suchitra12

பிக்பாஸ் அர்ச்சனாவை அலறவிட வந்துள்ளார் சுசித்ரா.! மியா மியா பூனை பாடலுடன் இதோ அதிகாரபூர்வ ப்ரொமோ

singer suchitra biggboss wild card entry video: பிக்பாஸில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா அவர்கள் நமது வெப்சைட்டில் ஏற்கனவே சொன்னது போல உள்ளே வருகிறார். மேலும் இன்று பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு பாடகி உள்ளே வருவது வீட்டிற்கு ஒரு கலகலப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா உள்ளே வரும்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்கிறார்கள்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கு எதிராக ஆரீ தலைமையில் குரூப் ஃபார்ம் ஆகி வருகிறது. இந்த நிலையில் பாடகி சுசித்ரா வருவது அர்ச்சனாவின் முகத்தில் ஒரு பயம் தெரிகிறது.

ஏனென்றால் இவர் 28 நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்து வீட்டுக்குள் என்ன நடந்தது என்பதை சரியாக கவனித்து வந்துள்ளார். பாடகி சுசித்ரா எந்த குரூப்பில் இணையபோகிறார் என்பதை பொறத்திருந்து தான் பார்க்க முடியும்.

இதோ அந்த வீடியோ.

Anirudh_Ravichander_tamil360newz.jpg

பியானோவும் நானும்!! சிரிக்காதே, என்ற பாடலுக்கு பியானோ வாசித்து வீடியோ வெளியிட்ட அனிருத்.!

Piano and I !! Anirudh playing the piano for the song ‘sirikathey’ from remo: அனிருத் இவர் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலைப் பாடி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் ஆரம்ப காலத்தில் இவர் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பின்னர் இவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான்,  ரெமோ, கோலமாவு கோகிலா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் பரவி வரும் கோரானா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடியே தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரெமோ படத்தில் அவர் பாடிய சிரிக்காதே என்ற பாடலுக்கு பியானோ வாசிக்கிறார். மேலும் “பியானோவும் நானும்… நாங்கள் இருவர் மட்டும் தான்” என அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பியானோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

andrea-tamil 360newz

த்ரில்லரில் மிரட்டும் நடிகை ஆண்ட்ரியாவின் கா டீசர்.!!

Actress Andrea’s Ka Teaser In Thriller: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.மேலும் இதை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்.

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் வெளியாக உள்ள கா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்கள் கிடையாது என ஏற்கனவே இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா படம் முழுவதும் ஒரே காஸ்ட்யூமில் தான் இருப்பார் என கூறியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசரை பார்த்தால் சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இப்படத்திற்கு சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை ஷாலோம் ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா நடித்த கா திரைப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டீசர்.

https://youtu.be/CrljkrgEBbs

 

Andrea-Jeremiah-tamil360newz

யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஆண்ட்ரியா.!! யாருக்காக என்று பாருங்கள்?

Andrea posted a video of herself singing the song “You’re the Real Hero” :ஆண்ட்ரியா ஜெரிமியா இவர் ஆரம்ப காலத்தில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடிகையாக  நடித்து வருகிறார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை,  தரமணி போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார. இவரைப்பற்றி திரையுலகில் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில படங்களுக்கு நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனா வைரஸின் காரணமாக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்த 70 போலீஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால்  அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது  கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/andrea_jeremiah/status/1260202193845657601?s=20

a.r.rahman-tamil 360 newz

கொரோனா நிவாரண நிதிக்காக பாடல் வழியாக நிதி திரட்டும் ஏ ஆர் ரகுமான்.!! வைரலாகும் வீடியோ!!

AR Rahman is raising funds for the Corona Relief Fund through song: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தினை அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டித்த வண்ணமே உள்ளது.

இதனால் வறுமையில் வாடும் கூலி தொழிலாளர்கள் தனது அன்றாட வாழ்க்கைக்கே போராடி வருகின்றனர். அவர்களக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மேலும் மத்திய மற்றும் மாநில அரசு, சுகாதாரத்தறையினர்,  காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள்,  நடிகர், நடிகைகள், பாடகர்கள் என அனைவரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பாடலை சுதர்சன் ஜோஷி எழுத, ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கத்திஜா ரஹ்மான், சிவமணி, சுருதிஹாசன், மிகா சிங், ஜோனிட காந்தி, மோகித் சவுகான், ஜாவேத் அலி, சித் ஶ்ரீராம், நித்தி மோகன் போன்ற பல பிரபல பின்னணி பாடகர்கள் பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை ஹெச்டிஎப்சி வங்கி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பாடலை ஷேர் செய்தால் ஒவ்வொரு ஷேருக்கும் 500 ரூபாய் பிரதமரின் கொரோனா நிதிக்கு செல்லுமாறு ஹெச்டிஎப்சி ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் ரகுமான் தனது ட்விட்டர் பதிவில், இந்த சவாலுக்கான நேரத்தில் இந்த பாடலை கேட்டு நம்பிக்கையுடனும்  தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆகவே ஏ ஆர் ரகுமான் அவர்கள் பல முன்னணி பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர் உடன் இணைந்து இந்த பாடலை வெளியிட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் பாடல்.