ஆதிரைக்கு ஆப்பு வைத்த குணசேகரன்.! கரிகாலனுக்கு சரியான டிவிஸ்ட் பரபரப்பாகும் எதிர்நீச்சல் எபிசோட்.

ஆதிரைக்காக விசாலாட்சி எஸ் கே ஆர் குடும்பத்திடம் காலில் விழுந்து கெஞ்சுகிறார் இதனை பார்த்த குணசேகரன் திட்டுகிறார். உடனே குணசேகரன் ஆதிரை வாழ்க்கைக்கு நான் அஸ்திவாரம் போட்டு விட்டேன் எனக் கூற நீ நினைத்தது நடக்கவே நடக்காது எனஆதிரை குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கிறார் .

எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியல் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அப்படி இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் சாருலதாவின் காலில் விழுந்து விசாலாட்சி கெஞ்சிவதை குணசேகரன் பார்த்து விடுகிறார் அதனால் விசாலாட்சி மற்றும் அதிரையை திட்டுகிறார்கள்.

உடனே விசாலாட்சியிடம் குணசேகரன் இங்கு எதற்காக வந்தாய் என கேட்க என் பிள்ளை வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்தேன் என விசாலாட்சி குணசேகரனுக்கு பதில் கூறுகிறார்.

உடனே குணசேகரன் உன்னுடைய பிள்ளையோட வாழ்க்கைக்கு நான் அஸ்திவாரம் போட்டுட்டேன் அம்மா என கூறுகிறார் உடனே ஆதிரை நீ நினைக்கிறது கண்டிப்பாக நடக்காது என பதிலடி கொடுக்கிறார். இந்த மாதிரி சொன்ன உடனே குணசேகரனும் கதிரும் அதிர்ச்சியாகி நிற்க அந்த நேரத்தில் ஜனனி எஸ் கே ஆர் வீட்டிற்கு வேகமாக வருகிறார்.

மற்றொரு பக்கம் குணசேகரன் வீட்டில் திருமண பத்திரிகையை மீனாட்சி அம்மன் புகைப்படத்திற்கு முன்பு வைத்து குணசேகரன், கதிர், கரிகாலன், கரிகாலனின் அப்பா என அனைவரும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நந்தினி இது யாருடைய கல்யாண பத்திரிக்கை என கேட்க அதற்கு உடனே கரிகாலன் மணமகன் ஆதிரை மணமகள் எனக் கூற ஆதிரைக்கு தான் பிடிக்கவில்லையே என்று கேட்கிறார் யார் சொன்னது ஆதிரைக்கு பிடிக்கவில்லை என ஒரு புதிய குண்டை தூக்கி வீசுகிறார் குணசேகரன்.

Leave a Comment