கார்த்திக் பட வாய்ப்பை தவறவிட்ட மீனாட்சி.! சீரியல் நடிகைகளுக்கு தான் இவ்வளவு பிரச்சனை என பேட்டி..

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது அந்த சீரியல் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி.  இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி சீரியலில் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பெரும்பாலும் இவரை தற்பொழுது வரையிலும் மீனாட்சி என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் விஜய் டிவியில் நடித்திருந்தார்.  சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.  அதில் எனக்கு வந்த சினிமா வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டார்.விமல் – கயல் ஆனந்தி நடித்திருந்த மன்னர் வகையறா படத்திற்கு முதலில் ஹீரோயினாக நடிக்க இவரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம்.  ஆனால் இரு படங்களுக்கும் தன்னால் தேதி கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறது.

சீரியலில் நடிக்க வந்துவிட்டால் அந்த சீரியல் முடியும் வரை எங்கும் செல்லமுடியாது.  சினிமா வாய்ப்பு வந்தாலும் உடனே எங்களால் இதனை விட்டு விட்டு செல்ல முடியாது.  இங்கு நாங்கள் ஏற்கனவே சீரியலுக்காக தேதி ஒதுக்கி இருப்போம்.  அதனை மாற்றி தர முடியாது.

இதன் காரணமாகத் தான் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பது மிகவும் கடினம். எங்களுக்கு சீரியல் தான் முக்கியம். அதனாலேயே நல்ல வாய்ப்பு என்று தெரிந்தாலும் சில படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று மனம் வருத்தத்தின் கூறியுள்ளார்.

Leave a Comment