baakiyalakhmi-47

கண்ணீரில் மிதக்கும் ஈஸ்வரி… ராதிகாவை தல மொழுக சொன்ன ராமமூர்த்தி.! விடிய விடிய கதை கேட்டு விட்டு மறுபடியும் ராதிகாவுக்கு ஜால்ரா அடிக்கும் கோபி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

pandiyan stores 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்வளவு பெரிய பண்ணை வீடா.! வைரல் வீடியோ..

வெள்ளித்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் இருந்து வருகிறார்கள். அப்படி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுஜிதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது பல திருப்பவர்களுடன் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கூட்டு குடும்ப கதையினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது இவ்வாறு இந்த சீரியலில் மூத்த அண்ணியாக குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் தனம் கேரக்டர் அமைந்துள்ளது.

தனம் தனது ஒட்டுமொத்த குடும்பத்தில் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ வேண்டும் எனவும் அனைவரையும் அனுசரித்து விட்டுக் கொடுத்திருக்கும் மனப்பான்மையில் இருந்து வருகிறார். இவ்வாறு தனத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. சீரியலில் ஏராளமான கேரக்டர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வந்தாலும் தனம் கேரக்டரில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் கலக்கி வருகிறார். இவ்வாறு பல ஆண்டு காலங்களாக சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் புதிய பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்தார்.

அந்த வீட்டின் பூஜை குறித்த வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்பொழுது யூடியூப் சேனலில் தனது பண்ணை வீட்டை காட்டியுள்ளார் மேலும் அதில் நெல்லிக்காய், மாம்பழம் என நிறைய மரங்களும், செடிகளும் உள்ளது. இதோ அந்த வீடியோ..

thamizhum-saraswathiyum-54

அர்ஜூனின் சூழ்ச்சியினால் மகனிடமே மல்லுக்கட்டும் கோதை.. உயிரே போனாலும் ஜெயிக்கணும்….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் கோதை தமிழ் இருவரும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அசோசியேஷன் எலக்சன் நடைபெற உள்ளது.  அர்ஜுனின் சூழ்ச்சி வலையில் சிக்கி அம்மாவிற்கு எதிராகவே தேர்தலில் நிற்கிறார் தமிழ். இதனை அறிந்த கோதை மிகவும் கோபத்தில் உள்ளார்.

இதனால் குடும்பத்தில் அனைவரும் தமிழுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கோதையை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என வெறியுடன் உள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து நமச்சி தமிழ் வீட்டு வேலைக்கார பொண்ணு அபியை நினைத்து வருந்துகிறார். இந்த சூழலில் நமச்சி சோகமாக உள்ளார் அப்போது இதனை அறிந்த  தமிழும் சரஸ்வதியும் உன் மனதில் உள்ள காதலை சீக்கிரமாக அபி இடம் தெரியப்படுத்து என கூறுகின்றனர்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது தமிழ், சரஸ்வதி, நமச்சி மூவரும் எலக்சனுக்காக நாமினேஷன் செய்ய சென்றிருக்கிறார்கள். செய்துவிட்டு வெளியில் வர இவர்களை தொடர்ந்து கோதை, நடேசன், கார்த்தி, அர்ஜுன் ஆகியோர்களும் நாமினேஷன் செய்கிறார்கள் பிறகு வெளியில் வந்தவுடன் கோதை தமிழையும் சரஸ்வதியும் எதிரி போல் முறைத்து பார்க்கிறார்.

பிறகு வீட்டிற்கு சென்றவுடன் என்ன ஆனாலும் சரி இந்த எலக்சன்லில் ஜெயித்தே ஆக வேண்டும் அப்படி ஜெயிக்கவில்லை என்றால் என் உயிர் போறதுக்கு சமம் என் நேர்மைக்கு பரீட்சை வைத்திருக்கிறான் எனவே ஜெயிச்சு ஆக வேண்டும், எழுத்து நின்னு ஜெயிக்க முடியாதுன்னு அவனுக்கு காமிக்க வேண்டும் என மிகவும் கோபமாக கூற  இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு கோதை தமிழை எதிரியாக நினைத்து எலக்ஷனில் தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதை பார்த்து அர்ஜுனனின் குடும்பத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

BAAKIYALAKSHMI97

போலீசை வரவைத்து கெத்து காட்டும் ராதிகா.! அசிங்கப்பட்டு நிற்கும் ஈஸ்வரி குடும்பம்.. கோபி என்ன செய்வார்.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சும்மாவே ஆட்டம் போட்டு வந்த ராதிகாவை மேலும் உசுப்பேத்தி இருக்கிறார் ஈஸ்வரி. அதாவது எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பாக்கியா தங்கி இருக்கும் வீட்டில் ராதிகா கோபியுடன் வாழ்ந்து வருகிறார் எனவே ராதிகா மிகவும் திமிராக பாக்யாவிடம் அடிக்கடி வம்பு வலத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இது கோபியின் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவின் செயலை பார்த்த கோபியின் அம்மாவான ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்காமல் போன நிலையில் பொறுமையை இழந்த இவர் ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். இவ்வாறு இதனை எதிர்பாராத ராதிகா தனது அம்மாவிடம் கூறி புலம்ப அதற்கு அவருடைய அம்மா இதனை இப்படியே விட்டால் சரியாகாது நீ கொஞ்சம் பொறுமையா இரு நான் வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இந்த நேரத்தில் ராதிகா அழுதுக் கொண்டே ரோட்டில் ஓரத்தில் நிற்க இதனை பார்த்த கோபி என்ன ஆச்சு என கேட்க உங்க அம்மா என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள் எனக் கூறி கட்டிப்பிடித்து அழுகிறார். இதனைக் கேட்ட பிறகு கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று ஈஸ்வரி இடம் ஞாயம் கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இனிமேல் அவ பண்றத என்னால சகிச்சுக்கிட்டு இருக்க முடியாது ஒன்னு இந்த வீட்ல அவ இருக்கணும் இல்லன்னா நான் இருக்கணும் என்னன்னு நீயே முடிவு பண்ணி சொல்லு என கூறினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகாவின் அம்மா போலீசை கூட்டிட்டு வர பின்பு போலீஸ் சட்டப்படி ராதிகா தான் கோபியின் மனைவி அதனால் அவரை இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் யாருக்கும் இல்லை இனிமேல் ராதிகா இங்குதான் இருப்பார் என சொல்லி விடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பாக்கியா தயங்கி நிற்கும் நிலையில் ராதிகா மிகவும் திமிராக பார்த்துகிட்டு உள்ளே செல்கிறார். இவ்வாறு இந்த பிரச்சனை நடந்திருக்கும் நிலையில் கோபி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மறுபுறம் ராதிகாவின் ஆட்டம் இதற்கு மேல் தாங்க முடியாது.

thenral-vanthu-yennai-thotum-243

முட்டாளா இருந்துகிட்டு நீ எல்லாம் ஒரு கலெக்டர்.! அபி செய்த கேவலமான செயலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெற்றி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அபி, வெற்றி இருவரும் நடுக்கடலில் போட்டியில் சிக்கிக் கொண்டுள்ளனர் எனவே இவர்களை யார் காப்பாற்றுவார்கள் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அபி மூளை இல்லாமல் செய்து வரும் செயல்களைப் பார்த்து வெற்றி கடுப்பாகி உள்ளார்.

அதாவது அபி தொடர்ந்து பல எதிரிகளுக்கு எதிராக போராடி வந்த நிலையில் இவரை பழிவாங்க வேண்டும் என பலரும் முயற்சித்து வந்தனர் எனவே அபியின் உயிருக்கு ஆபத்து இருப்பதனால் பல போலீஸ்கள் காவலுக்கு போட்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அனைத்து போலீஸ்சைம் அடித்து விட்டு ரவுடிகள் அபியை கடத்தி செல்கிறார்கள்.

நடுகடலில் போட்டியில் அழைத்துச் செல்ல இதனைத் தெரிந்து கொண்ட வெற்றி விரைந்து வந்து அபியை காப்பாற்ற முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் ரவுடிகள் அபியை தூக்கி நடு கடலில் வீசி விடுகிறார்கள். எனவே அபியை காப்பாற்றுவதற்காக வெற்றியும் கடலில் குதித்து விடுகிறார். ஒரு வழியாக அபியை காப்பாற்றிய நிலையில் இவர்கள் செல்லும் போட்டில் இருந்த டீசல் தீர்ந்து விடுகிறது.

எனவே நடு கடலில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை இருக்கிறது எனவே அதனை வைத்து ஒரு வாரத்திற்கு வைத்துக் கொண்டாலும் விரைவில் போலீஸ் அவர்களை மீட்டு விடுவார்கள் என நினைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிக்கு தெரியாமல் அபி குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை வைத்து குளித்து விடுகிறார் எப்படி இவ்வளவு பிரஷ்ஷா இருக்கா என வெற்றி கேட்க அதனால் தான் குளித்தேன் கொஞ்சம் தண்ணி இருக்குனு சொன்னில அதை வைத்து குளித்து விட்டேன் என கூறியவுடன் வெற்றிக்கு அதிர்ச்சி ஆகிறது.

உனக்கு எல்லாம் அறிவு இல்லையா நம்ப இந்த போட்ல இருக்கிற வரையும் தண்ணீர் தான் நமக்கு ரொம்பவும் முக்கியம் அதை வச்சு குளிச்சிட்டியே என கூறுகிறார். அதற்கு அபி போலீஸ் வந்து நம்மளை சீக்கிரம் மீட்டு விடும் எனக் கூற உன்னை காப்பாத்துனது நான்தான் போலீஸ்லாம் வராது என சொல்ல நீ எல்லாம் எப்படி கலெக்டர் ஆனாயோ தெரியல என கூறி திட்டிகிறார் இதோ அந்த ப்ரோமோ..