பிரம்மாண்டமாக 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் இப்படத்தில் நடிகை காஞ்சிபுர பட்டுப் புடவையில் கக்கியவுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
தற்பொழுது பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் அவர்கள் நடித்து அவரே தயாரித்து வரும் திரைப்படம் தான் ‘தி லெஜண்ட்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் ரிலீஸ்க்காக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா நடித்துள்ளார். இவ்வாறு இவர் பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுர பட்டுப் புடவையில் அழகிய நகைகளுடன் இருக்கும் காஸ்ட்யூமில் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த விழாவின் பொழுது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் காஞ்சிபுரம் பட்டு சேலையில் உலகின் மிகச் சிறந்த அழகியாக ஊர்வசி காணப்படுகிறார் என்று தொடர்ந்து பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றும் கூறலாம். இந்நிலையில் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ள ‘தி லெஜெண்ட் ‘என்ற திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன் காரணமாக இத்திரைப்படத்தினை பிரமண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.