பெத்த மகனுக்கிட்டையே அத்தை என பொய் சொல்லி பழகும் ரோகிணி.! நகையை கொடுத்து மாட்டிக்க இருக்கும் விஜயா.. முத்துவை நினைத்து வருத்தப்படும் மீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக ஜாலியாக சுற்றிவர இந்த நேரத்தில் திடீரென வண்டி பஞ்சர் ஆகிவிடுகிறது. எனவே வேறு வழியில்லாமல் இருவரும் வண்டியை தள்ளிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் பொழுது ரோகினியின் வீடு இவர்கள் செல்லும் வழியில் உள்ளது.

வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த கிரிஷ் மீனாவை பார்த்துவிட்டு வாங்க இதுதான் எங்க வீடு என கூட்டி செல்கிறார் மீனா முத்துவையும் கூப்பிட நீ போ என முத்து சொல்கிறார் பிறகு மீனாவை அவர்களுடைய வீட்டில் விட்டுவிட்டு முத்து வண்டி பஞ்சர் ஓட்டுவதற்காக கிளம்பி விடுகிறார். மீனாவும் க்ரிஷ் உடன் விளையாடி கொண்டிருக்க ரோகிணி அவருடைய அம்மாவுக்கு திடீர் என போன் போடுகிறார்.

போன் எடுத்து அவருடைய அம்மா அவன் வளர்ந்துட்டான் இப்போ நிறைய கேள்வி கேட்கிறான் நீ தான் அம்மா என அவனுக்கு சொல்லிடு என சொல்ல ரோகிணி இதுக்குதான் நான் போன் பண்றது இல்லையென அவரை திட்டுகிறார் பிறகு கிருஷிடம் ஃபோன் கொடுக்க சொல்ல அவன் அத்தை கிட்ட பேச மாட்டேன் கோபமா இருக்கேன் என சொல்கிறான்.

அதை நீயே சொல்லிடு என்ன போன் கொடுக்க அவன் ரோகிணியிடம் தான் நீங்க தான் போன் பண்ணனும் போது எடுக்கல அதனால நான் உங்க மேல கோபமா இருக்கேன்னு சொல்லு அத்தை வேலையா இருந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். அதன் பிறகு க்ரிஷ் சரி கெஸ்ட் வந்து இருக்காங்க நான் அவங்க கூட விளையாட போறேன் என சொல்லி போனை கொடுத்துவிட்டு விளையாட ரோகினியின் அம்மா மீனா வந்து இருக்கும் விஷயத்தை சொல்கிறார்.

அதற்கு ரோகிணி யார் என தெரியாதவங்களையெல்லாம் வீட்டிற்குள்ள விட வேண்டாம் என்று சொல்லி ரோகிணி போனை வைக்கிறார். இதனை அடுத்து முத்து வீட்டிற்கு வந்து விட மீனாவை கூட்டிக்கொண்டு செல்கிறார் மறுபுறம் பார்வதி, விஜயா ரோகினிக்கு எப்படி நகை போடுவது என பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மனோஜ்க்கு வேலை போன விஷயத்தை சொன்னதால் விஜயா அதிர்ச்சடைகிறார்.

ரோகிணி தான் அத்தை கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டாம் அவங்க ஏற்கனவே நிறைய டென்ஷன்ல இருக்காங்க என்று சொன்னதாக சொல்ல பார்வதி நான் பார்த்து வச்ச பொண்ணு உன் மேல எவ்வளவு பாசமா இருக்கா பாரு கூறுகிறார். இந்த நேரத்தில் மனோஜ் ரோகினி ரொம்ப நல்லா பொண்ணு அவளுக்கு நாம செய்ய வேண்டியத செய்யணும் என்று சொல்ல அதற்கு விஜயா உனக்காக உன்னுடைய பாட்டி கிட்ட போய் கையேந்தி நிற்கப் போறேன் என சொல்ல அதற்கு மனோஜ் நன்றி சொல்கிறார்.

இதனை அடுத்து முத்து உடம்பு சூடாயிடுச்சு என்று பாட்டியிடம் எண்ணெய் தேச்சு விட சொல்ல பாட்டி மீனாவை தேய்க்க சொல்ல முத்து பாட்டிய சொன்னா நீ வந்து விடுவியா என மீனாவை திட்டுகிறார். பிறகு மேல் நான் நீங்களே தேச்சுக்கோங்க என சொல்லிவிட்டு எண்ணை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். பிறகு பாட்டியிடம் முத்து பற்றி சொல்லி வருத்தப்படாத பச்சையம்மன் அவனை மாற்று வா நீங்க இன்னைக்கும் கோவிலுக்கு போயிட்டு வாங்க என சொல்கிறார் இதோடு சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment