மீனாவை மோதி விட்டு சென்ற கார்.! அடித்து நொறுக்கிய முத்து.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் டப்பிங் முடித்துவிட்டு சுருதி ரவிக்கு போன் செய்து இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என கேட்கிறார். அதற்கு ரவி எந்த ஸ்பெஷலும் இல்லை என்று சொல்ல ஸ்பெஷலா ஏதாச்சம் செய்திருப்பீர்கள் என்று தான் போன் பண்ணுனேன் ஆனால் நீங்க இப்படி சொல்றீங்களே என சுருதி வருத்தப்படுகிறார்.

அதற்கு ரவி சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க செஞ்சு கொடுத்து அனுப்புகிறேன் என்று சுருதிக்கு பிடித்த விஷயங்களை கேட்க பிறகு சுருதி ரவிக்கு பிடித்த விஷயங்களை கேட்டு அறிந்து கொள்கிறார். சாண்ட்விச் செய்து கொடுக்க சுருதியும் சீக்கிரமாக ஹோட்டலுக்கு வந்து சந்திக்கிறேன் என சொல்லி போனை வைத்து விடுகிறார்.

அதன் பிறகு பாட்டி முத்துவையும் மீனாவையும் கோவிலுக்கு கிளம்ப சொல்ல இவர்களும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது முத்து இங்கு பக்கத்துல தான் என்னோட பிரண்டு வீடு அங்க போயிட்டு போகலாம் என்று சொல்ல மீனா அவங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போனா நீங்க என்ன நிக்க வச்சுட்டு கதை பேசிக்கொண்டே இருப்பீங்க என்னை கிரிஷ் வீட்டில் விடுங்க எனக் அவனை பாக்கணும் போல இருக்கு என்று கூற முத்துவும் கிரிஷ் வீட்டில் மீனாவை இறக்கி விட்டு விட்டு தனது நண்பனை பார்ப்பதற்காக சென்று விடுகிறார்.

கிரிஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எல்லோரும் வீட்டிற்கு கிளம்பி விட பிறகு அவன் மீனாவை விளையாட குறிப்பிட மீனாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கார் ஒன்று வேகமாக வர மீனா‌ க்ரிஷை காப்பாற்ற ஓடிப்போய் விபத்தில் சிக்கி கொள்கிறார். காரில் வந்தவர்கள் நிற்காமல் சிரித்துக் கொண்டு செல்ல இதனை பார்த்து கடுப்பான முத்து ஓடிப் போய் காரை நிப்பாட்டி காரில் இருந்தவர்களை அடித்து கூட்டிக்கொண்டு வந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

பிறகு பாட்டி செய்வது போல் எதையோ ஒரு தடையை பறித்து வந்து மீனாவின் காலில் பிழிந்து விட்டு மசாஜ் செய்து விடுகிறார். அதன் பிறகு ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர் இதனை அடுத்து மறுபுறம் சீதா கடைக்கு பூ கொடுத்து விட்டு வரும்பொழுது வழியில் ரவியை சந்திக்க இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் சீதாவின் அம்மா இவர்களை பார்த்து விட்டு ரவியை வீட்டிற்கு கூப்பிட ரவி இன்னொரு நாள் வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு மீனாவின் அம்மா சீதாவிடம் ரவி உடன் கொஞ்சம் அளவாக பேசு அவங்க அம்மா கண்டபடி பேசுவாங்க அப்புறம் அது மீனாவுக்கு தான் பிரச்சனை என்று வார்னிங் கொடுக்கிறார்.

இதனை அடுத்து மீனாவும் முத்துவும் வீட்டிற்கு வர மீனாவை டாக்டர் நடக்கக்கூடாது என்று சொன்னதால் அவர் நடக்க கஷ்டப்பட முத்து மீனாவை தூக்கிக்கொண்டு செல்கிறார். இதனை பார்த்த அன்னம் அக்காவும் பாட்டியும் சந்தோஷப்படுகிறார்கள் பாட்டி பச்சையம்மன்யிடம் பேச இதை பார்த்த முத்து என்ன பாட்டி திரும்பவும் தாத்தா கிட்ட பேசிகிட்டு இருக்காங்களா என்று கேள்வி கேட்க இல்லை பச்சையம்மனுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன் ரெண்டு நாலுல உங்களை சேர்த்து வச்சுட்டா என்று சொல்ல முத்து திருத்திருவென முழிக்கிறார் இதோடு சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment