இனியா ராதிகா இடையே பலத்த சண்டை.. கோபிக்கு வந்த பெருந்தலைவலி.. குஷியில் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோபி ராதிகா திருமணத்திற்கு பிறகு தான் மிகவும் சுவாரசியமாக இருந்த வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கோபி ராதிகா தங்கி இருக்கும் வீட்டில் இனியா சென்ற நிலையில் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கோபியின் அப்பாவும் சென்றுள்ளார்.

இந்நிலையில் கோபி திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு ஒரு நாள் கூட சமைக்காமல் இருந்து வந்த ராதிகாவை கோபி தன்னுடைய அப்பா இனியாவிற்காக சமைக்க வைத்துள்ளார் இதனால் ராதிகா கடுப்பில் இருந்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க பாக்கியா ராஜசேகர் சாரை பார்க்க செல்வியுடன் செல்கிறார் அப்பொழுது ராஜசேகர் ஆடர் பற்றி கேட்க பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம் அதுபோல தான் ஆர்டர் வருவதாக பாக்யா சொல்கிறார்.

பின் ராஜசேகர் இது சின்ன மஹால் அதனால் அவ்வளவுதான் வரும் என சொல்கிறார் பின் ராஜ் சேகர் என் நண்பரின் அலுவலகம் ஒன்று உள்ளது அதில் கேண்டீன் வைக்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறான் அங்கே பெண்கள் தான் பணியாற்ற வேண்டும் என்பதில் அவன் ஒரு முடிவோடு இருந்தார் நான் வேணா உங்களை சொல்கிறேன் எனக் கூற அதற்கு பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார்.

இதனைத் தொடர்ந்து மறுபுறம் இனியா மயூவிற்கு கணக்கு சொல்லி தருகிறார் அப்பொழுது ராதிகா கடைக்கு சென்று விட்டு வருகிறார். இருவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து ராதிகா சந்தோஷப்படுகிறார் பிறகு ராதிகா டேபிளில் இனியா காபி குடிக்காமல் வைத்திருப்பதை பார்த்து ஏன் குடிக்கவில்லை என கேட்க எனக்கு காபி பிடிக்காது என இனியா சொல்ல உனக்கு இன்னும் என்னெல்லாம் பிடிக்காது ஏன் என்னை எதிரி மாதிரி பார்க்கிறார் என ராதிகா கேட்கிறார்.

அதற்கு ஆமாம் நீங்கள் எனக்கு எதிரி தான் என் இனியா சொல்கிறார் பிறகு ராதிகா உன் அம்மாவிடம் இப்படித்தான் பேசுவியா என கேட்க நீங்க எனக்கு அம்மா இல்லையே என சொல்கிறார். உடனே ராதிகா கோபமாக உள்ளே செல்கிறார் பிறகு ஈஸ்வரிக்கு ஏழில் மற்றும் ஜெனி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உடனே எழில் பாட்டி கோவிலுக்கு சென்று விட்டு வரும்பொழுது யாரோ செயினை அறுக்க வந்ததாக சொல்கிறார் அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பிறகு கேண்டின் ஆர்டர் கிடைத்ததை பற்றி ஜெனி இடம் கூற அவரும் மகிழ்ச்சி அடைகிறார்.

Leave a Comment