மூர்த்தி முன்பு கண்ணனை இழுத்து வந்து நிறுத்திய தனம்.! ஐஸ்வர்யாவை வண்ட வண்டயாக கேள்வி கேட்ட முல்லை.. இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் கதிர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுவிட்டார். ஆனால் கதிர் வேலை விஷயமாக வெளியே சென்று விடுகிறார் தனம் எப்படி மூர்த்தியிடம் சொல்வது எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் முல்லை என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்.

மூர்த்தி வேலை முடிந்து வீட்டிற்கு வருகிறார் இதை எப்படி சொல்வதென்று தெரியாமல் முழிப்பிதுங்கி நிற்கிறார் தனம். இந்த நிலையில் சாப்பாடை எடுத்து வையுங்க சாப்பிடலாம் என கூறிவிட்டு கை கழுவு செல்கிறார் மூர்த்தி அந்த சமயத்தில் முல்லை நீங்க எப்படி சொல்லப் போறீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் முல்லை அதற்கு தனம் அவர்களை கூட சமாளிச்சுடலாம்  நீ கேட்கிற கேள்வியை தான் என்னால சமாளிக்கவே முடியல என கூறுகிறார்.

தனம் ஒரே ஒரு தட்டை மட்டும் எடுத்து வைப்பதால் உங்க கொழுந்தனுக்கு சாப்பாடு கொடுக்கலையா ஒரு தட்டு மட்டும் எடுத்து வைக்கிறீங்க என முல்லை கேட்க அவன் அப்பவே சாப்பிட்டான் எனக் கூறி விடுகிறார். எந்த வேலை எப்படி இருந்தாலும் சாப்பாடு வேலை கரெக்டா முடிஞ்சிரும் என முல்லை கிண்டல் அடிக்கிறார். மூர்த்தி சாப்பிட உட்கார்ந்து பிறகு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அப்பொழுது ஏதேதோ கூறிக்கொண்டு எப்படியாவது விஷயத்தை சொல்ல வேண்டும் என  முயற்சி செய்கிறார் தனம்.

கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வரலாம் என தனம் சொல்ல அதற்கு மூர்த்தி கடுப்பாகி திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் அவன் செஞ்ச செயலுக்கு அவன வெட்டியே போட்டு விடுவேன் எனக் கூறுகிறார் இதனால் அதிர்ச்சடைகிறார் தனம். அதுமட்டுமில்லாமல் அவன் தனியா போகனும் முடிவு பண்ணி தானே ஏதோ பேசி போனா அவனே சமாளிச்சுப்பான் என கூறி விடுகிறார்.

பிறகு சாப்பிடற நேரத்துல அவன பத்தி ஏன் பேசுற என மூர்த்தி கோபப்பட்டு எழுந்து செல்கிறார் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா அவனால தானே கதிர் ஜெயிலுக்கு போனா என கூறுகிறார் மூர்த்தி. எதோ சொல்ல வந்ததை சொல்லு என கூற ஒரு நிமிஷம் இருங்க என கண்ணனை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார் தனம் அப்பொழுது மூர்த்தி அதிர்ச்சி அடைந்து கத்துகிறார் இவனை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த இவனை வெளிய போக சொல்லு என  கூறுகிறார்.

அதிர்ச்சி அடைந்த தனம் நம்ம புள்ள தப்பு செஞ்சுவிட்டது என்பதற்காக அதை நியாயப்படுத்த முடியாது உங்களை விட கதிர் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கான் அவன் தான் கண்ணனை இங்க கூட்டி கொண்டு வந்தான் எனக் கூற அதற்கு மூர்த்தி தனியா முடிவெடுக்க ஆரம்பிச்சுட்டாரு அவங்க வீடு தானே அவங்க யாரை வைக்கணும் யாரை வைக்க கூடாது என்பது அவனுக்கு  தெரியும் என கோபப்படுகிறார் மூர்த்தி.

இதற்கிடையில் முல்லை ஐஸ்வர்யாவை பார்த்து சீரியல் பாக்கணும்னு அங்கேயே இருந்திருக்கலாம் இல்ல என பதிலுக்கு பதில் பேசுகிறார் இதனால் ஐஸ்வர்யா கடுப்பாகிறார் அதுமட்டுமில்லாமல் அண்ணனுக்கு பிடிக்குதோ இல்லையோ உங்களுக்கு சுத்தமா பிடிக்கலையா அக்கா எங்களை என ஐஸ்வர்யா முல்லையை பார்த்து கேட்கிறார். கதிர் கண்ணனை அழைத்து வந்ததற்கு காரணம் இப்படியே விட்டால் இன்னும் மோசமாகிடுவான் என்பதற்காக தான் என மூர்த்தி இடம் தனம் புரிய வைக்கிறார்.

ஆனாலும் மூர்த்தி அவன் செஞ்சது தப்பு தான் அதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் கூட தெரியாதா இப்ப அவன் வந்திருக்கிறது காரணம் எங்கேயாவது கடன் வாங்கி வச்சிருப்பான் அதனாலதான் வந்திருப்பான் என மூர்த்தி கூறுகிறார். அவன ஃபர்ஸ்ட் வெளியில போக சொல்லு என மூர்த்தி கோவத்துடன் கத்துகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment