thi-legend

பிரமாண்டமாக 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தின் டிரைலர் ரிலீஸ்.! காஞ்சிபுர பட்டில் கலக்கும் நடிகை.

பிரம்மாண்டமாக 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் இப்படத்தில் நடிகை காஞ்சிபுர பட்டுப் புடவையில் கக்கியவுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

தற்பொழுது பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் அவர்கள் நடித்து அவரே தயாரித்து வரும் திரைப்படம் தான் ‘தி லெஜண்ட்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் ரிலீஸ்க்காக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா நடித்துள்ளார். இவ்வாறு இவர் பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுர பட்டுப் புடவையில் அழகிய நகைகளுடன் இருக்கும் காஸ்ட்யூமில் கலந்துக் கொண்டுள்ளார்.

legend-actress
legend-actress

இந்த விழாவின் பொழுது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் காஞ்சிபுரம் பட்டு சேலையில் உலகின் மிகச் சிறந்த அழகியாக ஊர்வசி காணப்படுகிறார் என்று தொடர்ந்து பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றும் கூறலாம்.  இந்நிலையில் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ள ‘தி லெஜெண்ட் ‘என்ற திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன் காரணமாக இத்திரைப்படத்தினை பிரமண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

rashmika-mandhana

கார்த்திக் பட வாய்ப்பை தவறவிட்ட மீனாட்சி.! சீரியல் நடிகைகளுக்கு தான் இவ்வளவு பிரச்சனை என பேட்டி..

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது அந்த சீரியல் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி.  இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி சீரியலில் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பெரும்பாலும் இவரை தற்பொழுது வரையிலும் மீனாட்சி என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் விஜய் டிவியில் நடித்திருந்தார்.  சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.  அதில் எனக்கு வந்த சினிமா வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டார்.விமல் – கயல் ஆனந்தி நடித்திருந்த மன்னர் வகையறா படத்திற்கு முதலில் ஹீரோயினாக நடிக்க இவரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம்.  ஆனால் இரு படங்களுக்கும் தன்னால் தேதி கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறது.

சீரியலில் நடிக்க வந்துவிட்டால் அந்த சீரியல் முடியும் வரை எங்கும் செல்லமுடியாது.  சினிமா வாய்ப்பு வந்தாலும் உடனே எங்களால் இதனை விட்டு விட்டு செல்ல முடியாது.  இங்கு நாங்கள் ஏற்கனவே சீரியலுக்காக தேதி ஒதுக்கி இருப்போம்.  அதனை மாற்றி தர முடியாது.

இதன் காரணமாகத் தான் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பது மிகவும் கடினம். எங்களுக்கு சீரியல் தான் முக்கியம். அதனாலேயே நல்ல வாய்ப்பு என்று தெரிந்தாலும் சில படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று மனம் வருத்தத்தின் கூறியுள்ளார்.

வருத்தத்தில் இருக்கும் ஈரமான ரோஜாவே காவியா.! அவரே வெளியிட்ட வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா. அதன்பிறகு 7 சி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’ திரைப்படத்தில் சுருதிஹாசனும் தங்கையாக நடித்திருந்தார்.

அதன்பிறகு அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன்பிறகு தான் ஈரமான ரோஜாவே சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் இந்த சீரியலில் நடித்த மிகவும் பிஸியாக இருந்த வரும் இவர் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் ஏராளமான மேக்கப் வீடியோ, டூர் சென்ற வீடியோ, ஃப்ரிட்ஜி டூர் என பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.  அந்த வகையில் அவர் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த சேனலில் கேப்ரியல்லாவுக்கு ‘இப்படி ஒரு நிலைமையா’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.  அதாவது சமீபத்தில் இவர் புதிய கார் ஒன்றை வாங்கினார் அது ரிப்பேர் ஆகி உள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் ‘ என் கார் போச்சே’ என்று சோகமாக ஆரம்பிக்கிறார்.

எந்த ஒரு புதிய பொருளை வாங்கிய உடன் பழுது ஏற்பட்டால் கஷ்டமாக தான் இருக்கும் அது கஷ்டத்தில் தான் நான் பேசுகிறேன். கார் எப்போது வாங்கப்பட்டது என்ற விவரத்தை கூறி காரில் என்னலாம் பிரச்சனைகள் ஏற்பட்டதுள்ளது என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்.  பின்பு சர்வீஸ் முடிந்த அந்த காரை ஓட்டிப் பார்த்து சரியாக இருக்கிறதா என்று செக் செய்கிறார்.

‘ நான் ஒவ்வொரு வாட்டியும் ஆட்டோவிற்கு வெயிட் பண்ணி படத்துக்குக் கூட ஒழுங்காக போக முடியல, இனி கார்ல நிம்மதியா போவேன்,  அதே மாதிரி வண்டியில எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சர்வீஸ் கொடுத்துடுங்க’ என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

LOKESH-BAPU

என்னுடைய சொந்தக் காரர்களே என்னை கைவிட்டார்கள்.! ஆனால் விஜய் சேதுபதி செய்த உதவியை என்னாலும் மறக்க மாட்டேன்.! வீடியோ வெளியிட்ட காமெடி நடிகர்.

பிரபல இளம் காமெடி நடிகருக்கு ஆப்ரேஷன் செய்ய பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் சொந்தக்காரர்கள் கூட உதவி செய்யாத நிலையில் இதனை அறிந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி அவரின் மருத்துவச் செலவை ஏற்று தற்பொழுது பூரணமாக குணமாகி உள்ள நிலையில் அந்த காமெடி நடிகர் விஜய் சேதுபதி பற்றிய நிகழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஏராளமானவர்கள் சின்னத்திரையில் மூலம் பிரபலமாகியவர்கள் என்பது தெரிந்த ஒன்று தான். அந்த வரிசையில் ஒருவர்தான் விஜே லோகேஷ் பாபு.  இவர் ஆரம்பத்தில் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

அப்படிப்பட்ட நிலையில் லோகேஷ்  பாபுக்கு திடீரென்று உடல்நிலை சரி இல்லாமல் போன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு இடது கால் மற்றும் இடது கை செயலிழந்து போனது தெரியவந்தது. இதன் காரணமாக லோகேஷ் பாபு  அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. லோகேஷ் பாபுவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.  இதன் காரணமாக இவரோட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பலரும் லோகேஷ் பாபு பற்றிய செய்திகளை கூறி பணம் தேவைப்படுகிறது உதவி செய்யுமாறு கூறினார்கள்.

VIJAY-SETHUPATHY-2
VIJAY-SETHUPATHY-2

இவ்வாறு பலரும் முடியவில்லை அதனால் விஜய் சேதுபதி மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து அவரின் மருத்துவச் செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவதாக தெரிவித்திருந்தார்.  பின்னர் அவருக்கு சிகிச்சை முடிந்த பூரணமாக குணமாகி உள்ளது.

இவ்வாறு குணமான இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அளவிற்கு சரியாகி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது சொந்த ஊர்க்காரர்கள் கூட எனக்கு உதவி செய்யாத நிலையில் விஜய் சேதுபதி உதவி செய்ததற்கு நன்றி. எனக்கூறிவிட்டு விஜய்சேதுபதிக்கு மாலை அணிந்து கேக் வெட்டி வித்தியாசமாக நன்றியை தெரிவித்துள்ளார் லோகேஷ் பாபு.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ANIRUTH

பிரபல தொகுப்பாளரை மேடையில் இருந்து ஓரம்கட்டிய அனிருத்.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிருத்.  இவர் இசையமைப்பில் வெளிவரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று வருகிறது.  இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார்.

இவ்வாறு படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.  அந்த வகையில் ரஜினி, கமல், சூர்யா, விஜய் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் தற்போது இசையமைப்பு அதுமட்டுமல்லாமல் அந்த படங்களின் புரமோஷனுக்காக நடித்தும் வருகிறார். இவர் தமிழில் பிரபலமடைந்த இவர் தற்பொழுது ஹிந்தியிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி வரும்  ஜவான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட, இருப்பதையும் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் இசையமைத்திருந்தார்.  இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் சக்சஸ் மீட் ஒன்றை வைத்திருந்தார்கள்.

அப்பொழுது அனிருத்தை பேச அழைத்த தொகுப்பாளர் விஜய் அனிருத்தை கொஞ்சம் புகழ்ந்து தள்ளினார். உடனே அனிருத் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை,  தொகுப்பாளர் விஜய்யை தள்ளி ஓரங்கட்டிவிட்டு மைக்கேல் பேச தொடங்கினார்.  இப்படி பொது மேடையிலேயே பாராமல் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

baakiya-lakshmi-210

தனது இளம் வயதிலேயே கொடூர வில்லனாக நடித்துள்ள பாக்கியலட்சுமி கோபி.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதுவும் முக்கியமாக கோபி கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் சதீஷ் தொடர்ந்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதாவது கோபி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.  இவர் எப்படியெல்லாம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றுகிறார் என்பதை மையமாக வைத்துதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் கோபி கேரக்டரும் ஒன்று தான்.  இவருக்கு இந்த சீரியலின் மூலம் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் தொடர்ந்து இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் ரசிகர்களுக்கு நான் நிஜ வாழ்க்கையில் இப்படி கிடையாது அவர் ஸ்கிரிப்ட் தராங்க அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற இதற்கு ஏன் என்ன திட்டுறீங்க என்று பலமுறை ரசிகர்களிடம் கூறி வருகிறார். சதீஷ் இந்த சீரியலுக்கு முன்பே மற்றொரு சீரியலிலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

அதாவது இவருடைய இளம் வயதில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் வில்லனாக நடித்திருக்கிறார்.  மேலும் அந்த சீரியலில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் அந்த சீரியல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.