவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment