ethirneechal

குணசேகரனை சுட்டுத் தள்ளிய ஜீவானந்தம்.! உயிர் பயத்தின் உச்சத்தில் சிங்கம்.. எதிர்பாராத ட்டுவிஸ்ட்வுடன் எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் குணசேகரனுக்கு உச்சகட்ட பயத்தை காண்பித்திருகிறது அதனால் பல ட்விஸ்ட்களுடன் சுவாரசியமாக இருந்து வருகிறது.

அதாவது ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தனது பெயரில் எழுதி வைத்திருந்தார் இதை குணசேகரனுக்கு தெரியவைக்கிறார். குணசேகரனும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது என கோபமாக பேச ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்கிறார்கள்.

இதனை அடுத்து ஜனனி கௌதம் ஜீவானந்தத்தினால் என்பதை தெரிந்து கொண்டார் இதனால் ஒரு பக்கம் முழித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அனைத்து பிரச்சினைகளுக்கும் அப்பத்தா எழுந்தால் மட்டுமே சரியாகும். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் குணசேகரனை ஜீவானந்தத்தின் ஆட்களிடமிருந்து அழைத்து வீட்டிற்கு வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் தூங்கிக் கொண்டிருக்க  ஜீவானந்தம் அவரை சுட்டது போல கனவு வருகிறது இது உண்மை என்று நினைத்து குணசேகரன் எழுந்திருத்து கத்துகிறார். இதனால் குணசேகரனுக்கு என்ன ஆச்சு என வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பதட்டம் அடைகின்றனர்.

பிறகு குணசேகரனை பயப்படாதீங்க அண்ணா நான் தான் இருக்கேன்னு சொல்றல என கதிர் சமாதானப்படுத்த அதற்கு நந்தினி இதைத்தான் சொல்லிக்கிட்டு உதார் விட்டுட்டு இருக்கீங்க அங்க போயிட்டு அடி வாங்கிக்கிட்டு வந்து இருக்கீங்க என்று பேச. பிறகு கரிகாலன் சிங்கம் மாறி இருந்தீர்களே மாமா இப்படி உன்ன சரிச்சு உக்கார வச்சுட்டாங்களே என அனைவரும் கூற குணசேகரன் உடனே ஒப்பாரி வைக்கிறார்.

இதனை எல்லாம் பார்த்து மருமகள்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. சிங்கம் போல் வீட்டில் இருக்கும் மருமகள்களை அடக்கி வந்த குணசேகரன் தற்போது ஜகார்த்தனனிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். ஜகார்த்தனனும் குணசேகரனுக்கு உயிர் பயத்தை காட்டி உள்ளார்.

ethir neechal

ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம்.. ஒரு ஆணி கூட புடுங்க முடியாதுடா என பேசிய குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கிச் சென்ற ஜீவானந்தத்தின் அடியாட்கள்.!

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தம் குணசேகரன் உடன் நேராக மோத ஆரம்பித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு ட்விஸ்ட்களும் அதிரடியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என நினைத்த நிலையில் அதற்கு தான் தற்பொழுது ஆப்பு வந்துள்ளது. எப்படியோ ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் மொத்த குடும்பமும் கதி கலங்கி நிற்கிறது முக்கியமாக குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

இத்தனை நாட்களாக அப்பத்தாவின் கைரேகையை வாங்கியது குணசேகரன் தான் என ஜனனி நினைத்து வந்த நிலையில் தற்போது அது ஜீவானந்தம் என வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்கிறார்கள்.

அதாவது, தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கௌதம் ஜீவானந்தத்துடன் வருவதை பார்த்த ஜனனி கௌதம் நீங்க என்ன பண்ற உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எனக் கேட்க அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கௌதம் குணசேகரனை பார்த்து 40% சொத்துக்கானவர்கள் நாங்க தான் எனக் கூறுகிறார்.

அதற்கு குணசேகரன் ஒரு வீடு ஒன்னு இருக்கே அப்பா என நக்கலாக சொல்ல அதுவும் லிஸ்ட்ல இருக்கு என கௌதம் சொல்கிறார். இதனால் கோபமடைந்து பொங்கி எழுந்த குணசேகரன் ஒரு ஆணியை கூட நீ புடுங்க முடியாதுடா என சேரை தூக்கி போட்டு உடைக்கிறார்.

இதனால் கடுப்பான ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்ல காதிர் பின்னாடியே ஓடுகிறார் இதோடு இந்த நிறைவடைகிறது. இவ்வாறு கெத்தாக இருந்த குணசேகரனை தற்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.