ethir-neechal-09

ஒரு வழியாக படாத பாடு பட்டு அப்பத்தா சொன்ன ஜீவானந்தத்தை கண்டுபிடித்த ஜனனி.! சுக்குநூறாக உடைந்த குணசேகரனின் 40% சொத்து..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் எப்படியாவது ஆதிரைக்கு நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பத்தாவின் 40% சொத்தையும் பெற்றுவிட வேண்டும் என ஜனனி முயற்சி செய்து வருகிறார்.

அதேபோல் குணசேகரன் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என்ற முயற்சிகள் பல திட்டங்களை செய்து வருகிறார். அப்பத்தா போட்ட கையெழுத்தை விட இன்னும் ஸ்ட்ராங்காக அவருடைய கைநாட்டு தேவைப்படுகிறது எனவே வீட்டிற்கு ஆடிட்டர் வருகிறார்.

இதனால் குணசேகரன் ஆதிரை திருமணத்திற்கு நாங்கள் எல்லாரும் மண்டபத்துக்கு போன பிறகு நீங்க வந்து அப்பத்தாவிடம் கைநாட்டு எங்கு வேண்டுமோ அங்கு வாங்கிக்கோங்க என்று சொல்கிறார். இவ்வாறு இவர்கள் போடும் திட்டத்தில் ஏதோ சூழ்ச்சி இருக்கு என தெரிந்துக் கொண்ட ஜனனி அப்பத்தாவின் ரூமில் சிசிடிவி கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்து விடுகிறார் இதன் மூலம் குணசேகரன் சிக்குவது உறுதி.

இதனை அடுத்து அப்பத்தான் சொன்ன ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்காக ஜனனி நிச்சயதார்த்தம் நடந்த மண்டபத்திற்கு சென்று அப்பத்தாவின் போனை கைப்பற்றி விட்டார். அதில் ஜீவானந்தம் என்ற பெயரில் ஏதாவது நம்பர் இருக்கிறதா என்று செக் பண்ணி பார்க்கிறார் ஆனால் அதில் எதுவும் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவே ஏதாவது ஷார்ட் ஃபார் இருக்கிறதா என்று கண்டுபிடித்து கடைக்கு சென்று ஒரு நபரிடம் கொடுத்து டயல் பண்ணுகிறார்.

அந்த போன் எடுத்தவுடன் கண்டிப்பாக ஜீவானந்தம் செக்கரட்ரியாக தான் இருக்கப் போகிறது எனவே இதன் மூலம் அப்பத்தா குணசேகரனுக்கு 40% சொத்தில் வைத்திருக்கும் ஆப்பு தெரிய போகிறது. இதனை அடுத்து கரிகாலன் கையை அரசு உடைத்ததை பற்றி ஜான்சி ராணி மிகவும் ஆக்ரோஷமாக வந்து குணசேகரிடம் சொல்கிறார். ஆனால் குணசேகரன் அதனை குணப்படுத்த கையை மீண்டும் நேராக உடைக்கிறார் இதனால் ஜான்சி ராணி அலற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

ethirneechal-3

அருண் இருப்பதை கண்டுபிடித்த கரிகாலன்.! அதிர்ச்சியில் ஜனனி.. திருமணத்தில் பிரச்சனை வரக்கூடாது என மருமகளிடம் சத்தியம் கேட்கும் குணசேகரன்

தமிழ் சின்னத்திரைகள் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பெண்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் வெற்றி கரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்கள் நிலவி வருகிறது.

அதாவது ஆதிரை அருண் திருமணம் நடக்க வேண்டும் என ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகிறார். இதற்கு சக்தி உதவி வரும் நிலையில் எப்படியாவது இவர்களை சேர்த்து விட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகின்றனர் எனவே இதன் காரணமாக தற்பொழுது அருணை யாருக்கும் தெரியாத வகையில் வத்தலகுண்டு கிராமத்தில் தங்க வைத்துள்ளார்.

அதே ஊருக்கு ஜான்சிராணி ஆதிரையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். இவர்களுடன் நந்தினி, ஜனனி, சக்தி என செல் எப்படியாவது இதனைப் பற்றி அருணிடம் கூறி அவரை வெளியில் வரவிடாமல் செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்கள் ஆனால் அருணுக்கு போன் போகவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கோவிலுக்கு வந்தவுடன் கரிகாலன் பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகளிடம் அதிரை கரிகாலன் இருவருக்கும் நடக்க இருக்கும் திருமணத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது என சத்தியம் செய்யுங்கள் என கூறுகிறார்.

அதற்கு ரேணுகா நாங்கள் ஏன் சத்தியம் செய்ய வேண்டும் எனக் கேட்க இதனை அடுத்து கரிகாலன் எடுத்த போட்டோக்களை போனில் பார்க்கிறார். அப்பொழுது தனது நண்பரிடம் இது யாருடா என கேட்க அது நான் தான் எனக் கூற உனக்கு பின்னாடி இருப்பது அருணுடா என கூறியவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் தற்பொழுது அருண் அங்கி தங்கி இருப்பது ஜான்சிராணி என அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு தற்பொழுது என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ethirneechal-2

அருண் தங்கி இருக்கும் ஊருக்கு குடும்பத்தினர்களை அழைத்து செல்லும் ஜான்சி ராணி.! அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் முடிவெடுக்கும் ஜனனி.. அதிர்ச்சியில் ஆதிரை

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டும் அதற்கு பெண்கள் தான் போராட வேண்டும் என்பதனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் இளைய மருமகளான ஜனனி தனக்கு முன்பு வந்த மூன்று மருமகள்களையும் எதிர்த்து கேட்கும் அளவிற்கு தைரியத்தை உண்டாக்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் எப்படியாவது அதிரைக்கு அந்த பைத்தியக்காரனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என குணசேகரன், கதிர் இருவரும் போராடி வருகின்றார்கள்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஜனனி மற்றும் மற்ற மூன்று மருமகள்களும் பல பிளான்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஜனனி ஆதிரை காதலித்து வரும் அருணை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் தங்க வைத்துள்ள நிலையில் ஜான்சிராணி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் வெளியூருக்கு அழைத்து செல்கிறார்.

அந்த ஊரில் தான் அருணம் தங்கி இருக்கிறார். இவ்வாறு ஜனனி பல பிளான்கள் போட்டு வரும் நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்காக கதிர் முயற்சி செய்து வருகிறார் எனவே என்ன பிளான் போட்டாலும் எதனையும் கண்டுபிடிக்க முடியாது என்றும் அப்பத்தா கேட்கும்பொழுதெல்லாம் அவர்கள் ஏமாறும் வகையில் இருக்கும் பதில்கள்தான் தன்னிடம் இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் விரைவில் இதற்கெல்லாம் பதில் வரும் என கூறியதோடு முதல் ப்ரோமோ முடிவடைகிறது.

இதனை அடுத்து ஆதிரை ஜனனி நந்தினி மற்றும் கதிர் ஆகிய நான்கு பெரும் ஒரே காரில் போகும் நிலையில் வரும் அந்த ஊரில் தான் தங்கியிருக்கும் விஷயத்தை இவர்களிடம் ஜனனி கூறுகிறார். எந்த ஊர் என்று தெரிந்து கொள்வதற்காக கதிரிடம் போன் பண்ணி நந்தினி கேட்க கதிர் கோபப்படுகிறார் அதன் பிறகு வத்தலகுண்டு போகும் வழி எனக் கூறியவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவ்வாறு இவர்கள் போகும் வழிக்கு நேராக அருணும் அவருடைய நண்பர் இருவரும் நடந்து வருகிறார்கள் எனவே என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.