zee tamil

பட்டப்பகலில் ஒயின் ஷாப்பில் சரக்கு வாங்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகை.! வீடியோவை வெளியிட்டு பங்கம் செய்யும் ரசிகர்கள்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் யாரடி நீ மோகினி மற்றும் புதுப்புது அர்த்தங்கள் போன்ற நாடக தொடர்களில் நடித்து வருபவர்தான் ஸ்ரீநிதி என்னும் சின்னத்திரை நடிகை இவர் தனது நண்பர்களின் பிறந்த நாளின் காக் பெங்களூருவில் உள்ள ஒயின்ஷாப் ஒன்றுக்கு சென்று சரக்கு வாங்கும் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி உள்ளது.

அதில் அவரிடம் அவரது நண்பர் ஏன் இதை வாங்குகிறாய் என்று கேள்வி கேட்டுள்ளார் அதற்கு ஸ்ரீநிதி (because I love my friends) என்று கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியது என்னவென்றால் “என் நண்பர்களுக்கு பிடித்ததை நான் வாங்கி கொடுத்தால் எனக்கு அந்த அளவிற்கு செலவு ஆகாது அதன் மூலம் நான் என் பணத்தை சேமிக்க இயலும்” என்று கூறியுள்ளார்.

இவர் முன்பெல்லாம் டிப்ரஷனில் இருந்ததாக கூறியுள்ளார், வலிமை படம் எனக்கு பிடிக்கவில்லை என்று வலிமை படத்தை பற்றி சில கருத்துக்களை வெளியிட்டதால் கோபமடைந்த ரசிகர்கள் “உன்னை பேச்சிலர் மூவியில் வருவதுபோல் செய்துவிடவேண்டும்” என்று தகாத வார்த்தைகளால் கமெண்ட் செய்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து மிகவும் வருத்தம் அடைந்தார் ஸ்ரீநிதி.இப்படி ஏதாவது ஒன்றை செய்து பல பிரச்சனைகளை மாற்றிக் கொள்வார் ஸ்ரீநிதி, தற்போது மேலும் பேசும் பொருளாக இத்தகு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

samantha nayanthara

உன்ன கல்யாணம் பண்ணிட்டான்… என்ன பண்ணிட்டான்.. வைரலாகும் காத்துவாக்குல 2 காதல் ட்ரெய்லர்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காற்றுவாக்கில் இரண்டு காதல் மேலும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் இருந்து வெளியாகிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பிய நிலையில் தற்பொழுது காத்துவாக்குல 2 காதல் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இது திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் காதலிப்பது போல் காட்டியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஜாலியாக கூறுவது தான் திரைப்படத்தின் கதை.

இதோ ட்ரைலர்.

beast-

பீஸ்ட் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி ரோஷினி மற்றும் ஸ்ருத்திகா.! வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ள ரியாலிட்டி ஷோ தான்  குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான காமெடி நிறைந்ததாக இருப்பதால் இதற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமடைந்த ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.  இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில்  ரோஷினி மற்றும் ஸ்ருதிகா, ரேஸ் அக்கா உள்ளிட்ட இன்னும் தொடர்ந்து பல பிரபலங்கள்  இணைந்துள்ளார்கள்.

இவர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட்  திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியதால் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரைப்படம் கலவை விமர்சனத்தை தான் பெற்றுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள்  இப்படிப்பட்ட நிலையில் ரோஸ்னி மற்றும் ஸ்ருதிகா  இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ShrutikaOffI/status/1517141029723729931?s=20&t=pdDBHASutxVFf0asO3tOBQ

SHIVANI NARAYANAN 009

ஷிவானி நாராயணனை வர்ணித்து பாடிய ரசிகர்.! வெட்கப்பட்டு சிரித்த நடிகை.

தற்போது சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகைகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி  நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு மிகவும் பிஸியாக நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கமலின் விக்ரம், வடிவேலுவின் படம் ஒன்று, ஆர்கே பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவ்வாறு முன்னேறி உள்ள இவருக்கு ரசிகர் ஒருவர் ஷிவானி நாராயணன் புகைப்படத்தை வர்ணித்து அவருக்கு பரிசளித்துள்ளார்.அதோடு பரிசில் எழுதியிருந்த கதையை அப்படியே பாட்டாக பாடி ஷிவானி நாராயணனை வர்ணித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

meena

45 வயதில் கர்ப்பமாகிவுள்ளாரா நடிகை மீனா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை மீனா.இவர் 90ஸ் ஸ்கேட்டிங் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களின் இளமை குறை வரை மட்டும்தான் அவர்களால் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களால் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் மீனாவும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த பிறகு சினிமாவை விட்டு நின்று விட்டார்.

அதோடு ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்து அதன்பிறகு அவருக்கே ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர், இந்தப் பெருமை தற்போது வரையிலும் இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

பிறகு இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையும் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு மீனா போலவே இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு சில விருதுகளும் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்  மீனா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது மீனா கர்ப்பமாக இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.  பிறகு இதனை பற்றி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால் இது ஒரு படத்திற்காக போடப்பட்ட கெட்டப் என்று தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

nayanthara samantha 1

சமந்தாவை கட்டியணைத்தபடி கொஞ்சி விளையாடும் நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.

பொதுவாக சினிமா என்றாலே ஏராளமான நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விவாகரத்தை பெற்று ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஏற்படுத்திய ஒன்றுதான் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து.

நடிகை சமந்தா தி பேமிலி மேன் 2 திரைப்படத்தில் மிகவும் மோசமாக நடித்ததால் தான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. விவாகரத்திற்கு பிறகு அதிகமான மன உளைச்சலில் இருந்த சமந்தா தொடர்ந்து கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  கிளாமரில் புகுந்து விளையாடும் இவர் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இதனை சரியாக விக்னேஷ் சிவன்  பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி மற்றும் சம்பந்தம் மூவரும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் சமந்தாவை விக்னேஷ் சிவன்  கிளாமர் வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் நயன்தாராவை மட்டும் குடும்பப் பெண் போல் அழகாக புடவையில் நடிக்க வைத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தினை பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி ரசிகர்கள் இணையதளத்தில் தொடர்ந்து லைவ் ஷாட்டில் பேசி வந்தார்கள்.

அந்த வகையில் சமந்தாவிடம் இத்திரைப்படத்தினை கேட்கும்பொழுது நயன்தாராவை பற்றி மிகவும் பெருமையாக பேசி அதோடு மட்டுமல்லாமல் அவருடன் கட்டி அணைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

samantha 01

அந்த வலியில் இருந்து வெளிவர ஆறு மாதமானது.. சமந்தா ஓபன் டாக்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் பானாக்காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்தார் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சுமார் 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றவர்கள். இவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் விவாகரத்திற்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான இவர் அதிலிருந்து வெளிவர வேண்டும் என தொடர்ந்து தனது கவனத்தை திரைப்படம் நடிப்பதை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடலுக்கு மட்டும் 5 லட்சம் சம்பளமாக பெற்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சகுந்தலம் மற்றும் காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ்சாக இருக்கிறது. இவ்வாறு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் காது குத்திய இடம் எப்படி சரியானது என கேட்டிருந்தார் அதற்கு காதுகுத்து நேரத்தை காட்டி சரியாக ஆறு மாதங்கள் ஆனது, என் செய்வேன் என இருக்கிறது. இன்னும் சரியாக நீண்ட காலம் ஆகும் என கூறியிருந்தார்.

மற்றொருவர் டாட்டூ பற்றி கேட்டதற்கு எப்போதும் டாட்டு போடாதீங்க என்றுதான் அட்வைஸ் கூறுவேன்.. என்று தெரிவித்திருந்தார்.

yenthiran

எந்திரன் ரஜினி போல் மாறிய சிவாங்கி.! கலாய்க்கும் ரசிகர்கள்.!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சிவாங்கி. இவர் தற்போது தமிழ் சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் குரல் மிகவும் காமெடியாக இருந்த நிலையில்  அனைவரும் இவரை கிண்டல் செய்து வந்தார்கள்.

ஆனால் இவர் பாடும் பொழுது இவரின் குரல் மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் இவர் புகழுடன் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது பிறகு சோசியல் மீடியாவில் இவரின் காமெடியான வீடியோக்கள் பிரபலமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 3-யில் பங்கு பெற்று வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சிவாங்கி நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சிட்டி ரோபோ போல் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக இந்த புதிய வேடத்தைப் போட்டு இருப்பார் என்று கூறப்படுகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

abirami

காரில் பழம்பெரும் நடிகர் பேரனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் அபிராமி.! வைரலாகும் வீடியோ.

தற்பொழுது இருக்கும் நடிகர் நடிகைகளை விடவும் அந்த காலத்தில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் அதிக திறமை வாய்ந்தவர்களாக விலகினார்கள். அந்த வகையில் காதல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் ரசிகர்களால் போட்டு பற்று தனது சிறந்த நடிப்பின் மூலம் தற்பொழுது வரையிலும் தனக்கென ஒரு சரித்திரத்தை படைத்தவர் தான் நடிகர் ஜெமினி கணேசன்.

சிறந்த நடிகரான இவரின் பேரன் அபிநய் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் அபிநய் தனது வாழ்வில் நடந்த பல கஷ்டங்களையும் இன்பங்களையும் சொல்லி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமடைந்தவர் தான் அபிராமி.  அபிநய் மற்றும் அபிராமி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் மற்றும் அபிராமி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் நெருங்கிய நண்பர்களாக  இருந்து வருகிறார்கள். இறுதியாக இவர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனலில் கலந்து கொண்டார்கள். பிறகு சமீபத்தில் அபிநய் மற்றும் அபிராமி இருவரும் காரில் செல்கின்றார்கள். அவ்வப்பொழுது  அபிராமி அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு இதற்குமேல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும்  ஆனால் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ruq இந்நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.  எனவே இந்நிகழ்ச்சி இவரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ajith

வெள்ளை தாடியுடன் இணையதளத்தை கலக்கும் நடிகர் அஜித்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக ஓரளவிற்கு கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது ஆனால் இவர் சினிமாவில் அறிமுகமான பொழுது ஏராளமான தோல்விகளை சந்தித்தார்.

ஆனால் சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்து வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில்  அதிக ஆர்வம் இருந்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு பைக் ரேஸ், சிறிய ரக விமானம் ஓட்டுவது, தயாரிப்பது மற்றும் துப்பாக்கி சுடுதல்  என அறிவியல் சார்ந்த மற்றவற்றிலும் மிகவும் ஆர்வமாக இருந்து வருவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

வலிமை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்ப்பற்றி பெரிதாக எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெள்ளை தாடியுடன் கோட் சூட் போட்டுக் கொண்டு மாசாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.