fareena

தீ காயத்துடன் முகம்.. சீரியல் நடிகை ப்ரீனாவிர்க்கு என்ன ஆச்சு.!

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இதனை பயன்படுத்திக் கொள்ளும் சின்னத்திரை நடிகைகள் நாள்தோறும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ     க்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய ஜோடிகளுடன் இணைந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பிரபலங்களில் ஒருவர்தான் பரீனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றினை கண்டு வருகிறார்.

இந்த சீரியலின் மூலம் ஏகப்பட்ட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். அதற்கு முக்கிய காரணம் பாரதிகண்ணம்மா சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் இணைந்து பங்கு பெற்றார் இந்நிகழ்ச்சியில் நடன டாஸ்க் நடைபெற்றது அதில் பரினா தன்னுடைய முகத்தில் தழும்பு இருப்பது போல் மேக்கப் போட்டு நடனமாடியுள்ளார் இவ்வாறு மேக்கப் புகைப்படம் வீடியோவாக வெளியிட்ட ஃபரீனா உடைய வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிறகு தான் இவர் நிகழ்ச்சிக்காக இவ்வாறு மேக்கப் போட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர் நடித்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் முடிந்தவுடன் புதிய சீரியலில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் வெளியிட்ட உள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

vj-priyanga

நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன் உங்களுக்கு… கண்ணீரில் மிதக்கும் விஜய் டிவி பிரியங்கா.!

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா இவர் சமூக வலைதளத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன் நீங்கள் ஏன் இவ்வளவு என் மேல் அன்பை காட்டுகிறீர்கள் என்று கண்கலங்கி மிகவும் எமோஷனலாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் சில சின்ன தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு 2015ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிய தொடங்கினார் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் பங்கு பெற்றுத் தோட்டிய எங்கும் பிரபலமடைந்தார். மேலும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் மலேசியா சென்று இருந்த பொழுது அந்த நாட்டு மக்கள் அளித்த அன்பு அவரை கண்கலங்க வைத்துள்ளது.

அது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மலேசியா மக்கள் காட்டிய அன்பால் மகிழ்ந்து போனேன் அவர்களுக்கு நான் என்ன செய்தேன் எதற்காக அவர்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்நிலையில் எனக்கு முழு அளவில ஆதரவு கொடுத்து மலேசியா மக்கள்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தது என்னை பார்த்து கையசைத்தும் எனக்கு வாழ்த்து தெரிவித்து ஆகியவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். மலேசியா மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார் மேலும் இவர் பதிவு செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

bigg-boss-56

அசீம் மீது திருட்டு புகாரை அளித்துள்ள தனலட்சுமி.! நடுராத்திரியில் கூட வா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அசீம் செய்த திருட்டு வேலைகளை தனலட்சுமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதாவது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாரம் வாரம் டாஸ்க் கொடுப்பதை பிக்பாஸ் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு நடந்த முக்கியமான பிரச்சனைகளை கூறி வழக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் ஏற்றுக்கொண்டால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது டாஸ்க் தனலட்சுமி அசின் மீது திருட்டுப் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதாவது அதில் தனலட்சுமி கூறியதாவது பிக்பாஸ் வீட்டில் தேவையான விஷயமே உணவுதான். நீங்கள் அனுப்பும் கொஞ்சம் நஞ்ச பழங்களும், தயிரும் காணாமல் போகிறது அதனை அசீம் தான் அடிக்கடி எடுத்து சாப்பிடுகிறார். இதைப் பற்றி கேட்டால் அது அழுகிப்போன பழம் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு காரணம் சொல்கிறார்.

முக்கியமாக வாழைப்பழம் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது ஒரு நபருக்கு இரண்டு வாழைப்பழங்கள் என்று தான் கொடுக்கிறீர்கள் ஆனால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் என நினைத்துக் கொண்டு தினசரி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை நேரடியாக கேட்க முடியவில்லை பிறகு தயிரை நடுராத்திரியில் எடுத்து சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

இதனால் நான் அசீம் மீது புகார் கொடுக்கிறேன் என தனலக்ஷ்மி கூறும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அசீம் தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கிவரும் நிலையில் தற்பொழுது புதிதாக இதுவரை ஒன்றை உருவாகியுள்ளது.