rudhran

அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ பட டிரைலர்.!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக விளங்கிவரும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்பொழுது ருத்ரன் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் தீவிரம் காண்பித்து வருகிறார்கள். மேலும் இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் டிரைலர் இரண்டு நிமிடங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில் ஆக்சன், கமர்சியல் என தேவையான அனைத்து அம்சங்களும் இருப்பது தெரிய வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதனை அடுத்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரது கெட்ட மற்றும் கேரக்டர் வித்தியாசமாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு பிரகாஷ் ராஜ் இசையமைத்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கதிர்ரேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றியை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஆர் டி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். இதோ ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட டிரைலர்.

குடித்துவிட்டு நடு ரோட்டில் கிடந்த கோபியை வீட்டிற்கு அழைத்து வந்த பாக்கியா.! அவரை அழைத்து வர நீ யாரு என கேட்கும் ராதிகா..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபியின் நிலைமை தற்பொழுது முழுவதுமாக மாறி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது ராதிகா தொடர்ந்த இனியாவை தருணுடன் பேசக்கூடாது என திட்டி வந்ததால் பிறகு இனிய ராதிகாவை எழுத்து பேச இதனால் கோபமடைந்த கோபி எப்போது பார்த்தாலும் அவகிட்ட எழுத்து பேசிக்கிட்டே இருக்க என கோபமாக கூற இதனால் வருத்தமடைந்த இனியா வீட்டை விட்டு வெளியில் வருகிறார். பிறகு பாக்கியா வீட்டிற்கும் போக முடியாது இங்கும் இருக்க முடியாது என ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரைகளை தான் போட்டுக்கொள்கிறார்.

நேரமாக ஆக பயமாக இருந்ததனால் இதனைப் பற்றி ராமமூர்த்தியிடம் கூற பிறகு அனைவரும் இனியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். பிறகு இவ்வாறு இனியா செய்ததை போன் செய்து ராமமூர்த்தி பாக்கியாவிடம் கூற பாக்கியா எழில் இருவரும் பதறி அடித்து மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இதனை அடுத்து செழியன் ஈஸ்வரி இவர்களும் செல்ல அனைவரும் கோபியிடம் சண்டை போடுகின்றனர்.

இந்த நேரத்தில் இனியா கண் முழித்தவுடன்  கோபி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல கெஞ்சுகிறார் ஆனால் இனியா பாக்யாவுடன் சென்று விட இதனால் வருத்தத்தில் இருக்கும் கோபி புல்லாக குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார். பிறகு பாக்கியாவிற்கு ஃபோன் மூலம் கோபி விழுந்து கிடப்பதை பக்கத்தில் இருப்பவர்கள் கூற பாக்யா எழில் இருவரும் செல்கின்றனர்.

அங்கு நடு ரோட்டில் கோபி இனியா நீ இல்லைனா என்னை யாரும் பார்த்துக்க மாட்டாங்க மா என உளறிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா எழில் இருவரும் இணைந்து ராதிகாவின் வீட்டிற்கு கோபியை அழைத்து வருகின்றனர். பிறகு ராதிகாவிடம் பாக்கியா குடித்துவிட்டு ரோட்டில் கிடந்ததாக கூற அதற்கு ராதிகா நீங்க யார் அவரை அழைத்து வருவதற்கு எனக் கேட்க அதற்கு பாக்யா நான் யாரும் கிடையாதது தான் ஆனால் பிரண்டோட ஹஸ்பண்ட அழைச்சுக்கிட்டு வரலாம் என கூற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

saakuntalam

மனம் சொல்லும் பேச்சைக் கேட்டு கர்ப்பமான சமந்தா.! பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் விறுவிறுப்பான காட்சிகளுடன் சாகுந்தலம் பட டிரைலர்..

நடிகை சமந்தா நடிப்பில் தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் எந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் முதன் முறையாக இவர் புராணக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தினை குணசேகரன் இயக்கியிருக்கும் நிலையில் வாசுரி திரைப்படத்தினை இயக்கிய தில்ராஜ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சாகுந்தலம் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தப் படம் மகாபாரதத்தில் சகுந்தலம் மற்றும் மன்னர் துஷ்யன் ஆகியோர்களின் காவிய காதலை மையமாக வைத்த இந்த படம் உருவாகியுள்ளது.

நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் இதனை அடுத்து தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த ட்ரெய்லரில் மனம்

சொல்லும் பேச்சைக் கேட்டு மன்னன் துஷ்யந்திடம் காதல் கொண்டு பிறகு கர்ப்பமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் காட்சிகளை பார்த்து பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

thenral vanthu yennai thotum

உண்மையை தெரிந்துக் கொண்ட வெற்றியை சூழ்ச்சியினால் ஏமாற்றிய கண்மணி.! சுடர் பாப்பாவின் நிலைமை என்ன.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் வெற்றி கோவிலில் பிரச்சனை செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அபி அதனை தட்டி கேட்பதற்காக செல்கிறார் உடனே கோபத்தில் வெற்றி அபியின் கழுத்தில் தாலியை கட்டிவிட பிடிவாதமாக வீட்டில் வந்து தங்கி இருக்கிறார்.

சில காலங்கள் கழித்து வெற்றி அபியை ஏற்றுக்கொண்ட நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் வெற்றியும் தன்னுடைய ரவுடித்தனத்தை விட்டு விட்டு அபிக்காக முழுவதுமாக மாறுகிறார் இந்த நேரத்தில் சில பிரச்சனைகளால் அபி தன் கருவை கலைத்து விட்டதாக கூற கோபத்தில் வெற்றி அபியை விட்டு பிரிந்து விடுகிறார்.

மேலும் அபி கலெக்டர் ஆனது போலவும் வெற்றிக்கு தெரியாமல் வெற்றிக்கும் தனக்கும் பிறந்த மகளை அபி வளர்த்து வருவது போலவும் கதை முற்றிலும் மாறுபட்டு ஒளிபரப்பானது. பிறகு ஒரு விபத்தின் பொழுது வெற்றி சுடர் இருவரும் பழகி வரும் நிலையில் சுடர்தான் தன்னுடைய மகள் என வெற்றிக்கும், வெற்றிதான் தன்னுடைய அப்பா என சுடர்க்கும் தெரியாது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சுடர் மருத்துவமனையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையில் இவரைப் பார்ப்பதற்காக வெற்றி வருகிறார் பிறகு மருத்துவர் சுடர்தான் கலட்டரின் மகள் எனக் கூற உடனே சுடர்தான் தனது மகள் என்பதை தெரிந்துக் கொண்ட வெற்றி கதறி என்னுடைய குழந்தை உயிருடன் தான் இருக்கிறதா என அழுகிறார்.

பிறகு சுடர் அபிக்கு பிறந்த குழந்தைதான் ஆனால் உனக்கு பிறந்த குழந்தை இல்லை என அவருடைய நண்பர் கூற பிறகு தருண் அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார் உடனே அவரை கட்டிப்பிடித்து அபி அழ பிறகு இதனை பார்த்துவிட்டு வெற்றி அங்கிருந்து செல்கிறார். மேலும் வெற்றிக்கு சுடர்தான் தன்னுடைய மகள் என தெரியக்கூடாது என்பதற்காக  கண்மணி கேரக்டரில் நடித்து வரும் ஜூலி தருண் அபிக்கு திருமணம் ஆனது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து காண்பிக்க பிறகு வெற்றியும் இதனை நம்பி விடுகிறார்.