10 வருடங்கள் கழித்து நயன்தாராவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகர்.! வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்..

நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் தற்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துவரர் நலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த ஒன்றுதான் ராஜா ராணி.

இந்த படத்தினை அட்லி கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முறையாக இயக்கியிருந்த நிலையில் பலருடைய கூட்டணியில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படத்தில் ரெஜினா என்கின்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் இவருடைய காதலராக ஜெய் நடித்திருந்தார்.

இவர்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது. இவர்களைத் தொடர்ந்து ஆரியா, நஸ்ரியா, சந்தானம் சத்யராஜ் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு பிறகு நயன்தாராவும் ஜெய் இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். அதாவது நயன்தாராவின் 75வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடிக்க இருக்கும் நிலையில் இவருடைய பிறந்தநாள் இன்று என்பதால் இதனை முன்னிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

jei
jei

தற்பொழுது இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் 75 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க நடிகர் சத்தியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தினை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Leave a Comment