sipikul muthu

தனது தங்கையின் ஆசைக்காக மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளும் அக்கா.! விஜய் டிவியின் புதிய சீரியல் ப்ரோமோவுடன் இதோ.!

விஜய் டிவி ஏதாவது ஒரு சீரியலை ஒளிபரப்பினால் அது எப்பொழுதும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள சீரியல்தான் சிப்பிக்குள் முத்து.

விஜய்டிவி பொருத்தவரை விஜய் டிவியில் எது வெளியிடப்பட்டாலும் அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்னும் ஊடகத்திலும் வெளியிடப்படும். அதில் தற்பொழுது சிப்பிக்குள் முத்து என்னும் நாடகக் கதையின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் ஒரு அக்கா தனது தங்கைக்காக தனது ஆசைகளை விட்டு விலகி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அதிலும் திருமணம் செய்துகொண்ட பையன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

அதில் அக்கா கூறுவது, நான் என்னுடைய ஆசைகளெல்லாம் விட்டு விலகி இத்தகைய திருமணம் செய்து கொள்வது எனது தங்கையின் விருப்பமான வாழ்க்கைக்காக, நான் அவளுக்கு அக்கா மட்டுமல்ல அம்மாவும் தான். இதில் தங்கை தான் விரும்பிய பையனை திருமணம் செய்து கொள்வாள்,அதற்கு ஈடாக அதே வீட்டில் இருக்கும் தங்கச்சியின் காதலனின் சகோதரனை அக்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும்,இதுதான் இக்கதையில் இருக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.

என்னதான் தங்கச்சியாக இருந்தாலும் அக்கா தனது ஆசைகளை விட்டு விலகி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம், இருந்தாலும் அதை எப்படி அக்கா சமாளிக்கிறாள் என்பதை எடுத்துச் சொல்வதுதான் இக்கதை. விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் குடும்பத்தோடு ஒன்றாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும் அதில் இதுவும் ஒன்றாக அமையும் என்று நம்புகின்றோம்.

என்னதான் விஜய்டிவி வித்தியாசமான கதைகளை நாடகமாக்கினாலும் இவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்க கூடாது, என்னவாக இருந்தாலும் சரி நாடகத்திலிருந்து நல்ல விஷயமே வெளிப்படும் என்று நம்புகிறோம்.

abirami

பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை அம்மாவுடன் சேர்த்து பார்த்த அபிராமி.! சிம்புவே கண் கலங்கிடாரு.. வீடியோவுடன் இதோ.

கிட்டத்தட்ட விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் கோரிக்கையின்படி பிக்பாஸில் நடக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறி வந்ததின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் நிலையில் கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற முடியவில்லை எனவே கமலஹாசனுக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு ஒரு சில வாரங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு மிக பிரம்மாண்டமாக ஓடிடி வழியாக வெளியாகி இதற்கு முன்பு கடந்த சீசன்களில் டேமேஜான தனது பெயரை காப்பாற்றிக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு நல்ல இமேஜை உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில்  கடந்த ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட வனிதா, தாடி பாலாஜி,அபிராமி, தாமரை, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத்,சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக் அபிநய் மற்றும் சுருதி ஆகியோர்கள் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள்.

இவ்வாறு தற்பொழுது பிக்பாஸ் அண்ட்டில் ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி.  இவர் தனது முன்னாள் காதலரான நெருப்புடன் இவர் செய்யும் சில சண்டைகள் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.அதோடு இவர் பாலாஜி முருகதாஸ்வுடன்  மிகவும் குளோஸ்சாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அபிராமி எப்படியாவது இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு இறுதி வாரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் தனது அப்பாவை பற்றி பல இடங்களில் கூறி இருந்தார் எனவே அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பிக்பாஸ் குழுவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அபிராமியின் அப்பாவை அவளின் வீட்டிற்கு கொண்டு சென்று அபிராமியின் அம்மாவுடன் சேர்த்துள்ளார்கள் இவ்வாறு திடீரென்று தனது அப்பா அம்மாவை ஒன்றாக பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வர அபிராமியை பார்த்து சிம்புவும் கண் கலங்குகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

beast

துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் தெறிக்க வெளியானது பீஸ்ட் ட்ரைலர்.!

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு  செல்வராகவன், அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள  பீஸ்ட்  திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. கொரோனா காரணமாக இசை வெளியீட்டு விழா பீஸ்ட் திரைப்படத்திற்கு நடத்த முடியாமல் போனது அதனால் சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் படக்குழு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியை நெல்சன் தான் தொகுத்து வழங்கியுள்ளார் எனவும் அப்பொழுது விஜயிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டுள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதேபோல் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் கடும் போட்டி நிலவி வரும். இதற்கு முன் கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது படக்குழு.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை தற்போது சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manmatha-leelai

இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் நிரம்பி வழியும் வகையில் வெளியானது வெங்கட் பிரபுவின் மன்மதலீலை ட்ரைலர்.!

வெங்கட் பிரபு ஒரு தமிழ் பட இயக்குனர் ஆவார் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களைக் கொண்டவர் ஆரம்பத்தில் இவர் நடிக்க தொடங்கினார் ஆனால் பெரிதாக அது ஒன்றும் செட்டாகவில்லை பின்பு சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா, கோவா, மங்காத்தா பிரியாணி, மாஸ் என்ற மாசிலாமணி, சென்னை 600028 இரண்டாம் பாகம் திரைப்படங்கள் வெளியாகின இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதால் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கும் இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது மன்மதலீலை என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என்ற வசனத்துடன் வெளியாகிய ட்ரெய்லர் இரட்டை அர்த்தங்களுக்கு  பஞ்சமில்லாமல் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் கிளாமர் காட்சிகள் அதிகமாக நிரம்பி வழிகிறது. அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருத்தி வெங்கட்,  பிரேம்ஜி அமரன், கருணாகரன், ஜெயபிரகாஷ் என பலர் நடித்துள்ளார்கள். பிரேம்ஜி இசையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு வெங்கட் ராஜன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamanna

அடிக்கிற வெயிலுக்கு மாலத்தீவில் டூ பீஸ் உடையில் காற்று வாங்கும் தமன்னா.! வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மராத்தி இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் கேடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

மேலும் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா என தொடர்ந்து மூன்று முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகி கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம் பையா ஆகிய  திரைப் படங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை ,வீரம் ,பாகுபலி , தோழா ,தர்மதுரை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு சமீபகாலமாக பெரிதாக தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது வெயில் காலம் அதிகரித்துள்ளதால் பல நடிகைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் அந்த வகையில் தமன்னாவுக்கு மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு 2 பீஸ் உடையில் ஹாயாக காத்து வாங்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியானது ஜாலியோ ஜிம்கானா.! வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விடிவி கணேஷ், யோகிபாபு செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சிங்கிள் டிராக் வெளியானது இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் அவர்கள்தான் எழுதியிருந்தார் அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையில் வெளியான இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிட காந்தி இணைந்து பாடியிருந்தார்.

இந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடும் வீடியோவை வெளியிட்டார்கள் அந்த வகையில் சமந்தா, பூஜா ஹெக்டே ராஷ்மிகா மந்தனா என பல நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் இன்று 2வது சிங்கிள் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலை விஜய் அவர்கள் பாடியுள்ளார் மேலும் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் விஜய், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு இடம் பெற்றிருந்தார்கள். மேலும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கான செகண்ட் ப்ரோமோ வெளியானது மேலும் இந்த ப்ரோமோவில் பனிப்பிரதேசத்தில் நடனமாடுவது போல் காட்ச்சிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாடலை எழுதியது கார்த்தி ஜாலியோ ஜிம்கானா குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது எந்த மாதிரி பிரச்சனை நடந்தாலும் அது நடந்தது நடந்ததுதான் அதனை நம்மால் மாற்ற முடியாது அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டு விட்டு நாம் போய்க் கொண்டே இருக்கணும் என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும் என்பதுதான் கருத்து எனக் கூறியுள்ளார்.