SHIVANI NARAYANAN 009

ஷிவானி நாராயணனை வர்ணித்து பாடிய ரசிகர்.! வெட்கப்பட்டு சிரித்த நடிகை.

தற்போது சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகைகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி  நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு மிகவும் பிஸியாக நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கமலின் விக்ரம், வடிவேலுவின் படம் ஒன்று, ஆர்கே பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவ்வாறு முன்னேறி உள்ள இவருக்கு ரசிகர் ஒருவர் ஷிவானி நாராயணன் புகைப்படத்தை வர்ணித்து அவருக்கு பரிசளித்துள்ளார்.அதோடு பரிசில் எழுதியிருந்த கதையை அப்படியே பாட்டாக பாடி ஷிவானி நாராயணனை வர்ணித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara samantha 1

சமந்தாவை கட்டியணைத்தபடி கொஞ்சி விளையாடும் நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.

பொதுவாக சினிமா என்றாலே ஏராளமான நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விவாகரத்தை பெற்று ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஏற்படுத்திய ஒன்றுதான் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து.

நடிகை சமந்தா தி பேமிலி மேன் 2 திரைப்படத்தில் மிகவும் மோசமாக நடித்ததால் தான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. விவாகரத்திற்கு பிறகு அதிகமான மன உளைச்சலில் இருந்த சமந்தா தொடர்ந்து கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  கிளாமரில் புகுந்து விளையாடும் இவர் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இதனை சரியாக விக்னேஷ் சிவன்  பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி மற்றும் சம்பந்தம் மூவரும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் சமந்தாவை விக்னேஷ் சிவன்  கிளாமர் வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் நயன்தாராவை மட்டும் குடும்பப் பெண் போல் அழகாக புடவையில் நடிக்க வைத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தினை பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி ரசிகர்கள் இணையதளத்தில் தொடர்ந்து லைவ் ஷாட்டில் பேசி வந்தார்கள்.

அந்த வகையில் சமந்தாவிடம் இத்திரைப்படத்தினை கேட்கும்பொழுது நயன்தாராவை பற்றி மிகவும் பெருமையாக பேசி அதோடு மட்டுமல்லாமல் அவருடன் கட்டி அணைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.