பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அனைவரும் வியக்கும்படி பதிலளித்த நஸ்ரியா.! பாராட்டும் ரசிகர்கள்.

புதிய திரைப்படத்திற்காக பேட்டியளித்த பொது பத்திரிகையாளர் ஒருவர் மிகவும் சங்கடமான கேள்வி கேட்டு இருந்தாலும் அதற்கு மிகவும் சுலபமாக பதில் சொல்லி தற்போது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருபவர் தான் பிரபல நடிகை நஸ்ரியா.இவர் தமிழில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு இவரின் சிறந்த நடிப்பினால் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் போன்ற நிக்கா உள்ளிட்ட இன்னும் பல படங்களில் தொடர்ந்து நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக தன்னை நிலை நாட்டினார். பிறகு 2014ஆம் ஆண்டு திடீரென்று மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா  இருவருக்கும் பத்து வயதிற்கு மேல் டிஃபரண்ட் இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் நஸ்ரியா பணத்திற்காக தான் இப்படி ஒரு திருமணத்தை செய்து கொண்டார் என்று கூறிவந்தார்கள். அதற்கும் தக்க பதிலடியை கொடுத்து நஸ்ரியா தற்போது வரையிலும் அவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

பிறகு தற்பொழுது ரொமான்ஸ் இருக்கும் திரைப்படங்களில் நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல நடிகர் நானி நடித்துள்ள அன்டே சுந்தரனிகி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ளது.  அந்த வகையில் அடடே சுந்தரா மற்றும் ஆஹா சுந்தரா என பெயரிடப்பட்டுள்ளது.நானி நடித்துள்ள இத்திரைப்படம் தமிழில் ஜூன் 10ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் நஸ்ரியா பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

தற்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு எப்படி கிறிஸ்துவ பெண்ணாக நடித்துள்ளீர்கள் திரைப்படத்தில் எப்படி எல்லாம் சிரமப்பட்டீர்கள்,எதற்காக இந்த கேரக்டரை தேர்ந்தெடுத்தீர்கள் என தொடர்ந்து கேட்டு வந்தார்கள். உடனே நான் சரியா நான் ஸ்கிரிப்ட்டை விரும்பினேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது, திரைப்படத் துறை பற்றிய விவேக் எனக்கு தெளிவாக கூறினால் அதனை விரைவில் புரிந்து கொண்டேன் எனவே லீலா தாமஸ் வேடத்தில் நடித்தது எனக்கு அவ்வளவு கஷ்டமாக இல்லை என்று கூறியிருந்தார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்  இத்திரைப்படத்தினை தயாரிக்க விவேக் ஆத்ரேயா இயக்கி வருகிறார். நஸ்ரியா மற்றும் விவேக் இருவரும் கிறிஸ்தவ மற்றும் இந்து வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் காதல் மற்றும் காமெடி நிறைந்த திரைப்படமாக அமைந்துள்ளது.

Leave a Comment