pandiyan stores

கொடூர வில்லனாக மாறும் ஜகார்த்தனன்.! ஜீவாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிப் பரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது நான்கு கணவன் தம்பிகளும் பிரிந்து குடும்பமே சுக்கு நூறாக உடைந்து இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய மருமகன் ஜீவாவை மாற்றுவதற்காக பல முயற்சிகளை ராமமூர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் ஜீவாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் வாடிக்கையாளர் ஒருவர் போன் செய்து பேச அதற்கு ஜீவா அண்ணனுக்கு போன் செய்து பேசி கொள்ளுமாறும் இதற்கு மேல் இந்த நம்பருக்கு அழைக்க வேண்டாம் எனவும் கூறுகிறார்.

இதனை பார்த்த ஜகார்த்தனன் மீண்டும் அந்த நம்பருக்கு போன் செய்து இனிமேல் எனக்கும் அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோபப்பட்டு திட்டுகிறார். இவ்வாறு ஜீவா திட்டுனதாக நினைத்து அந்த நபரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று மூர்த்தியிடம் கூறிய நிலையில் பிறகு மூர்த்தி இதற்கு மேல் ஜீவாவுக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அனைவரிடமும் போன் செய்து கூறி விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவாவிடம் ஜகார்த்தனன் சூப்பர் மார்க்கெட் சேல்ஸ் அதிகரிக்க ஐடியா கேட்கிறார் அதற்கு ஆஃபர் ஏதாவது கொடுத்தால் அருகில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என ஜீவா கூற பிறகு என் அண்ணன் தம்பிகள் மீது கோபம் இருந்தாலும் அவர்கள் நல்லா இருக்கக் கூடாது என நினைக்க மாட்டேன் என ஜீவா கூறுவதை கேட்டு ஷாக்காகிறார்.

மேலும் ஜீவாவை மாற்ற வில்லனாக இதற்கு மேல் களம் இறங்கப் போகிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் இதனை அடுத்து ஜகார்த்தனனுடன் ஜீவா வெளியில் செல்ல அங்கு ஒருவரிடம் நீங்கள் கடைக்கு பாக்கி தர வேண்டியது இருக்கிறது எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று தந்து விடுங்கள் என கூற என்ன தம்பி இப்படி சொல்ற மூர்த்தி போன் செய்து உனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னாரு எனக் கூற ஜீவா அதிர்ச்சியடைகிறார்.

thental vanthu yennai thotum

சுடர் தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை தெரிந்துக் கொண்ட வெற்றி.! சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியல் நடிகர் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக நடிகை பவித்ரா அபி என்ற கதாபாத்திரத்தில் கலெக்டராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு முறை கோவிலில் சாமி கும்பிட சென்ற பொழுது அங்கு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் வெற்றியை தட்டி கேட்கிறார் அபி. அந்த நேரத்தில் வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் அதன் பிறகு வெற்றி மாறி தன்னுடைய மனைவி அபிக்காக வேலை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறார். பிறகு இவ்வாறு ஓடிக் கொண்டிருந்த சீரியலில் திடீரென திருப்பம் ஏற்பட்டது.

அந்த வகையில் அபி கலெக்டராக மாறி இருப்பதாகவும் கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சம்பவத்தின் பொழுது வெற்றியும் சுடரும் சந்தித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வர இதுதான் தன்னுடைய மகள் என தெரியாமல் வெற்றி சுடரின் மீது பாசத்தை வைத்து வருகிறார்.

அதேபோல் சுடருக்கும் வெற்றிதான் தன்னுடைய அப்பா என தெரியவில்லை அபி மாசமாக இருக்கும் பொழுது கருவை கலைத்து விட்டதாக கூறிய நிலையில் இதனால் அபியை வெறுத்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் சுடர்தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை வெற்றி தெரிந்துக் கொள்கிறார். எனவே என் பிள்ளை உயிருடன் தான் இருக்கிறதா என சொல்லி உடைந்து போய் கதறி அழுகிறார் அது குறித்த ப்ரோமோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அதாவது அபி தன்னுடைய மகள் சுடருடன் காரில் சென்று கொண்டிருக்க அங்கு வேண்டும் என்று அபியை கொலை செய்வதற்காக லாரி ஒன்று காரை மோதுகிறது. இதனால் அபிக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும் சுடரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் சுடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை தெரிந்துக் கொண்ட வெற்றி மருத்துவமனைக்கு வருகிறார். அதன் பிறகு போலீஸ் மூலம் சுடர் தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை வெற்றி தெரிந்துக் கொள்ள அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.