yash

தனது தாடியை ஐந்து வருடங்களுக்குப் பிறகு நீக்கும் நடிகர் யாஷ்.! வைரலாகும் வீடியோ.

கன்னட திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட யாஷ்,தமிழ் திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் பாகம் 1 திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசப்படுத்தியவர் யாஷ்.

இத்திரைப்படம்  வெளிவந்த காலகட்டத்தில் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் மேலும் உலக அளவிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு படமாகும். இப்படத்தில் யாஷ் மிக அதிக தாடியுடன் காட்சி அளிப்பார் அது அவருக்கு மிக மாசாக இருக்கும். இதைத்தொடர்ந்து கேஜிஎஃப் பாகம் 2 வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஏப்ரல் பதினான்காம் நாள் உலகெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்,மாளவிகா அவினாஷ்,சஞ்சய்தத்,பிரகாஷ் ராஜ், அச்சுத் குமார், ரவீணா டாண்டன், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ராவ் ரமேஷ்,ஜான் கொக்கேன் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தில் தங்களது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி உள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.இரண்டு படத்திலும் யாஷ் மிக அதிக தாடியுடன் காட்சியளிப்பார், இந்த அளவிற்கு தாடியுடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடையே புல்லரிப்பு ஏற்படுத்தியுள்ளது.கேஜிஎப் படத்திற்காக தாடியை வெகுவாக வளர்த்து வந்த யாஷ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு படத்திற்காக தனது தாடியை அகற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=fuxeqBQ85bk

anupamaparameshwaran

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரபிக்குத்துப் பாடலுக்கு நடனமாடிய அனுபமா பரமேஸ்வரன்.! வைரலாகும் வீடியோ.

பொதுவாக விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் அவரின் திரைப்படங்கள் இடம் பெறும் பாடலுக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அந்தவகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்திருந்த நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட்.இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் நல்ல வசூலை செய்து வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், விடிவி,கணேஷ், யோகிபாபு,அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி தவிர இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆரம்பிக்குது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வரிகள் பெரிதளவில் ரசிகர்கள் புரியவில்லை என்று கூறி வந்தாலும் 300 மில்லியன் வீயூஸை இந்த பாடல் கடந்துள்ளது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் இசை அமைத்து ஜோனியா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார்.

எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்கள் முதல் முன்னணி நடிகர் நடிகைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லி,பாடகி ஜொனிதா காந்தி, நடிகை வேதிகா, நெல்சன் மகன்,திவ்யபாரதி, சஞ்சனா,ஷிவானி நாராயணன்,கீர்த்தி சுரேஷ், கனிகா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நடிகை நடிகர்கள் நடனமாடிய நிலையில் தற்போது பூமியில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த பாடலுக்கு நடனம் ஆடிவுள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த பாடலுக்கு நடனம் ஆடியதால்  தமிழ் பெண் போல் மிகவும் அழகாக ரசிகர்களை கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த நடனம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

vijay 01

குழந்தைகளுடன் தனது ஹிட் பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்.! வீடியோ இதோ.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென வளைத்து போட்டு உள்ளார் தான் நடிகர் விஜய். தற்பொழுது உள்ள அனைத்து ரசிகர்களும் விஜய்யை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

சொல்லப்போனால் நடிகர் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபீஷில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்து வரும் படங்கள் விஜய் இதுதான். அதாவது தற்போதெல்லாம் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மிகவும் மாசாக இருந்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்தவகையில் இத்திரைப்படம் 2-வது நாள் முடிவில் ரூபாய் 3.50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்த அடுத்த அடுத்த நாள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது என்ற தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக நடிகர் விஜயின் திரைப்படம் என்றால் அதில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் தற்போது ட்விட்டரில் தளபதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் நடிகரும்,நடன கலைஞருமான சதீஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய்யும் சேர்ந்து  ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

beast vijay

சும்மா அனல் பறக்க வெளியானது பீஸ்ட் மூன்றாவது சிங்கிள் டிராக்.! Meaner, leaner, stronger Can you feel the power

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறது. படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் மிகவும் பயங்கரமாக பணியாற்றி வருகிறார்கள்.

பீஸ்ட் திரைப்படத்திலிருந்து முதலில் வெளியாகி அரபி குத்து பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதனைத்தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் யூடியூபில் சில சாதனைகளையும் நிகழ்த்தியது.

இந்த நிலையில் பீஸ்ட் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் திரைப்படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் ட்ராக்கை  வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது அதேபோல் தற்போது மூன்றாவது சிங்கிள் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சும்மா அனல் பரக்க Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire என்ற பாடல் வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளது இந்தப் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அனிருத் இசையில் வெளியாகிய இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

rithika

அம்மா.. அம்மா என ரித்திகாவை கூப்பிடும் குழந்தை.! வைரலாகும் க்யூட் வீடியோ.

விஜய் டிவியில் வெளியாகும் நாடகங்களில் ஒன்றான பாக்கியலட்சுமி நாடகம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்த நாடகம் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடியது அதில் ஒன்றுதான் விதவைகளின் மறுமணம். இந்த நாடகத்தில் அமிர்தா என்னும் வேடத்தில் நடிக்கும் நடிகை ரித்திகா இந்த நாடகத்தில் ஒரு விதவையாக நடிக்கின்றார் இதில் அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு

அக்குழந்தையின் பெயர் நிலா. ரித்திகா இந்த நாடகத்தை தவிர்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று மக்களால் பெரிதும் அறியப்பட்டவர், மேலும் இவர் சில விருதுகளையும் பெற்றுள்ளார் ((she won fab stars, Best performer of the year 2021″ award, “Silent killer” award in Cooku with Comali””)).

நடிகை ரித்திகாவிர்க்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, இவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தான் பாக்கியலட்சுமி நாடக ஷூட்டிங்கில், பாக்கியலட்சுமி நாடகத்தில் அமிர்தாவினுடைய குழந்தையின் சிறு குறும்புகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோதான் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாரும் இல்லாத அறையில் நடந்து வரும் நிலா பாப்பா ரித்திகாவை பார்த்து அம்மா என்று கூப்பிட, “ஒன்மோர் ஒன்மோர் போகனும் தெரியுமா” என்று சிரித்துக்கொண்டே ரித்திகா குழந்தையிடம் பேசுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்களிடம் நான் வர சொல்லவில்லை அவளாகத்தான் வந்தாள் என்று ரித்திகா சிரித்துக்கொண்டே கூறுகிறார். இந்த வீடியோவானது ரசிகர்களிடையே உற்சாகத்தையும்,ரசிகர்களால் இணையதளங்களில் மேலும் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

kayal kathir

கயல் பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் கதிர்.! வைரலாகும் வீடியோ.

நீண்ட காலமாக விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்கள் அனைவராலும் அறியப்படும் ஒன்று. இந்த நாடகத்திற்காக தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த ஒரு நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் சிறப்பு தான் ஆனால் இந்த சீரியல் மட்டும் தனி சிறப்பு மிக்கது, ஏனென்றால் இந்த நாடகம் அண்ணன் தம்பி ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று  முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா அறிமுகமானார. அதன்பிறகு மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு கயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

பிறகு பல வருடங்கள் கழித்து  தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் முல்லையை கதிர் எவ்வாறு பார்த்துக் கொள்வார் இல்லை ஏதேனும் நடந்து முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிடப்பட்ட வீடியோவில்தான் கயல் வேடத்தில் நடிக்கும், அம்மா என்று கூறும் ஒரு சின்ன குழந்தையிடம் கதிர் தனது பெயரை உச்சரித்து கதிர் என்று கூறு என்கிறார் இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

rajarani-

அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய சிவகாமி.! இன்றைய எபிசோட்.

விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் பொதுவாக ஒரு சீரியல் வெற்றியை பெற்று விட்டால் அதனை இரண்டாவது மூன்றாவது சீசன்கள் என தொடர்ந்து ஒளிபரப்புவதை  வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்ற சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில்  நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இவர்களின் ஜோடி சிறப்பாக அமைந்ததால் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

பிறகு முதல் சீசன் முடிந்த நிலையில் இரண்டாவது சீசன் உருவாக்கலாம் என்று முடிவு செய்த பொழுது ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் சீரியல் படப்பிடிப்பு நடைபெறுவதை தள்ளி போட்டு இருந்தார்கள். இருக்கும் கொஞ்ச நாட்களில் மற்ற சீரியலில் நடிக்கலாம் என சில சீரியல்களில் நடித்து வந்தார்.

எனவே ஆலியா மானசா ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது சஞ்சீவ் மற்ற சீரியல்களில் நடித்து வந்ததால் அவரால் இந்த சீரியலில் நடிக்க முடியவில்லை இதன் காரணமாக கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் படித்துவந்த சித்து சந்தியாவிற்கு ஜோடியாக நடிக்க வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆலியா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சமீபத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது இதன் காரணமாக இவர் சில மாதங்கள் இந்த சீரியலில் இருந்து விலகினார்.எனவே சென்னை மாடலிங் ஒருவர் தற்போது சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது சிவகாமி சந்தியாவிடம் செயினை கழற்றி தா  என கூற உடனே சந்தியா செயினை கழற்றி தருகிறாள் அர்ச்சனாவிடம் வளையலை தா என கேட்டதற்கு ஏன் எதற்கு என கேள்வி கேட்டதால் இதுதான் நீ என அர்ச்சனாவை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்குகிறார் அந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

lossliya-3

கவினுடன் இருக்கம் ரிலேஷன்ஷிப்பை பற்றி ஓபனாக கூறிய லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமாகி மிகவும் வெற்றிகரமாக ஒலிபரப்பாகி வந்தது. தற்போது ரசிகர்களின் வேண்டுகோள்படி பிக்பாஸ் அல்டிமேட்  என்ற பெயரில் 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை அப்படியே காட்டும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சியில் குறிப்பிட்ட வாரத்திற்குப் பிறகு தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாத காரணத்தினால் தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார்.  கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மிகவும் பிரபலமடைந்தார்கள் அதோடு இவர்களுக்கென்று தனி ஒரு ஆர்மியும் உருவானது. இவ்வாறு இவர்களின் காதல் இளசுகளின் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பலர் எதிர்த்து வந்தனர் எனவே விருந்தினராக வந்த லாஸ்லியாவின் அப்பா  லாஸ்லியாவை கண்டித்ததால் சரியாக இருக்க ஆரம்பித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை இவர்களைப் பற்றிய தகவல் ஒரு மறைமுகமாகவே புரியாத புதிராக இருந்து வந்தது. ஆனால் கவினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வந்தார்.

லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து கவினும் லிப்ட் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஊர்க் குருவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடிபட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம் கவினைப் பற்றி கேட்கும்பொழுது நாங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் பிறகு எங்களுக்கு செட்டாகாது என்று தெரிந்ததும் பிரிந்து விட்டோம் என்று கூறிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sipikul muthu

தனது தங்கையின் ஆசைக்காக மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளும் அக்கா.! விஜய் டிவியின் புதிய சீரியல் ப்ரோமோவுடன் இதோ.!

விஜய் டிவி ஏதாவது ஒரு சீரியலை ஒளிபரப்பினால் அது எப்பொழுதும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள சீரியல்தான் சிப்பிக்குள் முத்து.

விஜய்டிவி பொருத்தவரை விஜய் டிவியில் எது வெளியிடப்பட்டாலும் அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்னும் ஊடகத்திலும் வெளியிடப்படும். அதில் தற்பொழுது சிப்பிக்குள் முத்து என்னும் நாடகக் கதையின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் ஒரு அக்கா தனது தங்கைக்காக தனது ஆசைகளை விட்டு விலகி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அதிலும் திருமணம் செய்துகொண்ட பையன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

அதில் அக்கா கூறுவது, நான் என்னுடைய ஆசைகளெல்லாம் விட்டு விலகி இத்தகைய திருமணம் செய்து கொள்வது எனது தங்கையின் விருப்பமான வாழ்க்கைக்காக, நான் அவளுக்கு அக்கா மட்டுமல்ல அம்மாவும் தான். இதில் தங்கை தான் விரும்பிய பையனை திருமணம் செய்து கொள்வாள்,அதற்கு ஈடாக அதே வீட்டில் இருக்கும் தங்கச்சியின் காதலனின் சகோதரனை அக்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும்,இதுதான் இக்கதையில் இருக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.

என்னதான் தங்கச்சியாக இருந்தாலும் அக்கா தனது ஆசைகளை விட்டு விலகி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம், இருந்தாலும் அதை எப்படி அக்கா சமாளிக்கிறாள் என்பதை எடுத்துச் சொல்வதுதான் இக்கதை. விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் குடும்பத்தோடு ஒன்றாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும் அதில் இதுவும் ஒன்றாக அமையும் என்று நம்புகின்றோம்.

என்னதான் விஜய்டிவி வித்தியாசமான கதைகளை நாடகமாக்கினாலும் இவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்க கூடாது, என்னவாக இருந்தாலும் சரி நாடகத்திலிருந்து நல்ல விஷயமே வெளிப்படும் என்று நம்புகிறோம்.