a.r.rahman-tamil 360 newz

கொரோனா நிவாரண நிதிக்காக பாடல் வழியாக நிதி திரட்டும் ஏ ஆர் ரகுமான்.!! வைரலாகும் வீடியோ!!

AR Rahman is raising funds for the Corona Relief Fund through song: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தினை அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டித்த வண்ணமே உள்ளது.

இதனால் வறுமையில் வாடும் கூலி தொழிலாளர்கள் தனது அன்றாட வாழ்க்கைக்கே போராடி வருகின்றனர். அவர்களக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மேலும் மத்திய மற்றும் மாநில அரசு, சுகாதாரத்தறையினர்,  காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள்,  நடிகர், நடிகைகள், பாடகர்கள் என அனைவரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பாடலை சுதர்சன் ஜோஷி எழுத, ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கத்திஜா ரஹ்மான், சிவமணி, சுருதிஹாசன், மிகா சிங், ஜோனிட காந்தி, மோகித் சவுகான், ஜாவேத் அலி, சித் ஶ்ரீராம், நித்தி மோகன் போன்ற பல பிரபல பின்னணி பாடகர்கள் பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை ஹெச்டிஎப்சி வங்கி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பாடலை ஷேர் செய்தால் ஒவ்வொரு ஷேருக்கும் 500 ரூபாய் பிரதமரின் கொரோனா நிதிக்கு செல்லுமாறு ஹெச்டிஎப்சி ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் ரகுமான் தனது ட்விட்டர் பதிவில், இந்த சவாலுக்கான நேரத்தில் இந்த பாடலை கேட்டு நம்பிக்கையுடனும்  தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆகவே ஏ ஆர் ரகுமான் அவர்கள் பல முன்னணி பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர் உடன் இணைந்து இந்த பாடலை வெளியிட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் பாடல்.

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ” யா நபி” பாடல் வீடியோ !! யூடியூபில் வைரலாகிறது!!

Yuvan Shankar Raja “ya nabi” video song goes viral: யுவன் ஷங்கர் ராஜா இவர் இசைக் கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மகன் என்பது அனைவரும் அரிந்ததே.  யுவன் சங்கர் ராஜா அவர்களும் திரைப்பட இசை கலைஞர், பின்னணி பாடகர், ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் ரீமிக்ஸ் கலாச்சாரத்தை தொடங்கி பிரபலப் படுத்தியவர்.

இவர் ராம் திரைப்படத்திற்காக 2006இல் சைபர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதைப் பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவரின் ரசிகர் பட்டாளம் இவருக்கு “யூத் ஐகான்” என்ற பட்டத்தை கொடுத்தனர். இவர் 1996ஆம் ஆண்டு தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக முதல் முதலில் இசை அமைக்கதொடங்கினார். ஆனால் அந்தப்ப்படம் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை.

மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் இதனைத்தொடர்ந்து இவர் துள்ளுவதோ இளமை, நந்தா மௌனம் பேசியதே, காதல்கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், பேரழகன், செவன் ஜி ரெயின்போ காலனி, மன்மதன், அறிந்தும் அறியாமலும் என பல நடுத்தர படங்களிலும் மாரி 2, கழுகு 2, என்ஜிகே, நேர்கொண்டபார்வை, சிந்துபாத், ஹீரோ போன்ற பல புது படங்களிலும் இசையமைத்து உள்ளார்.

தற்போது முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக தற்போது இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். எனவே ரமலான் பண்டிகைக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் “யா நபி” என்ற 4 நிமிட பாடலை வெளியிட்டுள்ளார்.

எனவே ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்தப் பாடல் குறித்து கூறியதாவது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து பாடிய “யா நபி” என்ற புகழ் மாலையை கேட்டு மகிழுங்கள் என்று கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்கள் ரமலான் பண்டிகையை ஒட்டி பாடிய இந்த பாடலுக்காக ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த பாடல் யூடியூபில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ.