ethir neechal

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் வில்லத்தனத்தை பார்த்திருப்பீங்க.. ரொமான்ஸ்சை பார்த்தது இல்லையே.! வைரல் வீடியோ

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு வீட்டின் அடிமைகளாக நடத்தி வரும் ஆண்களையும், ஆண்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

எனவே இந்த சீரியலை பார்த்து விட்டு தனது மனைவி தன்னை ஆதி குணசேகரன் ஆகவும் அவளை ஜனனியாகவும் நினைத்துக் கொண்டு சண்டை போடுவதாக ஆண்கள் கூறி வருகிறார்களாம். எனவே இந்த சீரியலை விரைவில் நிறுத்த வேண்டும் என கூறிவரும் நிலையில் ஆனால் அதே நேரத்தில் பெண்களின் ஆதரவுடன் டிஆர்பி யில் முன்னணியும் வகித்து வருகிறது.

இவ்வாறு இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு ஆதரவை பெற்றதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரன் மற்றும் ஜனனி கேரக்டர் தான். ஆதி குணசேகரன் வில்லனாக அனைத்து பெண்களையும் அடைக்கி வரும் நிலையில் ஜனனி ஆதி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு போராடி வருகிறார் எனவே இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் சாருபாலா மீது காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர் படிக்காதவன் என்பதனால் சாருபாலா திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் எனவே தான் குணசேகரன் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு தனது வீட்டில் அடிமைகளாக நடத்தி வருகிறார்.

இவ்வாறு ஒரு எபிசோடில் சாருபாலா மற்றும் ஆதி குணசேகரன் இருவரும் சந்தித்து பேசி இருப்பார்கள் அதிலிருந்து எடிட் செய்து ஆதி குணசேகரன் ரொமான்ஸ் செய்வது போல் ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி இருக்கும் நிலையில் அதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இதனை பார்த்த ரசிகர்கள் ஆதி குணசேகரனின் வில்லத்தனத்தை மட்டும் தான் பார்த்திருப்பீர்கள் ரொமான்ஸ்சை பார்த்ததில்யே என கேலியாக கூறி வருகிறார்கள்.

aruvi

நடிகைகளுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்ட அருவி சீரியல் இயக்குனர்.! வைரல் வீடியோ..

தற்பொழுதுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சேனல் தான் சன் டிவி. கடந்த 25 வருடங்களாக பல வெற்றி சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அருவி.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி சீரியல்கள் ஒரு பக்கம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தாலும் அதே போல் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர்.

இவ்வாறு பிரபலமடைந்த உடன் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது அருவி சீரியல் நடிகைகள் நடனமாட அவர்களுடன் இணைந்து இயக்குனரும் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதனை அந்த நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது அருவி சீரியலில் அம்பிகா, ஜோதிகா லிவிங்ஸ்டன், கார்த்திக் வாசுதேவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்பொழுது இந்த சீரியலினை ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வரும் நிலையில் பொதுவாக இயக்குனர்களை பொதுவெளியில் பார்க்க முடியாது.

ஆனால் தற்பொழுது சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து ரிலீஸ் வீடியோ ஆடியோ உள்ளார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ஜீவிதா இருவரும் இணைந்து காக்கிநாடா கட்டை என்ற பாடலுக்கு சம குத்தாட்டம் போட அதற்கு ராமச்சந்திரன் கியூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் அருவி சீரியல் இயக்குனரா இப்படி ரியாக்ஷன் தருவது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..