eramana-rojave

தனி குடுத்தனம் வர மறுத்த ஜீவாவிற்கு ட்விஸ்ட் வைத்த பிரியா.. வைரல் ப்ரோமோ

விஜய் டிவி ஒளிபரப்பாக வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான செய்திகள் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் மொத்த குடும்பத்தையும் பிரித்து தவிக்க விட வேண்டும் என்பதற்காக தேவி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அப்படி முதல் கட்டமாக பிரியாவின் பலவீனத்தை பகடைக்காயாக வைத்துக்கொண்டு ஜீவாவை தனி குடுத்தனம் அழைத்து செல்வதற்காக தொடர்ந்து அறிவுரை கூறிய வருகிறார். அதாவது ஜீவா காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இதனைப் பற்றி தெரிந்த பிறகு தற்பொழுது வரையிலும் பிரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சித்தாலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது எனவே வேறு வழியில்லாமல் பிரியா ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். எனவே பிரியா இதனை பற்றி ஜீவாவிடம் கூற முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

மேலும் பிரியா காவியாவிடம் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனி குடுத்தனம் செல்ல இருப்பதாக சொல்ல அவரும் மறுத்து விட இறுதியாக தனது மாமனார் மாமியாரிடம் கூறுகிறார். அவர்களும் தனது மகனை என்னிடமிருந்து பிரித்து விடாத மா என கெஞ்சுகிறார்கள். ஆனால் காதலித்த இருவரும் ஒரே வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கு என்னை மன்னித்து விடுங்கள் என சொல்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனி குடுத்தனம் போக வேண்டும் என பிரியா சொல்ல அதற்கு ஜீவா எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு என்னால் வர முடியாது என சொல்ல அதற்கு அப்ப நான் நானும் சொல்றேன் நீங்க வரலைன்னா நான் தனியா வீடு ஒன்றை எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் என சொல்ல இந்த நேரத்தில் தேவி கைத்தட்டி நீ சரியான முடிவு எடுத்திருக்க நீ எடுத்தது தான் சரி என சொல்ல ஜீவா தேவியை முறைக்கிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

eramana-rojave-2

என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சுடாதமா என கதறும் ஜீவாவின் அம்மா.. என்னால் முடியாது என பிடிவாதமாக இருக்கும் பிரியா.! இந்த வாரம் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியலில் பிரியா ஜீவாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மேலும் பிரியா அமைதியாக இருந்தாலும் ஜீவாவின் அத்தை தேவி அதை இதையும் சொல்லி ஏற்றி விடுகிறார்.

பிறகு ஒரே வீட்டில் காதலித்த இருவரும் இருக்கிறார்கள் எனவே எப்படி ஒருவரை ஒருவர் மறந்துவிட்டு வாழ்வாங்க எனவே ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக் குடுத்தனம் போய்விடு என பிரியாவிடம் தேவி சொல்ல இதனை ஏற்றுக்கொண்ட பிரியா எப்படியாவது ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவிலிருந்து வருகிறார்.

இதனைப் பற்றி ஜீவாவிடம் சொல்ல அதற்கு ஜீவா முடியாது என சொல்லிவிடுகிறார் பிறகு காவியாவிடம் நான் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக் குடுத்தனும் போகலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற என கேட்க இல்லை அத்தை மாமா இத சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க எனவே தனி குடுத்தனம் போக வேண்டாம் என சொல்ல ஜீவாவும் இதேதான் சொல்றாரு  என்ன ஆனாலும் ஜீவாவை தனி குடுத்த அழைத்துக் கொண்டுதான் போவேன் என கூறி விடுகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியா கோவிலுக்கு சென்று விட்டு வர ஜீவாவின் அம்மா அப்பாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் ஜீவாவுடன் தனி குடுத்தனம் போகலாம்னு இருக்கிறேன் மாமா என்று சொல்ல என்னம்மா சொல்ற என கேட்க அதற்கு பிரியா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்ச இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறது எனக்கு நெருடலா இருக்கு அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என சொல்கிறார்.

இதற்கு ஜீவாவின் அம்மா என்னால இதை ஏத்துக்க முடியாது என்னுடைய பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதம்மா என அழுக அதற்கு என்ன மன்னிச்சிடுங்க காவியா இருக்கிற வீட்ல என்னால இருக்க முடியாது என கூறிவிட்டு பிரியா கிளம்பி விடுகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

ethir neechal

உங்களுக்கும் காவியாக்கும் இடையில என்ன ரகசியம் இருக்கு.! இப்ப கூட எனக்கு உண்மையா இல்ல மீண்டும் பிரியப்போகும் ஜீவா மற்றும் பிரியா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ஈரமான ரோஜாவே 3 சீரியலில் ஜீவா காவியா இருவரும் காதலித்த உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததால் தற்பொழுது பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருவது போல பிரியாவும் ஜீவாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்.

எனவே இதனால் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் தேவி செய்திருப்பது மேலும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. அதாவது ஜீவா தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரியா தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார் எனவே ஜீவா பல முயற்சிகளை செய்தும் பிரியா வராத காரணத்தினால் பிறகு காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரியாவை வீட்டிற்கு போகக்கூடாது என வீட்டில் இருப்பவர்கள் கூற ஜீவாவும் எல்லோருக்கும் சான்ஸ் கொடுப்பாங்க அதே போல் தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு பிரியாவும் வீட்டில் இருக்க ஒப்புக்கொள்ள பிறகு ஜிவா சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் காவியா தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருந்து வந்ததால் மருத்துவமனைக்கு செல்ல அங்கு டாக்டர் கர்ப்பமாக இருப்பதாகவும் ட்வின்ஸ் பேபி எனவும் சொல்ல மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் பார்த்திபன் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாத காரணத்தினால் அவர் மாறியவுடன் சொல்லலாம் என காவியா நினைத்த நிலையில் பிறகு யாரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை கூறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து நர்ஸ் சொல்லி விடுகிறார் எனவும் காவியாவிடம் இதனை பற்றி கேட்க அதற்கு ஆமாம் நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் ஆனால் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் நானும் பார்த்திபனம் மகிழ்ச்சியாக வாழவில்லை எனக் கூறி அழுகிறார்.

எனவே இந்த காரணத்தினால் ஜீவாவும் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் தேவி காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து தெரிந்துக் கொண்ட நிலையில் இது ஜீவாவுக்கும் தெரியும் என போட்டு உடைக்கிறார். பார்த்திபன் காவியாவிடமிருந்து சண்டை போட ஜீவாவிடம் பிரியா சண்டை போடுகிறார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க ஜீவா காவியா கன்சீவ்வா இருக்கிறது எனக்கு தெரியும் அதை நீங்க ரெண்டு பேரும் சொல்லாமல் மறைத்ததும் எனக்கு தெரியும் இன்னைக்கு நானும் பார்த்திபனம் நிம்மதி இல்லாம இருக்கோம் உங்களுக்கும் காவியாக்கும் நடுவுல என்னவென்று ரகசியம் இருக்கு சொல்லுங்க என்ன சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

அப்பொழுது ஜீவா காவியா தான் அவ கன்சீவ்வா இருக்கிற விஷயத்த யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னா என சொல்ல அதற்கு பிரியா இப்ப கூட நீங்க எனக் உண்மையா இல்ல காவியாவுக்கு தான் உண்மையா இருக்கீங்க எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

eramanarojave 2

கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்த ஜீவா.! பார்த்தியுடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்த காவியா.. ஈரமான ரோஜாவே இன்றைய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்பொழுது காவியா கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் இதனை பார்த்திபனிடம் சொல்லாமல் மறைக்கிறார். மேலும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்கும் காவியா கர்ப்பமாக இருப்பது தெரியாது. இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வாமிட், மயக்கம் இருந்து வந்ததால் சந்தேகப்பட்டு காவியா மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

எனவே வீட்டிற்கு வந்தவுடன் பார்த்திபனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விரைவில் நீ கலெக்டராக வேண்டும் என கூறுகிறார் அப்ப நான் தான் நம்ப தனித்தனியாக வாழலாம் இவ்வளவுக்கு நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூற காவியா தான் கர்ப்பமாக இருப்பதை கூட உங்களிடம் சொல்ல முடியாத ஒரு பாவி ஆய் விட்டேனே பார்த்தி என வருத்தப்படுகிறார்.

இவ்வாறு காவியா பிரகனண்ட்டாக இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் ஜீவாவுக்கு மருத்துவரின் மூலம் தெரிய வருகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்ல காவியா கன்சிவாக இருக்காங்க உங்க பிரதர் அப்பாவாக போறாரு எனக் கூற மிகவும் மகிழ்ச்சியுடன் ஜீவா வீட்டிற்கு வருகிறார்.

இந்த நேரத்தில் காவியா சாமி கும்பிட்டு விட்டு தன்னுடைய நெற்றியிலும் தலியிலும் குங்குமத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஜீவா காவியாவிற்கு கங்ராஸ் காவியா எனக் கூறிவிட்டு அம்மா, பார்த்தி என கூப்பிடுகிறார். யாரும் இங்கே இல்லை அனைவரும் கோயிலுக்கு போய் இருக்காங்க எனக்கு கூற அதற்கு ஜீவா இப்பொழுது தான் நான் ஹாஸ்பிடல்ல இருந்து வரேன் இந்த குடும்பத்துக்கு நீ ஒன்னு இல்ல ரெண்டு வாரிச தர போற எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி ஆகப் போறாங்க என மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்

இந்த விஷயத்தை பார்த்தி கிட்ட சொல்லிட்டியா என காவியாவிடம் கேட்க அப்பொழுது இந்த விஷயத்தை இப்போதைக்கு யாருகிட்டயும் சொல்றதா இல்ல பார்த்தி என் கூட சந்தோஷமா வாழல ஜீவா எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.