பிரபல ஹீரோ தான் என்னை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்..? உண்மையை உடைத்த சுந்தரி சீரியல் நடிகை.?

பொதுவாக சினிமாத்துறை என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் என்ற கலாச்சாரம் தலைவிரித்து ஆடி வருகிறது, ஒரு நடிகைக்கு பட வாய்ப்பு வேண்டும் என்றால் அவர்களை அட்ஜஸ்மெண்டுக்கு இயக்குனர் முதல் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் அழைக்கிறார்கள் இது குறித்து பல நடிகைகள் மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அப்படி பேசினால் அட்ஜஸ்ட்மென்ட் குறையும் என நடிகைகள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் என்னதான் பேசினாலும் சில நடிகர் இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமா துறையை தாண்டி சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் கூட பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் அது பற்றி புகார் கூற தொடங்கி விட்டார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகளை தங்களுடைய ஆசைக்கு பயன்படுத்தி பட வாய்ப்பு தராமல் பலரை விரட்டி உள்ளார்கள் அவர்கள் வேறு வழியில்லாமல் ஓபன் ஆக புகார் கூறி வருகிறார்கள். என்ன தான் புகார் அளித்தாலும் இந்த பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி தான் தற்போது சீரியல் நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் அழைத்த நடிகர் ஒருவரை வெளிப்படையாக கூறியுள்ளார், தற்பொழுது ஆனந்த ராகம், சுந்தரி ஆகிய சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா தற்பொழுது ஹீரோ ஒருவர் தன்னை அட்ஜஸ்மெண்டுக்காக அணுகியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் ரெகமெண்ட் செய்கிறேன் எனக்கூறி போன் நம்பரை வாங்கியுள்ளார். அவர் தொடர்ந்து மெசேஜ் செய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார் சுதாகரித்துக் கொண்ட அந்த நடிகை அந்த நம்பரை பிளாக் செய்து உள்ளார்.

ஆனால் அந்த நடிகர் எல்லை மீறி சென்றதால் வேறு வழியில்லாமல் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே பிளாக் செய்து உள்ளார் ஆனால் அந்த நடிகர் படத்தின் ஷூட்டிங்கிற்கு ரிகானாவை அழைக்கவே இல்லையாம் இருந்தாலும் இந்த ஹீரோவின் பெயரை மட்டும் ரிகானா கூறவில்லை.

sundari3
sundari3

Leave a Comment