போலீசை வரவைத்து கெத்து காட்டும் ராதிகா.! அசிங்கப்பட்டு நிற்கும் ஈஸ்வரி குடும்பம்.. கோபி என்ன செய்வார்.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சும்மாவே ஆட்டம் போட்டு வந்த ராதிகாவை மேலும் உசுப்பேத்தி இருக்கிறார் ஈஸ்வரி. அதாவது எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பாக்கியா தங்கி இருக்கும் வீட்டில் ராதிகா கோபியுடன் வாழ்ந்து வருகிறார் எனவே ராதிகா மிகவும் திமிராக பாக்யாவிடம் அடிக்கடி வம்பு வலத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இது கோபியின் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவின் செயலை பார்த்த கோபியின் அம்மாவான ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்காமல் போன நிலையில் பொறுமையை இழந்த இவர் ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். இவ்வாறு இதனை எதிர்பாராத ராதிகா தனது அம்மாவிடம் கூறி புலம்ப அதற்கு அவருடைய அம்மா இதனை இப்படியே விட்டால் சரியாகாது நீ கொஞ்சம் பொறுமையா இரு நான் வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இந்த நேரத்தில் ராதிகா அழுதுக் கொண்டே ரோட்டில் ஓரத்தில் நிற்க இதனை பார்த்த கோபி என்ன ஆச்சு என கேட்க உங்க அம்மா என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள் எனக் கூறி கட்டிப்பிடித்து அழுகிறார். இதனைக் கேட்ட பிறகு கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று ஈஸ்வரி இடம் ஞாயம் கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இனிமேல் அவ பண்றத என்னால சகிச்சுக்கிட்டு இருக்க முடியாது ஒன்னு இந்த வீட்ல அவ இருக்கணும் இல்லன்னா நான் இருக்கணும் என்னன்னு நீயே முடிவு பண்ணி சொல்லு என கூறினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகாவின் அம்மா போலீசை கூட்டிட்டு வர பின்பு போலீஸ் சட்டப்படி ராதிகா தான் கோபியின் மனைவி அதனால் அவரை இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் யாருக்கும் இல்லை இனிமேல் ராதிகா இங்குதான் இருப்பார் என சொல்லி விடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பாக்கியா தயங்கி நிற்கும் நிலையில் ராதிகா மிகவும் திமிராக பார்த்துகிட்டு உள்ளே செல்கிறார். இவ்வாறு இந்த பிரச்சனை நடந்திருக்கும் நிலையில் கோபி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மறுபுறம் ராதிகாவின் ஆட்டம் இதற்கு மேல் தாங்க முடியாது.

Leave a Comment