எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் தக் லைஃப்.!

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் படித்திருக்கும் பெண்கள் மருமகள்களாக வர அந்தப் பெண்களை தன்னுடைய அண்ணனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தம்பி மூன்று பேரும் படாத பாடு படுத்தி வருகின்றனர்.

எனவே இதனை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத பெண்கள் இவர்களிடம் எதிர்த்து போராடி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் அனைத்தையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் நிஜ வாழ்க்கையில் பெண்கள் இந்த சீரியலினை பார்த்துவிட்டு நடவடிக்கைகள் மாறுவதாக கணவர்மார்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எனவே இந்த சீரியலை விரைவில் முடிக்க வேண்டும் என இயக்குனர்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் இப்படி இருக்கையில் இந்த சீரியல் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியலில் வில்லனாக இருந்து வருபவர் தான் குணசேகரன் இவருடைய கதாபாத்திரத்தை வைத்து பல மீம்ஸ்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் பேசிய வெறித்தனமான டயலாக்குகள் வைரலாகி வருகிறது.

அதாவது முதலில் ஜனனிக்கும் சக்திக்கும் திருமணம் நடந்த பொழுது அந்த மண்டபத்தில் ஜனனியின் பிரண்ட்ஸ் அனைவரும் இணைந்து டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது இதனைப் பார்த்த குணசேகரன் ரொம்பவே கடுப்பாகி கூறியதாவது, ஏன் என்னம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க கல்யாண வீட்ல வந்து டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு அந்த பொண்ணு இல்ல அங்கிள் இதுதான் இப்ப டிரெண்டு என சொல்ல அதற்கு குணசேகரன் ஆவுன்னா அதை வந்து சொல்லிக்கிட்டு வந்துடுங்க என பேசி இருப்பார்.

பிறகு மதுரை பேச்சு தான் பேச வேண்டும் என குணசேகரனின் அம்மா முயற்சி செய்ய ஆஹா ஆஹா என்று இழுத்துகிட்டு பேசும் பொழுது கொஞ்சம் கடுப்பாக இருந்ததாலும் வேறு வழியில்லாமல் கேட்டு தான் ஆகணும் என வீட்டில் சாமி இருக்கு சுத்த பத்தமா எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கோம் இவன் இப்படி பண்ணிட்டு இருந்தா எப்படி என்று கேட்க அதற்கு குணசேகரன் சாமி அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமா கதிர் ரூமுக்குள்ள இருந்து தானே குடிச்சிட்டு இருக்கான் அதை விட்டுத்தொலை அம்மா என்று பேசி இருப்பார். இவ்வாறு குணசேகரன் கேரக்டர் தான் இந்த சீரியல் இவ்வாறு பிரபலமடைவதற்கு முக்கிய காரணம்.

Leave a Comment