குடித்துவிட்டு நடு ரோட்டில் கிடந்த கோபியை வீட்டிற்கு அழைத்து வந்த பாக்கியா.! அவரை அழைத்து வர நீ யாரு என கேட்கும் ராதிகா..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபியின் நிலைமை தற்பொழுது முழுவதுமாக மாறி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது ராதிகா தொடர்ந்த இனியாவை தருணுடன் பேசக்கூடாது என திட்டி வந்ததால் பிறகு இனிய ராதிகாவை எழுத்து பேச இதனால் கோபமடைந்த கோபி எப்போது பார்த்தாலும் அவகிட்ட எழுத்து பேசிக்கிட்டே இருக்க என கோபமாக கூற இதனால் வருத்தமடைந்த இனியா வீட்டை விட்டு வெளியில் வருகிறார். பிறகு பாக்கியா வீட்டிற்கும் போக முடியாது இங்கும் இருக்க முடியாது என ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரைகளை தான் போட்டுக்கொள்கிறார்.

நேரமாக ஆக பயமாக இருந்ததனால் இதனைப் பற்றி ராமமூர்த்தியிடம் கூற பிறகு அனைவரும் இனியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். பிறகு இவ்வாறு இனியா செய்ததை போன் செய்து ராமமூர்த்தி பாக்கியாவிடம் கூற பாக்கியா எழில் இருவரும் பதறி அடித்து மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இதனை அடுத்து செழியன் ஈஸ்வரி இவர்களும் செல்ல அனைவரும் கோபியிடம் சண்டை போடுகின்றனர்.

இந்த நேரத்தில் இனியா கண் முழித்தவுடன்  கோபி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல கெஞ்சுகிறார் ஆனால் இனியா பாக்யாவுடன் சென்று விட இதனால் வருத்தத்தில் இருக்கும் கோபி புல்லாக குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார். பிறகு பாக்கியாவிற்கு ஃபோன் மூலம் கோபி விழுந்து கிடப்பதை பக்கத்தில் இருப்பவர்கள் கூற பாக்யா எழில் இருவரும் செல்கின்றனர்.

அங்கு நடு ரோட்டில் கோபி இனியா நீ இல்லைனா என்னை யாரும் பார்த்துக்க மாட்டாங்க மா என உளறிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா எழில் இருவரும் இணைந்து ராதிகாவின் வீட்டிற்கு கோபியை அழைத்து வருகின்றனர். பிறகு ராதிகாவிடம் பாக்கியா குடித்துவிட்டு ரோட்டில் கிடந்ததாக கூற அதற்கு ராதிகா நீங்க யார் அவரை அழைத்து வருவதற்கு எனக் கேட்க அதற்கு பாக்யா நான் யாரும் கிடையாதது தான் ஆனால் பிரண்டோட ஹஸ்பண்ட அழைச்சுக்கிட்டு வரலாம் என கூற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment