தங்களது திருமண தேதியை அறிவித்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் மிகவும் ட்ரெண்டிங்கான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம்  காதலிக்க தொடங்கினார்கள். இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கிய நிலையில் இருவரும் அந்த நேரத்தில் அதிக நேரம் தனியாக பேசி வந்ததால் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

பிறகு தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களை தயாரித்து வந்தனர் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது.  விக்னேஷ் சிவன் தொடர்ந்து இயக்கி வரும் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் வரும்  28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வந்தார்கள். பிறகு திடீரென்று எந்த ஒரு சத்தமும் இல்லாமல் இவர்கள் இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்டார்கள்.  பிறகு சில நாட்கள் கழித்து தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர்களின் திருமணத்தை நீண்ட நாட்கள் கழித்து ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளார்கள். இவர்களின் திருமணம் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா அல்லது வெளிநாட்டில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு திருமணத்தைப் பற்றி வெளிவந்தாலும் நிச்சயதார்த்தம் போலவே திருமணமும் யாரும் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் அமைதியாக நடத்துவார்களா அல்லது பிரமாண்டமாக நடத்துவார்களாக என்று விரைவில் தெரியவரும். அந்த வகையில் இவர்களின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் காத்து 2 காதல் படம்தான் இவர்களின் கடைசி படமாக இருக்கும்.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் இருவரும் இணைந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருவார்கள் ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடித்து வந்தால் அவர்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.

Leave a Comment